Latest Updates
-
கர்நாடகா ஸ்டைல் புளி சாதம் ரெசிபி, ட்ரை பண்ணி பாருங்க! -
தேங்காய் சட்னி அடிக்கடி சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் -
செவ்வாய்-குருபகவான் உருவாக்கும் கேந்திர யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
எடையை குறைக்க உதவும் தினை அவல் கஞ்சி - எப்படி செய்றது-ன்னு பாத்து தினமும் குடிங்க! -
இன்றைய ராசிபலன் 02 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு வெற்றி தேடிவருமாம் -
தமிழ் புத்தாண்டில் உருவாகும் குபேர யோகம்: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும்! -
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கணுமா? அப்ப அரிசி கழுவிய நீரை இப்படி யூஸ் பண்ணுங்க! -
18 ஆண்டுகள் கழித்து மகரம் செல்லும் ராகு: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுது! -
செஃப் ஷான்ஜித் ஸ்பெஷல் தக்காளி தம்புலியை எப்படி செய்யணும் தெரியுமா? -
கண் ஆரோக்கியத்திற்கான சிறந்த தென்னிந்திய உணவுகளை பட்டியலிட்ட டாக்டர் ஆதித்ரேய வர்மன்!
தமிழ்நாடு ஏன் 234 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது தெரியுமா?
Tamil Nadu Election 2026: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளும் தங்களின் சூறாவளி பிரச்சாரத்தை தொடங்கியிருப்பதால் தமிழ்நாட்டின் தேர்தல் காலம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மே 04 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது 234 தொகுதிகள் உள்ளது. ஆனால் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாடு ஏன் 234 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? தமிழ்நாடு சட்டமன்றத்தின் மொத்த இடங்களின் எண்ணிக்கை 234 என எப்போது, எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? பலரும் சிந்திக்காத இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தொகுதிகளின் எண்ணிக்கை யாரால் நிர்ணயிக்கப்பட்டது?
1961-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிந்தைய காலகட்டத்தில், மக்களவை மற்றும் சட்டமன்ற இடங்களை மறுவரையறை செய்யும் பணியை மேற்கொண்ட 'எல்லை நிர்ணய ஆணையமே' (Delimitation Commission) இந்த எண்ணிக்கையை முடிவு செய்தது. அரசியலமைப்பின் 170-வது பிரிவின் கீழும், 1962-ஆம் ஆண்டு எல்லை நிர்ணய ஆணையச் சட்டத்தின் பிரிவு 8(b)-இன் கீழும், ஒரு மாநில சட்டமன்றத்தின் மொத்த இடங்களின் எண்ணிக்கை என்பது, அந்த மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள மக்களவை இடங்களின் எண்ணிக்கையின் ஒரு முழு எண் மடங்காகவே (integral multiple) இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த காலத்தில் 14 மாநிலங்கள் இணைந்து மொத்தம் 481 நாடாளுமன்ற இடங்களைக் கொண்டிருந்தன. சென்னை மாகாணம் 41 இடங்களைக் கொண்டிருந்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் ஆறு இடங்களையும், நாகா ஹில்ஸ்-துயென்சாங் பகுதி ஒரு இடத்தையும், வடகிழக்கு எல்லைப் பகுதி ஒரு இடத்தையும், ஒன்றியப் பகுதிகள் 18 இடங்களையும் கொண்டிருந்தன, இதன் மூலம் பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 507-ஆகி மாறியது.
பாராளுமன்ற தொகுதிகளின் பங்கீடு
1961 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் வெளிப்பட்ட மக்கள்தொகை மாற்றங்களை ஆய்வு செய்த பிறகு, இந்தியாவிலிருந்த 481 இடங்களைத் தக்கவைத்துக் கொள்வது சில பெரிய மாநிலங்களைச் சமமற்ற முறையில் பாதிக்கும் என்று ஆணையம் முடிவு செய்தது. இதனால் உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மெட்ராஸ் ஆகிய மாநிலங்கள் தலா மூன்று இடங்களையும், பீகார் ஒரு இடத்தையும் இழந்திருக்கும்.
இந்த சிக்கலை சமாளிக்க, ஆணையம் மொத்த எண்ணிக்கையை 481-லிருந்து 490-ஆக உயர்த்தியது. அப்போதும், உத்தரப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் சென்னை ஆகிய மாநிலங்கள் தலா இரண்டு இடங்களை இழந்தன. அதேசமயம் பீகார் மாநிலம் எந்த தொகுதியையும் இழக்கவில்லை. இந்த எண்ணிக்கையை அரசியலமைப்பு நிர்ணயித்த உச்ச வரம்பான 493 வரை உயர்த்தினாலும், அம்மாநிலங்கள் சந்தித்த இட இழப்புகளில் எவ்வித மாற்றமும் ஏற்பட்டிருக்காது என்று ஆணையம் பதிவு செய்தது.
