Just In
- 16 min ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 1 hr ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 3 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 5 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Movies Rajinikanth: வாவ் சூப்பர் கெட்டப்பில் ரஜினி.. தலைவர் 171 டைட்டில் ரிலீஸ்.. தேதியை அறிவித்த லோகேஷ்!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
குண்டாக இருப்பவர்கள் ஏன் ஆரஞ்சு சாப்பிட வேண்டும் என தெரியுமா?
ஆரஞ்சின் நிறம் அனைவரையும் கவரக் கூடியது. புளிப்பும் இனிப்பும் சேர்ந்த அந்த சுவை வெயிலில் காலத்தில் இதம் அளிக்கும். சுவையும் அதிகம். அத்தகைய ஆரஞ்சின் சத்துக்கள் ஒப்பில்லாதது.
கொழுப்பு கிடையவே கிடையாது. அதிக நார்சத்துக்களை கொண்டது. விட்டமின் சி,ஏ நிறைந்தவை. இதில் 170 ஃபைடோகெமிக்கல் உள்ளன. இவற்றுள் 60 ஃபைடோ கெமிக்கல் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட். அதோடு இதயத்தை சீராக வைக்க உதவும் முக்கிய மினரலான பொட்டாசியம் அதிகம் கொண்டுள்ளது. அதிக நீர்சத்து நிறைந்தவை.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உடல் பருமனானவர்கள் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை அதிகம் எடுத்துக் கொண்டால், உடல் பருமனால் உண்டாகும் இதய நோய்கள், சர்க்கரை வியாதி தடுக்கப்படுகிறது என தெரியவந்துள்ளது.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உடலில் கொழுப்பு செல்கள் அதிகம் படிந்திருக்கும். அவை உடலுக்கு தீங்கு விளைவுக்கும் சம நிலையற்ற ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை உருவாக்கும். அவை சாதரண நல்ல செல்களை செதாரப்படுத்துகிறது.
இதனால் செல் இறப்பு அதிகமாகி, அவை புற்று நோய் மற்றும் மரபியல் தொடர்பான வியாதிகளை உருவாக்கும். அதோடு உடலுக்கு பாதகமான பல வியாதிகளை உருவாக்குகிறது.
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் அதிக ஃப்ளேவினாய்டு உள்ளது. குறிப்பாக ஹெஸ்பிரிடின், எரியோடிக்டியால், எரியோசிட்ரின் போன்ற முக்கிய ஃப்ளேவினாய்டுகள் உள்ளது.
அதனால் 50 சோதனை எலிகளுக்கு இந்த ஃப்ளேவினாய்ட்கள் கொழுப்பு உணவுகளுடன் கொடுக்கப்பட்டது. ஒரு பிரிவு எலிககளுக்கு வெறும் கொழுப்பு நிறைந்த உணவுக்ள் மட்டுமே அளிக்கப்பட்டது. இரண்டாவது பிரிவு மற்றும் மூன்றாவது பிரிவு எலிகளுக்கு கொழுப்பு உணவுகளுடன் தலா ஹெஸ்பிரிடின், எரியோடிக்டியால், எரியோசிட்ரின் ஆகிய ஃபேளேவினாய்டு அளிக்கப்பட்டது.
இதில் கொழுப்பு நிறைந்த உணவுகள் மட்டும் அளிக்கப்பட்ட எலிகளுக்கு சம நிலையற்ற ஆக்ஸிஜன் அதிகமாக உருவாகி, செல் சிதைவும் அதிகமாக இருந்திருக்கிறது.
ஆனால் கொழுப்பு உணவுடன் மேற்கூறிய ஃப்ளெவினாய்டு தரப்பட்ட எலிகளுக்கு கெடுதால் தரும் சம நிலையற்ற ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் உருவாகவில்லை. செல்சிதைவும் ஏற்படவில்லை.
எனவே மருத்துவர்கள் உடல் பருமனாக இருப்பவர்கள் ஆரஞ்சு எலுமிச்சை ஆகியவற்றை சாப்பிட்டால் கல்லீரல் நோய், இதய நோய் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கலாம் என கூறுகின்றனர். அதோடு நுரையீரல் மற்றும் வாய்ப் புற்று நோயும் இது தடுக்கும் என ஆய்வு கூறுகின்றது.