Just In
- 7 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 8 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 10 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தினமும் காலையில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
கற்றாழை செடி ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட மிகவும் அற்புதமான ஓர் செடி. இந்த செடியின் இலைகளில் இருந்து வெளிவரும் ஜெல் பல்வேறு சரும பிரச்சனைகளை சரிசெய்யப் பயன்படுத்தப்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும். ஏனெனில் இந்த ஜெல்லில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே இந்த ஜெல்லைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தால், சரும அழகு பாதுகாக்கப்படுவதோடு, அதிகரிக்கவும் செய்கிறது.
வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
அத்தகைய கற்றாழை ஜெல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. அதற்கு இந்த கற்றாழை ஜெல்லை ஜூஸ் போட்டு குடித்து வர வேண்டும். மேலும் பல நாட்டு மருந்து கடைகளிலும் கற்றாழை ஜூஸ் விற்கப்படுகிறது. எனவே அவற்றை வாங்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், தற்போது மக்கள் அதிகம் சந்திக்கும் பல பிரச்சனைகள் தடுக்கப்படும்.
வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
சரி, இப்போது தினமும் காலையில் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸைக் குடித்து வருவதால் பெறும் நன்மைகள் குறித்து காண்போம்.
மலச்சிக்கல்
கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால் உடனே விலகும். மேலும் கற்றாழை ஜூஸ் மலக்குடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
செரிமான கோளாறுகள்
உங்களுக்கு செரிமான கோளாறுகள் அடிக்கடி ஏற்படுமாயின், தினமும் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் செரிமான பிரச்சனைகள் நீங்குவதோடு, வயிற்று வலி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுவதும் விலகும்.
இரத்த சர்க்கரை அளவு
நீரிழிவு நோயாளிகள் கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வருவது நல்லது. ஏனெனில் கற்றாழை ஜூஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராகப் பராமரிக்க உதவும்.
உடல் சுத்தமாகும்
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், தினமும் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் கற்றாழை ஜூஸ் குடித்து வாருங்கள். இதனால் கற்றாழை ஜூஸில் உள்ள சேர்மங்கள், உடலின் மூலை முடுக்குகளில் உள்ள அழுக்குகள் மற்றும் டாக்ஸின்களை முழுமையாக வெளியேற்றிவிடும்.
எடை குறையும்
எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு, கற்றாழை ஜூஸ் மிகவும் அற்புதமான ஓர் பானம். உடல் பருமனால் கஷ்டப்படுபவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
இரத்த ஓட்டம்
தற்போது பலருக்கும் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதில்லை. இதனால் தான் அடிக்கடி நோயால் பாதிக்கப்படுகின்றனர். உங்களுக்கு அடிக்கடி உடலில் ஏதேனும் பிரச்சனை ஏற்படுமாயின், கற்றாழை ஜூஸை தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வாருங்கள். இதன் மூலம் நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
திசு பாதிப்பு
தினமும் வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், உடலினுள் உள்ள பாதிக்கப்பட்ட திசுக்கள் புதுப்பிக்கப்படும்.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், கற்றாழை ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலின் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளலாம்.
நோயெதிர்ப்பு சக்தி
கற்றாழை ஜூஸ் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலிமையடையச் செய்யும். எனவே உங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையுடன் வைத்துக் கொள்ள நினைத்தால், கற்றாழை ஜூஸை காலையில் குடித்து வாருங்கள்.
புற்றுநோய்
கற்றாழை ஜூஸ் உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே உங்களுக்கு புற்றுநோய் தாக்கக்கூடாது என்று நினைத்தால், இந்த ஜூஸை தினமும் குடியுங்கள்.