Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
தப்பித்தவறியும் இந்த காய்களின் மற்ற பகுதிகளை சாப்பிட்றாதீங்க.. இல்ல அது உயிருக்கே உலை வெச்சிடும்...
அனைத்து காய்கறிகளையும் முழுவதுமாக சாப்பிடலாம் என்று நினைக்காதீர்கள். ஏனென்றால், சில காய்களை அப்படி சாப்பிடவே கூடாது. சில காய்களிகளின் வேர் மற்றும் தண்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும்.
உணவுப் பொருட்களை எப்போதும் வீணாக்கக் கூடாது. அதிலும், சமைக்கும் காய்கறி முதல் பழங்கள் வரை அதன் எந்த பாகங்களையும் வீணாக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும், கழிவுகள் சேராமல் தடுப்பதற்கும் மிகச் சிறந்த வழி ஒன்று உள்ளது. அது தான், வேர் முதல் தண்டு வரை அனைத்தையும் சாப்பிடுவது. ஆனால் பெரும்பாலானவர்கள் அவற்றையெல்லாம் சாப்பிட விரும்பமாட்டார்கள். உதாரணத்திற்கு கீரை, பீட்ரூட், கேரட், முள்ளங்கி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அவை அனைத்தும் ஏராளமான சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளன.
இது மாதிரியாக அனைத்து காய்கறிகளையும் முழுவதுமாக சாப்பிடலாம் என்று கூறவில்லை. ஏனென்றால், சில காய்களை அப்படி சாப்பிடவே கூடாது. சில காய்களிகளின் வேர் மற்றும் தண்டு உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும். அதிலும் சில ஆபத்தானவை கூட. இப்போது அப்படிப்பட்ட சிலவற்றை தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

அஸ்பாரகஸ் பெர்ரி
இந்த பழுத்த பெர்ரிக்கள் பெரும்பாலும் புதர்களில் காணப்படும் ( குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்). இந்த பெர்ரி விஷம் என்று உங்களுக்குத் தெரியுமா? உண்மை தான். இவற்றில் சப்போஜெனின்கள் உள்ளன. அவை ஒருவரை நோய்வாய்ப்படுத்தக்கூடும். இந்த சப்போஜெனின்கள் மனிதர்கள் உடலில் நச்சுத்தன்மையாக செயல்படுவதோடு, விலங்குகளுக்கு விஷமாக செயல்படுகின்றன. இந்த பெர்ரிகளை நீங்கள் சாப்பிட்டால், உங்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். தாவரவியல் ரீதியாகப் பார்க்கும்போது, அஸ்பாரகஸ் "பெர்ரி" என்பது பெர்ரி வகையே அல்ல! அதற்கு பதிலாக, அவை விதை காய்களாகும். ஒவ்வொன்றும் 3 அல்லது 4 விதைகளை கொண்டிருக்கின்றன. அதுதான் (அஸ்பாரகஸ்) தானாக பரவி வளர செய்கிறது. அந்த சிவப்பு பெர்ரிகளை எடுத்து வெயிலில் இயற்கையாக உலர வைக்கவும்.

பச்சை உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கானது இரவில் மலரும் செடி குடும்பத்தை சேர்ந்தது. இந்த குடும்பத்தின் தாவரங்கள், சோலனைன் எனும் நச்சு கலவையை தங்களுக்குள் சேமித்து வைக்கின்றன. இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டவை. உருளைக்கிழங்கு சரியான முறையில் சேமிக்கப்படாதபோது அவை பெரும்பாலும் பச்சை நிறத்தில் இருக்கும். மேலும் அவை வெளிச்சத்தில் வைத்திருக்கும் போதும் இப்படியாகும். இது குளோரோபில் உருவாவதால் ஏற்படுகிறது. இருப்பினும், பச்சை நிறமானது (இது அனைத்து பச்சை தாவரங்களிலும் காணப்படுகின்றன); கிளைகோல்கலாய்டுகள் எனப்படும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சில நச்சுக்களின் அளவு அதிகரிக்கப்படலாம் என்பதற்கான பயனுள்ள அறிகுறியாகும்.

தக்காளியின் இலைகள்
தக்காளியும், உருளைக்கிழங்கின் குடும்பத்தைச் சேர்ந்தது தான். எனவே, அவை ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக கருதப்படுவதில்லை. ஐரோப்பாவில், 200 ஆண்டுகளுக்கும் மேலாக இதைப் பயன்படுத்த மக்கள் பயந்து வருகின்றனர். தக்காளி இலைகளில் சோலனைன் மற்றும் டொமேடைன் ஆகியவை உள்ளன. இது வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு இலைகளும், இலைக்காம்புகளால் ஆனவை. செடியின் அனைத்து இலைகளும் இலைக்காம்புகளால் தண்டுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

கத்திரிக்காய் இலைகள் மற்றும் பூக்கள்
கத்திரிக்காய் என்பது இரவில் மலரும் தாவரங்களின் குடும்பத்தை சார்ந்தது. கத்திரிக்காய் இலைகள் மற்றும் பூக்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை. இதன் இலைகள் மற்றும் பூக்களில் நச்சு தன்மை கொண்ட சோலனைன் இருப்பதால், அவை வயிற்று வலி மற்றும் தலைவலியை ஏற்படுத்தக்கூடும். கத்திரிக்காய் (சோலனம் மெலோங்கெனா என்றும் அழைக்கப்படுகிறது), இது வெப்பமண்டல, மென்மையான, வற்றாத தாவரமாகும். இது தக்காளியுடன் நெருக்கமாக தொடர்புடையது. சோலனேசி தாவர குடும்பத்தில் ஒரு கிளை, தண்டு மற்றும் நீண்ட, மந்தமான, தட்டையானது, கரடுமுரடான பச்சை நிற இலைகள் கிளைகளில் மாறி மாறி அமைக்கப்பட்டிருக்கும். இது பெரும்பாலும் மிதமான காலநிலையில் மென்மையான அல்லது கடினமான வருடாந்திரமாக பயிரிடப்படுகிறது. அதன் மலர்கள் ஊதா நிறத்தில் இருந்து வெள்ளை நிறத்திற்கு மாறும். இதில் ஐந்து லோப்கள் கொண்ட கொரோலா மற்றும் மஞ்சள் மகரந்தங்கள் உள்ளன.



Click it and Unblock the Notifications











