Latest Updates
-
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்!
தலைவலியை போக்க உதவும் இந்திய பாரம்பரிய எளிய வீட்டு மருத்துவ குறிப்புகள்!!
கணினியின் முன் அமர்ந்து பணிபுரியும் அனைவருக்கும் ஊதியத்தோடு சேர்த்து அன்பளிப்பாக வழங்கப்படும் பரிசு தான் இந்த தலைவலி. தலைவலி மட்டுமின்றி நன்கு உயிரைக் கொடுத்து உழைப்பவர்களுக்கு கண் வலி, கண் பார்வை குறைபாடும் அப்ரைசலாக தரப்படுகிறது. இதில், வேலை செய்து அலுப்பாக இருக்கிறது, அழுத்தமாக இருக்கிறது என்று வீடு திரும்பும் போது ஹெட்செட்டில் பாடல்கள் கேட்டுக் கொண்டே செல்கிறோம்.
உணவுப் பழக்கத்தினால் ஏற்படும் ஒற்றைத் தலைவலி!!!
இவை அனைத்துமே தலைவலியை அதிகப்படுத்தும் என்பதை தெரிந்தும் பலர் தொடர்ச்சியாக செய்வது தான் கொடுமையே. இப்போதையே காலகட்டத்தில் அவசர உதவிக்கு என்பது போல அவரவர் தலைவலி மாத்திரைகளை தங்கள் பைகளில் வைத்தே திரிகிறார்கள். தலைவலிக்கு உடனடி தீர்வாக மருந்து மாத்திரைகள் பயன்படுத்துவது தவறான அணுகுமுறை.
ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் 7 ஆச்சரியமான விஷயங்கள்!!!
எளிதாக தலைவலிக்கு தீர்வுக் காண நமது இந்திய பாரம்பரிய வீட்டு மருத்துவ முறைகளை பயன்படுத்துங்கள்....

கிரீன் டீ
தலைவலியில் இருந்து நிவாரணம் பெற கிரீன் டீ ஒரு சிறந்த பானமாக இருக்கிறது. இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் விரைவாக வலியைப்போக்க உதவுகிறது. இதில் சர்க்கரை பயன்படுத்துவதை தவிர்த்து, தேனை பயன்படுத்துவது நல்லது.

மசாலா டீ
ஒரு கப் டீயில் கொஞ்சம் இலவங்கப் பட்டை தூள், தேன், இஞ்சி போன்றவற்றை சேர்ந்து பருக வேண்டும். இது தலைவலியில் இருந்து வேகமாக விடுபட உதவுகிறது. இஞ்சி மற்றும் இலவங்கப் பட்டை சிறந்த வலி நிவாரணியாக திகழ்கிறது.

தண்ணீர்
மிதமான சூட்டில் நீரை பருகுவது. தலைவலிக்கான மிகவும் எளிதான வீட்டு நிவாரணம் இது தான் .கொஞ்சம், கொஞ்சமாக நீரை பருக வேண்டும். இது செரிமானத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. தலைவலியில் இருக்கும் போது குளிர்ந்த நீரை பருக வேண்டாம் என்று அறிவுறுத்தப் படுகிறது.

நீரில் கால்களை ஊற வைப்பது
நீரில் கால்களை ஊற வைப்பதால் தலைவலிக்கு சிறந்த முறையில் தீர்வுக் காண முடியும் என்று கூறப்படுகிறது. இதில் கொஞ்சம் கடுகு தூள் சேர்க்க வேண்டும். 10 - 15 நிமிடங்கள் ஊற வைப்பது போதுமானது. இதனால் இரத்தநாளங்களில் ஏற்படும் அழுத்தம் குறைத்து, தலைவலிக்கு தீர்வுக் காண முடியும்.

காபி
தலைவலி ஏற்பட்டால் பலரும் செய்யும் ஓர் செயல் தான் இது, காபி பருகுவது. இது ஓர் நல்ல தீர்வு தான் ஆயினும் அதிகளவு காபி குடிப்பது உங்கள் உடல் நலத்தை பாதிப்படைய வைக்கிறது. எனவே, அதிகம் காபி பருக வேண்டாம்.

யூகலிப்டஸ் எண்ணெய்
யூகலிப்டஸ் எண்ணெய், தலைவலிக்கு தீர்வுக் காண ஓர் தலைசிறந்த பொருளாக விளங்குகிறது. யூகலிப்டஸ் தைலம் காலம், காலமாக தலைவலிக்கு நல்ல தீர்வளித்து வருகிறது. ஆனால், இன்று நாம் பெரும்பாலும் மாத்திரைகள் உட்கொண்டு வருகிறோம்.

ஆப்பிள் சாறு வினிகர்
தலைவலிக்கு மற்றுமொரு சிறந்த வீட்டு நிவாரணமாக திகழ்கிறது ஆப்பிள் சாறு வினிகர். ஒரே டேபிள்ஸ்பூன் வினிகரை நீரில் கலந்து பருகினால் தலைவலி உடனே குறையும் என்று கூறப்படுகிறது. இதை குடித்த 15 நிமிடங்கள் வரை வேறு எந்த உணவும் உட்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











