Latest Updates
-
1 வருடத்துக்கு பின் மேஷம் சொல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்..
திங்கட்கிழமை வந்தாலே ரொம்ப சோம்பேறித்தனமா இருக்கா? இத ட்ரை பண்ணுங்க...
இங்கு நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்க காலையில் குடிக்க வேண்டிய பானங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒரு நாளைக்கு காலை உணவு மிகவும் இன்றியமையாதது. நாம் சாப்பிடும் காலை உணவைப் பொறுத்து தான், அன்றைய தினத்தில் நாம் எவ்வளவு சுறுசுறுப்புடன் இருப்போம் என்பதே உள்ளது. ஆனால் நம்மில் பலர் காலை உணவைத் தேர்ந்தெடுப்பதில் பல தவறுகளை செய்வோம்.

குறிப்பாக பலருக்கு காலையில் ஆரோக்கியமான உணவைத் தயாரிக்க போதிய நேரம் கிடைக்காமல், ஏனோ தானோவென்று சமைத்து சாப்பிடுகிறோம். இப்படியே நீடித்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைக்காமல் உடலில் சோம்பேறித்தனம் அதிகரித்து, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட தேவையான ஆற்றல் கிடைக்காமல் போகும்.
ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஒவ்வொரு நாளும் சோம்பேறியாக இல்லாமல், சுறுசுறுப்பாக இருக்க காலையில் குடிக்க வேண்டிய சில பானங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஜூஸ் #1
தேவையான பொருட்கள்:
கேரட் - 2
பச்சை ஆப்பிள் - 2
செலரி - 3 தண்டு
ஆரஞ்சு - 1
பேரிக்காய் - 2

செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்தையும் துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து, காலை உணவின் போது குடித்தால், உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம்.

ஜூஸ் #2
தேவையான பொருட்கள்:
சிவப்பு முட்டைக்கோஸ் - சிறிது
பேரிக்காய் - 2
எலுமிச்சை - 1/2

செய்முறை:
சிவப்பு முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி, அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் தனியாக பேரிக்காயை துண்டுகளாக்கி சேர்த்து நன்கு அரைத்து, முட்டைக்கோஸ் ஜூஸ் உடன் சேர்த்து, அதோடு எலுமிச்சை சாற்றினை பிழிந்து நன்கு கலந்து குடிக்க வேண்டும். இப்படி குடித்தால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் இரத்த அளவை அதிகரித்து, நாள் முழுவதும் உடலுக்கு வேண்டிய ஆற்றலை கிடைக்கச் செய்யும்.

ஜூஸ் #3
தேவையான பொருட்கள்:
ஸ்ட்ராபெர்ரி - 2 கப்
தக்காளி - 2
கேரட் - 4
ஆரஞ்சு - 1

செய்முறை:
ஆரஞ்சு பழத்தை சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் ஸ்ட்ராப்பெர்ரி, தக்காளி, கேரட் ஆகியவற்றை போட்டு நன்கு அரைத்து, ஆரஞ்சு பழச்சாறுடன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
இந்த ஜூஸில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை உள்ளது. இதனால் இந்த ஜூஸ் உடலுக்கு ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.



Click it and Unblock the Notifications











