Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
4 முட்டை இருந்தா இந்த செட்டிநாடு ஸ்டைல் குருமாவை டக்குனு பண்ணுங்க... தோசை, சப்பாத்திக்கு செமையா இருக்கும்...!
Chettinad Muttai Kurma Recipe in Tamil: இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய திட்டமிட்டிருக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடிஷ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டைக் குழம்பை செய்து கொடுங்கள். சிக்கன் அல்லது மட்டன் வாங்க முடியாத போது இந்த ஸ்டைலில் முட்டை கிரேவியை செய்தால் அவற்றை விட இதுவே பெட்டராக இருக்கும். இந்த முட்டை கிரேவியை செய்வது மிகவும் சுலபம்.
இந்த செட்டிநாடு முட்டைக் குருமா தோசை, சப்பாத்திக்கு மட்டுமின்றி
சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். இந்த சூப்பரான
முட்டைக் குழம்பை செய்வதற்கு ஸ்பெஷலான பொருட்கள் எதுவும் தேவையில்லை,
ஆனால் இதற்கென ஒரு தனித்துவமான மசாலாவை அரைக்க வேண்டும். இந்த
குழம்பின் தனித்துவமான சுவைக்கு காரணமே இந்த மசாலாதான்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்பெஷல் முட்டைக் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காரசாரமான செட்டிநாடு முட்டைக்குருமாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள் :
- முட்டை - 4
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 2 (மெல்லியதாக நறுக்கியது)
- தக்காளி - 2 (அரைத்தது)
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கொத்தமல்லி - 2 ஸ்பூன்
வறுத்து அரைக்க:
- எண்ணெய் - 1 ஸ்பூன்
- தனியா - 2 ஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- வர மிளகாய் - 4
- சீரகம் - 1 ஸ்பூன்
- சோம்பு - 1 ஸ்பூன்
- இலவங்கப்பட்டை - 1 சிறிய துண்டு
செய்முறை:
- முதலில் முட்டைகளை நன்றாக வேகவைத்துக்கொள்ளவும். அவற்றின் ஓடுகளை நீக்கிவிட்டு, முட்டைகளை கீறி தனியாக எடுத்து வைக்கவும்.
- மசாலா வறுத்து அரைக்க, ஒரு கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் முழு மசாலாப் பொருட்களைச் சேர்த்து, அவை நன்கு வறுபட்டு வாசனை வரும் வரை, மிதமான தீயில் சுமார் 3 நிமிடங்கள் வறுக்கவும்.
- அவற்றை ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றி, சிறிது தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
- பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கவும். அதில் கடுகு, மஞ்சள் தூள் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- கடுகு பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயுடன் சிறிது உப்பையும் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்கவும். பின்னர் கடாயை ஒரு மூடியால் மூடி, வெங்காயம் நன்கு குலையும் வரை வேக வைக்கவும். வெங்காயம் எவ்வளவு வதங்குகிறதோ அவ்வளவு சுவையாக இருக்கும்.
- பின்னர் இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து, எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- இப்போது அரைத்த தக்காளியைச் சேர்த்து, அது வேகும் வரை மேலும் 5 நிமிடங்களுக்குச் சமைக்கவும்.
- பின்னர் அரைத்த மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் நன்கு கொதிக்க விடவும்.
- எண்ணெய் பிரிந்து நன்கு கொதிக்கும் வரை மூடி வைத்து சமைக்கவும். நன்கு கொதித்ததும் கீறி வைத்த முட்டையை போட்டு 2 நிமிடம் மூடி வைக்கவும்,
- இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைத்தால் சுவையான செட்டிநாடு முட்டைக் குருமா ரெடி!
- இதை சூடான சாதம் அல்லது தோசை அல்லது சப்பாத்தியுடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications