Latest Updates
-
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, தன் பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்.. -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. காலையில் 5 நிமிடத்தில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 20 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்காம் - ஜாக்கிரதை -
ஜூன் 23-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
சனிபகவான்-புதன் உருவாக்கும் அரிய கிரக சேர்க்கையால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான்
குண்டாக இருப்பவர்கள் ஏன் ஆரஞ்சு சாப்பிட வேண்டும் என தெரியுமா?
ஆரஞ்சின் நிறம் அனைவரையும் கவரக் கூடியது. புளிப்பும் இனிப்பும் சேர்ந்த அந்த சுவை வெயிலில் காலத்தில் இதம் அளிக்கும். சுவையும் அதிகம். அத்தகைய ஆரஞ்சின் சத்துக்கள் ஒப்பில்லாதது.
கொழுப்பு கிடையவே கிடையாது. அதிக நார்சத்துக்களை கொண்டது. விட்டமின் சி,ஏ நிறைந்தவை. இதில் 170 ஃபைடோகெமிக்கல் உள்ளன. இவற்றுள் 60 ஃபைடோ கெமிக்கல் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட். அதோடு இதயத்தை சீராக வைக்க உதவும் முக்கிய மினரலான பொட்டாசியம் அதிகம் கொண்டுள்ளது. அதிக நீர்சத்து நிறைந்தவை.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உடல் பருமனானவர்கள் ஆரஞ்சு அல்லது எலுமிச்சை அதிகம் எடுத்துக் கொண்டால், உடல் பருமனால் உண்டாகும் இதய நோய்கள், சர்க்கரை வியாதி தடுக்கப்படுகிறது என தெரியவந்துள்ளது.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு உடலில் கொழுப்பு செல்கள் அதிகம் படிந்திருக்கும். அவை உடலுக்கு தீங்கு விளைவுக்கும் சம நிலையற்ற ஆக்ஸிஜன் மூலக்கூறுகளை உருவாக்கும். அவை சாதரண நல்ல செல்களை செதாரப்படுத்துகிறது.
இதனால் செல் இறப்பு அதிகமாகி, அவை புற்று நோய் மற்றும் மரபியல் தொடர்பான வியாதிகளை உருவாக்கும். அதோடு உடலுக்கு பாதகமான பல வியாதிகளை உருவாக்குகிறது.
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் அதிக ஃப்ளேவினாய்டு உள்ளது. குறிப்பாக ஹெஸ்பிரிடின், எரியோடிக்டியால், எரியோசிட்ரின் போன்ற முக்கிய ஃப்ளேவினாய்டுகள் உள்ளது.
அதனால் 50 சோதனை எலிகளுக்கு இந்த ஃப்ளேவினாய்ட்கள் கொழுப்பு உணவுகளுடன் கொடுக்கப்பட்டது. ஒரு பிரிவு எலிககளுக்கு வெறும் கொழுப்பு நிறைந்த உணவுக்ள் மட்டுமே அளிக்கப்பட்டது. இரண்டாவது பிரிவு மற்றும் மூன்றாவது பிரிவு எலிகளுக்கு கொழுப்பு உணவுகளுடன் தலா ஹெஸ்பிரிடின், எரியோடிக்டியால், எரியோசிட்ரின் ஆகிய ஃபேளேவினாய்டு அளிக்கப்பட்டது.
இதில் கொழுப்பு நிறைந்த உணவுகள் மட்டும் அளிக்கப்பட்ட எலிகளுக்கு சம நிலையற்ற ஆக்ஸிஜன் அதிகமாக உருவாகி, செல் சிதைவும் அதிகமாக இருந்திருக்கிறது.
ஆனால் கொழுப்பு உணவுடன் மேற்கூறிய ஃப்ளெவினாய்டு தரப்பட்ட எலிகளுக்கு கெடுதால் தரும் சம நிலையற்ற ஆக்ஸிஜன் மூலக்கூறுகள் உருவாகவில்லை. செல்சிதைவும் ஏற்படவில்லை.
எனவே மருத்துவர்கள் உடல் பருமனாக இருப்பவர்கள் ஆரஞ்சு எலுமிச்சை ஆகியவற்றை சாப்பிட்டால் கல்லீரல் நோய், இதய நோய் மற்றும் புற்று நோய்கள் வராமல் தடுக்கலாம் என கூறுகின்றனர். அதோடு நுரையீரல் மற்றும் வாய்ப் புற்று நோயும் இது தடுக்கும் என ஆய்வு கூறுகின்றது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications



