Latest Updates
-
5500 பணக்காரர்கள் மரணமிலா வாழ்க்கைக்காக அவங்க உடலை உறைய வைக்கப்போறாங்களாம்..மரணத்தை எப்டி ஜெயிப்பாங்க தெரியுமா -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
10 நிமிடத்தில் ருசியான தக்காளி குருமாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Thakkali Kurma Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று இட்லி, தோசைக்கு சட்னியை செய்யாமல், வீட்டில் தக்காளி அதிகம் இருந்தால், தக்காளியை குருமாவை செய்யுங்கள். சட்னி செய்வதற்கு தக்காளி குருமாவை செய்தால், 2 இட்லியை சாப்பிடுபவர்கள் 1 இட்லியை எக்ஸ்ட்ரா கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
முக்கியமாக இந்த தக்காளி குருமா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த குருமாவை ட்ரை செய்யலாம். குறிப்பாக இந்த குருமா குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு தக்காளி குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 3
* பட்டை - 1 இன்ச்
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 10 பல்
* பச்சை மிளகாய் -3
* இஞ்சி - சிறிய துண்டு
* தக்காளி - 6 (நறுக்கியது)
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* தேங்காய் - 4 பெரிய துண்டு (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை, பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி
ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கி, பின்
குழம்பு மிளகாய் தூள், கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி,
மூடி வைத்து 3-4 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் தேங்காயைப் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே மிக்சர் ஜாரில் வதக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியை
சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள
வெங்காய விழுதை சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி, பின் தேங்காய் விழுதையும்
சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு வேண்டுமானால் சேர்த்து, மூடி
வைத்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான தக்காளி
குருமா தயார்.
Image Courtesy: Rakskitchen



Click it and Unblock the Notifications











