மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!

மரணமிலா வாழ்க்கையை அடைய வேண்டுமென்பது உலகம் தோன்றிய காலம் முதலே மனிதர்கள் முயற்சித்து வரும் ஒரு விஷயமாகும். ஆனால் இயற்கையை வெல்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக முயற்சித்தும் மனிதர்களால் வயதாவதைக் கூட தடுக்க முடியவில்லை. இருப்பினும், எதிர்காலத்தில் மரணத்தை வெல்லும் தொழில்நுட்பம் வரும் என்று உலக பணக்காரார்கள் பலரும் நம்புகிறார்கள்.

அமெரிக்க கோடீஸ்வரர்கள் மரணத்தை வெல்வதற்காக தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்காலத்தில் உயிர்ப்பிக்க முடியும் என்ற நம்பிக்கையில் சில கோடீஸ்வரர்கள் தங்கள் உடல்களை உறைய வைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இந்த நம்பிக்கை "மறுமலர்ச்சி அறக்கட்டளைகளை "Revival Trusts" என்ற அறக்கட்டளையை உருவாக்க வழிவகுத்தது. ஏனெனில் இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெறும்போது, ​​அவர்களின் செல்வத்தை பாதுகாப்பதற்காக இந்த நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.

What is Cryonics Billionaires Are Freezing Themselves for Eternal Life

உடல்களை உறைய வைப்பது எப்படி வேலை செய்யும்?

கிரையோனிக்ஸ்(Cryonics) என்று அழைக்கப்படும் உடல்களை உறைய வைக்கும் தொழில்நுட்பம் என்பது ஒரு புரட்சிகரமான அறிவியலாகும், இது மனித உடல்களை மிகக் குறைந்த வெப்பநிலையில் உறைய வைக்கிறது, எதிர்கால மருத்துவ முன்னேற்றங்கள் இறந்த உடல்களை குணப்படுத்தி மீண்டும் உயிர்ப்பிக்கும் வரை அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

விட்ரிஃபிகேஷன்(Vitrification) எனப்படும் இந்த புதுமையான செயல்முறை, உடலின் இரத்தத்தை ஒரு சிறப்பு கரைசலுடன் மாற்றுவதை உள்ளடக்கியது, இது செல்கள் மற்றும் திசுக்களை சேதப்படுத்தும் செயல்முறையைத் தடுக்கிறது. உடல் உறைந்தவுடன், அது திரவ நைட்ரஜன் நிரப்பப்பட்ட ஒரு சிறப்பு கொள்கலனில் சேமிக்கப்பட்டு -196 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உறைய வைக்கப்படுகிறது.

இறந்த உடல்களை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா?

கிரையோபிரெசர்வேஷனுக்கு(Cryopreservation) உட்படுத்தப்பட்ட ஒருவரை மீண்டும் உயிர்ப்பிக்க முடியுமா என்பது இன்றுவரை பதில் தெரியாத கேள்வியாகும். தற்போது, ​​மருத்துவ அறிவியலிடம் இந்த செயல்முறையை மாற்றியமைக்கவோ அல்லது ஏற்படக்கூடிய செல்லுலார் சேதத்தை சரிசெய்யவோ தொழில்நுட்பம் இல்லை. இருப்பினும், நானோ தொழில்நுட்பம் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவத்தில் எதிர்கால முன்னேற்றங்கள் இறந்த உடல்களுக்கு உயிர் கொடுப்பதை சாத்தியமாக்கும் என்று கிரையோனிக்ஸ் ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

எதிர்கால மருத்துவ தொழில்நுட்பம் இந்த உறையவைக்கும் செயல்முறையால் ஏற்படும் சேதத்தையும் மரணத்திற்கான அடிப்படை காரணங்களையும் சரிசெய்யும் அளவிற்கு முன்னேறக்கூடும் எய்ம்ஸில் உள்ள உடற்கூறியல் துறை விளக்குகிறது. இருப்பினும், இது குறித்து இன்னும் கூடுதல் ஆய்வுகள் தேவை.

உத்திரவாதம் இல்லாதபோதும் ஏன் உடலை உறையவைக்கிறார்கள்?

எதிர்காலத்தில் மீண்டும் உயிர்த்தெழுவோம் என்ற உத்திரவாதம் இல்லாவிட்டாலும் சில உலக பணக்காரர்கள் தங்கள் உடலை உறைய வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். கிரையோனிக்ஸ் ஒருவரின் ஆயுளை நீட்டிக்கவும் எதிர்கால முன்னேற்றங்களைக் காணவும் வாய்ப்பளிப்பதால் மக்கள் அதை நாடுகிறார்கள். கொடிய நோய்களும் முதுமையும் எதிர்காலத்தில் குணப்படுத்தக்கூடியதாக மாறலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். செல்வந்தர்கள் கிரையோனிக்ஸ் அழியாமைக்கான வாய்ப்பை வழங்குவதால் அதை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். தற்போதைய நிலவரப்படி, 5500 பேர் கிரையோனிக்ஸ் பாதுகாப்பிற்காக திட்டமிட்டுள்ளனர், ஏற்கனவே 500 இறந்த உடல்கள் உறைந்த நிலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

கிரையோனிக்ஸ் செயல்முறைக்கு மிகப்பெரிய அளவிலான முதலீடு தேவைப்படுகிறது. மக்கள் தங்கள் உடல்களை உறைய வைக்க கோடிக்கணக்கில் முதலீடு செய்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்கள் வெற்றிகரமாக உயிர்ப்பிக்கப்பட்டால், அவர்களின் "Revival Trust" அறக்கட்டளை எதிர்காலத்தில் மீண்டும் வாழத் தேவையான நிதி ஆதரவை வழங்கும். ஒருவேளை மரணத்தை வெல்லும் வழியை எதிர்காலத்தில் மனிதர்கள் கண்டுபிடித்தாலும் அத பணக்காரர்களால் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பது மட்டும் உறுதி.

Desktop Bottom Promotion