தமிழ்நாடு தொகுதி பங்கீடு
ஆணையத்தின் ஆணை எண் 1-இன் படி, சென்னை மாநிலத்தின் மக்களவை இடங்களின் எண்ணிக்கை 41-லிருந்து 39-ஆகக் குறைக்கப்பட்டது. அடுத்த கட்டமாக, சென்னை மாநிலத்தின் சட்டமன்ற மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அந்த காலகட்டத்தில், தமிழ்நாடு 'ஐந்தின் மடங்கு' எனும் வழிமுறையைப் பின்பற்றி வந்தது, அதாவது, ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கு இணையானதாகக் கருதப்பட்டது. இதனால் 39 × 5 = 195 சட்டமன்ற தொகுதிகள் கிடைக்கும் சூழல் உருவானது.
அந்த காலகட்டத்தில் சென்னை சட்டமன்றம் 206 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. எனவே ஆணையத்தின் ஆணையை பின்பற்றினால், சட்டமன்றத்தின் இடங்களின் எண்ணிக்கை 195-ஆகக் குறைந்திருக்கும், இது மாநிலத்தின் பிரதிநித்துவத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
எனவே அனைத்து மாநிலங்களிலும் இந்த பெருக்கும் முறையை திருத்தியமைக்க வேண்டிய தேவை உள்ளதா என்பதை ஆணையம் ஆராய்ந்தது. மக்கள் தொகை குறையும்போது இப்பெருக்க எண்கள் பொதுவாக அதிகரிக்கும் போக்கு காணப்பட்டாலும், இந்த முறை அனைத்து இடங்களிலும் ஒரே சீராகப் பின்பற்றப்படவில்லை என்பதையும் அந்த ஆணையம் கவனித்தது. எனவே உரிய பரிசீலனைக்குப் பிறகு, சென்னை மாநிலத்தைத் தவிர்த்து, மற்ற அனைத்து மாநிலங்களிலும் தற்போதுள்ள பெருக்க எண்களையே தக்கவைத்துக்கொள்ள ஆணையம் முடிவெடுத்தது.
ஆணையத்தின் முடிவு
ஆகஸ்ட் 24, 1963 அன்று வெளியிட்ட தனது ஆணையில், ஆணையம் பின்வருமாறு குறிப்பிட்டது: "இந்த மாநிலத்தின் சட்டமன்றம் தற்போது 206 தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களைக் கொண்டுள்ளது. எதிர்காலத்தில் மக்களவையில் சென்னை மாநிலத்திற்கான ஒதுக்கீடு இரண்டாகக் குறையவுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, அதன் பெருக்க எண்ணை 5-லிருந்து 6-ஆக உயர்த்துவதும், அதன் சட்டமன்றத்திற்கு 234 இடங்களை ஒதுக்குவதும் பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம்." என்று ஆணையம் கருதியது. இதன் மூலம் சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39 × 6 = 234 ஆக மாறியது.
பிற மாநிலங்களின் நிலை என்ன?
தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் இத்தகைய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. மேற்கு வங்கம் தனது பெருக்க எண்ணான 7-யை தக்கவைத்துக்கொண்டது; இதன் விளைவாக அம்மாநிலத்திற்கு 280 சட்டமன்ற இடங்கள் கிடைத்தன. அப்போது 19 மக்களவை இடங்களைக் கொண்டிருந்த கேரள மாநிலமும், தனது பெருக்க எண்ணான 7-யை தக்கவைத்துக்கொண்டது, இதன் மூலம் அதற்கு 133 இடங்கள் கிடைத்தன. அசாம் தனது பெருக்க எண்ணான 9-யை தக்கவைத்துக்கொண்டது; இதன் விளைவாக 126 இடங்கள் கிடைத்தன. உத்தரப் பிரதேசம் தனது பெருக்க எண்ணான 5-யை தொடர்ந்து கடைப்பிடித்தது, இதன் மூலம் அதற்கு 425 சட்டமன்ற தொகுதிகள் கிடைத்தன.
அறுபது ஆண்டுகளுக்கும் பிறகு 234 இடங்களைக் கொண்ட அந்தக் கட்டமைப்பு எவ்வித மாற்றமுமின்றித் தொடர்கிறது. தமிழ்நாட்டின் பெரும்பான்மைக்கான இலக்கமான 118, கூட்டணிக் கணக்கீடுகள், தொகுதி அளவுகள் மற்றும் தேர்தல் உத்திகள் ஆகிய அனைத்தும், 1963-ஆம் ஆண்டின் அத்தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட கட்டமைப்பிற்குள்ளேயே இன்றும் இயங்கி வருகின்றன.



Click it and Unblock the Notifications












