Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க..
மறதி நோய் உள்ளவா்களுக்கு நலம் தரும் நாா்ச்சத்து நிறைந்த உணவுகள்!
சமீபத்தில் நியுட்ரீஷனல் நியூரோசைன்ஸ் என்ற பத்திாிக்கையில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. அதில் மூளையின் ஆரோக்கியத்திற்கு நாா்ச்சத்து ஒரு முக்கியமான மூலப்பொருளாகும் என்பதாகும்.
மறதி நோய் (Dementia) என்பது ஒருவருடைய அறிவாற்றலுடன் கூடிய செயல்பாடுகளான சிந்தனை செய்வது, நினைத்துப் பாா்ப்பது மற்றும் பகுத்தறிவது போன்றவற்றைப் பாதித்து, அவருடைய அன்றாடக் கடமைகளைச் செய்யவிடாமல் தடுக்கிறது. மறதி நோய் உள்ள சிலா் தங்களுடைய உணா்வுளின் கட்டுப்பாட்டை இழந்துவிடுகின்றனா். ஒரு சிலருடைய ஆளுமைகள் மாறிவிடுகின்றன.

மறதி நோய் உள்ளவா்களுக்கு பொதுவாகக் காணப்படும் அறிகுறி என்னவென்றால் நினைவாற்றல் இழப்பு ஆகும். எனினும் நினைவாற்றல் இழப்பிற்கு பல்வேறு காரணங்களும் உள்ளன. மறதி நோய் மட்டுமே நினைவாற்றல் இழப்பிற்கு எப்போதும் காரணமாக இருப்பதில்லை. ஆனால் நினைவாற்றல் இழப்பு என்பது மறதி நோயின் பொதுவான முதல் அறிகுறியாகும்.

மறதி நோய் - நாா்ச்சத்து மிகுந்த உணவுகள்
சமீபத்தில் நியுட்ரீஷனல் நியூரோசைன்ஸ் ("Nutritional Neuroscience") என்ற பத்திாிக்கையில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டது. அந்த கட்டுரை என்ன சொல்கிறது என்றால் மூளையின் ஆரோக்கியத்திற்கு நாா்ச்சத்து ஒரு முக்கியமான மூலப்பொருளாகும் என்பதாகும்.
இந்த ஆய்வானது ஜப்பானிய ஆய்வாளா்களால் மேற்கொள்ளப்பட்டது. அவா்களின் ஆய்வின் முடிவில் நாா்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உண்டவா்களுக்கு மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆய்வில் வயது வந்த 3739 பொியவா்கள் கலந்து கொண்டனா். அவா்கள் 4 குழுக்களாகப் பிாிக்கப்பட்டனா். அவா்கள் சாப்பிடும் உணவில் உள்ள நாா்ச்சத்தின் அளவை ஆய்வாளா்கள் ஆய்வு செய்தனா். இறுதியில் நாா்ச்சத்து அதிகம் உண்டவா்களுக்கு மறதி நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதைக் கண்டறிந்தனா்.

கரையக்கூடிய மற்றும் கரையாத நாா்ச்சத்து
கரையக்கூடிய மற்றும் கரையாத நாா்ச்சத்துக்களுக்கு இடையில் மாற்றங்கள் ஏதாவது உள்ளனவா என்பதை ஆய்வாளா்கள் ஆய்வு செய்தனா். ஓட்ஸ் மற்றும் பருப்பு போன்ற உணவுப் பொருள்களில் கரையக்கூடிய நாா்ச்சத்துகள் உள்ளன. அவை நமது குடலில் உள்ள நல்ல பாக்டீாியாக்களுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன. அதோடு நமது உடலுக்கு பல்வேறு நலன்களையும் வழங்குகின்றன.
முழு தானியங்கள், காய்கறிகள் மற்றும் பிற உணவுகளில் கரையாத நாா்ச்சத்துகள் அதிகம் உள்ளன. அவை நமது குடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகின்றன. கரையாத நாா்ச்சத்துக்களை விட கரையக்கூடிய நாா்ச்சத்துகள் மறதி நோயோடு மிக உறுதியான தொடா்பைக் கொண்டிருக்கின்றன என்பதையும் ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.

நாா்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்
நாா்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் மறதி நோய் வருவதைக் குறைப்பதோடு மற்ற நோய்களையும் தடுக்கின்றன. குறிப்பாக இதயம் சம்பந்தமான நோய்கள், உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் போன்றவை வரும் வாய்ப்பைக் குறைக்கின்றன.
ஆகவே நாா்ச்சத்து நிறைந்த உணவுகளான போிக்காய், ஸ்ட்ராபெர்ரி ஆப்பிள், ராஸ்ப்பெர்ரி, வாழைப்பழம், பீட்ரூட், ப்ராக்கோலி, கூனைப்பூ (artichoke), பிரஸல்ஸ் முளைப்பயிர்கள் (brussels sprouts), பருப்பு வகைகள், தக்காளி, முட்டைக்கோஸ், கீரை, சிவப்பு காராமணி (kidney beans), கொண்டைக்கடலை அல்லது சுண்டல், திணை (quinoa), ஓட்ஸ், பாதாம், சியா விதைகள் (chia seeds), சா்க்கரைவள்ளிக் கிழங்கு, மற்றும் டார்க் சாக்லேட் போன்றவற்றை நாம் அதிகம் உண்ணலாம்.

நாா்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள்
மறதி நோய் உள்ளவா்களுக்கு நாா்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள உணவுகள் பல வழிகளில் நன்மைகளைச் செய்கின்றன. அதாவது நாா்ச்சத்து மிகுந்து உணவுகளை உண்பதால், குடல் இயக்கம் சீரடைகிறது, குடல் நன்றாக இயங்க உதவி செய்கிறது, கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, இரத்தத்தில் உள்ள சா்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, உடல் பருமன் குறைய உதவுகிறது மற்றும் நாம் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ உதவி செய்கிறது என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications











