Just In
- 15 min ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- 1 hr ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- 1 hr ago வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- 2 hrs ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
Don't Miss
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
வீட்டில் ஜூஸ் தயாரிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்கள்...!
பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் ஜூஸ் மிக்ஸரை வாங்கி பயன்படுத்தவே விரும்புகின்றனர். ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது தான். ஆனால், அந்த ஜூஸை வீட்டில் போடும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன.
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே மருத்துவர்களின் ஒருமித்த அறிவுரையாக உள்ளது. இருப்பினும். பெரும்பாலானோர் பழங்களை அப்படியே சாப்பிடவதை விட, அதனை ஜூஸ் போட்டு குடிப்பதையே விரும்புகின்றனர். பழங்களில் அதிக அளவில் நார்ச்சத்துகளும், ஊட்டச்சத்துகளும் நிரம்பியுள்ளன. அவை சுலபமாக உடலில் இரத்த நாளங்களால் உறிஞ்சப்படுகின்றன. பழச்சாறு குடிப்பது உடலுக்கு நல்லது என்றாலும், அதனை கடைகளில் வாங்கி குடிப்பதை காட்டிலும் வீட்டில் தயாரிக்கப்படும் ஜூஸை குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்பதே பலரது கருத்தாக உள்ளது.
அதிலும், பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் ஜூஸ் மிக்ஸரை வாங்கி பயன்படுத்தவே விரும்புகின்றனர். ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது தான். ஆனால், அந்த ஜூஸை வீட்டில் போடும் போது கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் உள்ளன. இதுபோன்ற விஷயங்களை புறக்கணித்தால் ஜூஸை அனுபவித்து குடிக்கவே முடியாது. இது சுவையை கெடுப்பது மட்டுமின்றி, பழச்சாற்றின் நன்மைகளையும் குறைத்துவிடுகிறது. ஒருவேளை நீங்கள், தினமும் காலை வீட்டில் பழச்சாற்றினை தயாரித்து குடிப்பவராக இருந்தால் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷயங்களை கவனித்து செயல்பட வேண்டும்.
MOST READ: சனி பகவான் அருளால் அக்டோபர் மாசம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமான மாசமா இருக்கப் போகுது...
மிக்ஸர் சூடாக இருக்கக்கூடாது
நீங்கள் வீட்டில் ஜூஸ் போட ஜூஸர் மிக்ஸர் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அந்த மிக்ஸர் கண்டிப்பாக சூடாக இருக்கக்கூடாது. அதனை உறுதிப்படுத்திய பின்னரே ஜூஸ் போட வேண்டும். ஜூஸரில் இருக்கும் அதிகப்படியான வெப்பம் பழச்சாற்றின் ஆரோக்கிய நன்மைகளை குறைத்து, பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள சத்துக்களை அழிக்கலாம். எனவே, இனி ஜூஸ் போடும் இதை நினைவில் கொள்ளுங்கள்.
அதிக வெப்பம், அதிக குளிர் வேண்டாம்
வீட்டிலேயே ப்ரஷ் ஜூஸ் போட்டு குடிக்கும் போது மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது வெப்பநிலை மட்டுமே. பெரும்பாலானோர், ப்ரஷ் ஜூஸில் ஐஸ் போட்டு குடிப்பதையே விரும்புவர். ஆனால், அது மிகவும் தவறான விஷயம். எப்போதுமே, ஜூஸை சாதாரண வெப்பநிலையில் தான் குடிக்க வேண்டும். அது மிகவும் குளிராகவோ அல்லது சூடாகவோ இருக்கவே கூடாது.
ப்ரிட்ஜில் வைக்க கூடாது
வீட்டில் தயாரித்த ப்ரஷ் ஜூஸை ஒதுபோதும் ப்ரிட்ஜில் வைக்கவே கூடாது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். ப்ரஷாக அரைத்த ஜூஸை ப்ரிட்ஜில் வைப்பதன் மூலம் பழச்சாற்றில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவை குறைத்துவிடும்.
சர்க்கரை போடவே கூடாது
அனைவருக்கும் ஜூஸ் என்றாலே இனிப்பாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவர். ஆனால், பொதுவாக ஜூஸ் போடும் போது அதில் சர்க்கரை சேர்க்கக் கூடாது. பழங்களில் ஏற்கனவே போதுமான அளவு இயற்கை சர்க்கரை இருக்கும். எனவே, இனிமேல் ஜூஸ் போடும் போது சர்க்கரை மட்டும் போட்டுவிடாதீர்கள். இல்லையெனில், உங்கள் சர்க்கரை அளவு அதிகரித்துவிடலாம். பழங்களில் இயற்கையாகவே இனிப்பு சுவை இருப்பதால் சர்க்கரை போட தேவையே கிடையாது.
காய்கறி ஜூஸில் உப்பு சேர்க்கக்கூடாது
எப்போதும் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பழச்சாற்றுடன், காய்கறி சாற்றையும் குடிக்கலாம். அப்படி காய்கறி ஜூஸ் குடிப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் அதில் உப்பு அல்லது சுவையை அதிகரிக்க வேறு எந்த மசாலாவையும் சேர்க்கக்கூடாது.
விதைகளை அகற்றிடவும்
ஜூஸ் போடுவதற்கு முன்பு பழத்தில் உள்ள விதைகளை அகற்றிட வேண்டும். விதையுடன் சேர்த்து ஜூஸ் போடும் போது அதன் சுவையை மாற்றிடும். அதுமட்டுமல்லாது அதன் ஆரோக்கிய பயன்களும் குறைந்துவிடும். எனவே, இனி சோம்பேறித்தனம் பார்க்காமல் விதையை எடுத்துவிட்டு ஜூஸ் போட்டு குடிங்கள். அது தான், உடலுக்கு மிகவும் நல்லது.