முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கணுமா? அப்ப அரிசி கழுவிய நீரை இப்படி யூஸ் பண்ணுங்க!

Skin Care Tips In Tamil: தற்போது முக அழகை கெடுக்கும் வகையில் ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதில் ஒன்று தான் கரும்புள்ளிகள். இந்த கரும்புள்ளிகளானது சுற்றுச்சூழல் மாசுபாடு, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், போதுமான சரும பராமரிப்பு இல்லாமை போன்றவற்றால் வரக்கூடியவை.

இந்த கரும்புள்ளிகளை போக்குவதற்கு மார்கெட்டுகளில் ஏராளமான பொருட்கள் விற்கப்பட்டு வருகின்றன. ஆனால் இவை அனைத்திலும் கெமிக்கல்கள் உள்ளன. இந்த கெமிக்கல்கள் அனைவருக்குமே சிறந்த பலனை தந்துவிடாது. எனவே எடுத்தவுடனேயே சரும பிரச்சனைகளுக்கு கெமிக்கல் கலந்த பொருட்களால் பராமரிப்பு கொடுப்பதை விட, இயற்கை பொருட்களைக் கொண்டு பராமரிப்பு கொடுப்பதே சிறந்தது.

Skin Care Tips How to Prepare Rice Water Toner To Remove Dark Spots

அப்படி கரும்புள்ளிகளைப் போக்க உதவும் ஒரு அற்புதமான பொருள் தான் அரிசி நீர். அதுவும் இந்த அரிசி நீரைக் கொண்டு டோனர் தயாரித்து தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது, அது கரும்புள்ளிகளைப் போக்க உதவுவது மட்டுமின்றி, சருமத்தை மென்மையாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. இப்போது கரும்புள்ளிகளைப் போக்க உதவும் அரிசி நீர் டோனரை எப்படி தயாரிப்பது என்பது குறித்தும், அதைப் பயன்படுத்துவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதையும் காண்போம்.

வழி #1 : புளிக்க வைத்த அரிசி நீர்

* இதற்கு 1/2 கப் அரிசியை நன்கு 2 முறை கழுவி, பின் அந்த அரிசியில் 2 கப் சுத்தமான நீரை ஊற்றி, மூடி வைத்து 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் 30 நிமிடம் கழித்து ஊற வைத்த அரிசியை கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
* அதன் பின் அந்த நீரை வடிகட்டி, ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, லேசாக மூடி வைத்து, 24 முதல் 48 மணிநேரம் நன்கு புளிக்க வைக்க வேண்டும்.
* 48 மணிநேரம் கழித்து, அந்நீரில் இருந்து ஒரு புளித்த நீர் வாசனை வரும். பின்பு அதை ஃப்ரிட்ஜ்ஜில் வைக்க வேண்டும்.
* இந்த டோனரை 1 வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

Skin Care Tips How to Prepare Rice Water Toner To Remove Dark Spots

வழி #2: பிரஷ்ஷான அரிசி நீர்

* இதற்கு 1 கப் அரிசியை நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு சாதத்தை வேக வைக்க வேண்டும்.
* சாதம் வெந்ததும், அந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு வடிகட்டிய அரிசி நீரை நன்கு குளிர வைத்து, ஒரு பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜ்ஜில் வைத்துக் கொண்டால், 4-5 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம்.

அரிசி நீர் டோனரை எப்படி பயன்படுத்துவது?

* இந்த டோனரை பஞ்சுருண்டையில் நனைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி, 2 நிமிடம் காய வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரில் நனைத்த பஞ்சுருண்டையால் துடைத்து எடுக்க வேண்டும்.
* இப்படி தினமும் 2-3 முறை பயன்படுத்தி வர, ஒரு மாற்றத்தை விரைவில் காணலாம்.

Skin Care Tips How to Prepare Rice Water Toner To Remove Dark Spots

அரிசி நீர் டோனரைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்:

* அரிசி நீரில் ஃபெருலிக் அமிலம் மற்றும் அல்லன்டோயின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை ப்ரீ ராடிக்கல்களால் சரும செல்களில் ஏற்படும் சேதத்தை பாதுகாக்கின்றன. இதன் மூலம் சருமத்தில் கரும்புள்ளிகள் வருவது தடுக்கப்படும்.

* அரிசி நீரில் இனோசிட்டால் உள்ளது. இது சரும செல்களை சரிசெய்யவும், சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், கரும்புள்ளிகளைப் போக்கவும் உதவுகிறது.

* அரிசி நீரானது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை, அழுக்குகள் போன்றவற்றை திறம்பட வெளியேற்றி, சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

* அரிசி நீரை சருமத்தில் பயன்படுத்தும் போது, திறந்த சருமத்துளைகள் இறுக்கமடைந்து, சருமத்தின் அமைப்பை மேம்படுத்தி, சரும அழகை மேம்படுத்த உதவுகிறது.

Story first published: Wednesday, April 1, 2026, 21:09 [IST]
Desktop Bottom Promotion