Latest Updates
-
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. நீங்க அட்சய திருதியை நாளில் என்ன வாங்கணும்-ன்னு சொல்றோம். .. -
நாவூறும்.. சேலத்து மாங்காய் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
Mango Benefits: மாம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளும்.. மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகளும்.. -
100 ஆண்டுகள் கழித்து அட்சய திருதியை அன்று உருவாகும் 5 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கபோகுது!
கர்ப்பமாக இருக்கும் போது ஏன் இரத்தம் வருதுன்னு தெரியுமா?

* சில பெண்களுக்கு கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் கருப்பையின் அகத்திரையில் முட்டை பொருந்துவதால், பிங்க் அல்லது ப்ரௌன் நிறத்தில் இரத்தம் வரும். அதுவும் இது கருவுற்ற 6 முதல் 12 நாட்களில் ஏற்படும். ஏனெனில் முதன் முதலில் கருமுட்டையானது கருப்பையில் போகும் போது, தாயின் இரத்த குழாயிலிருந்து சிறிது இரத்தம் வெளியேறும். இதிலும் இவை சில நாட்கள் சில நேரங்களில் மட்டும் தான் ஏற்படும்.
* கர்ப்பமாக இருக்கும் போது கருப்பை வாய்க்கு அதிகமான இரத்தம் பாயும். இதனால் மிகவும் சென்சிட்டிவ்வான கருப்பையானது சற்று அதிக அழுத்தத்திற்குட்பட்டு, இரத்தம் வடிகிறது. இவ்வாறு இரத்தம் வந்தால் எதற்கும் கவலைப் பட வேண்டாம்.
* நஞ்சுக்கொடியில் (placenta) ஏதேனும் இரத்தக்கட்டிகள் இருந்தால், இரத்தப்போக்கு ஏற்படும். சில சமயங்களில் அளவுக்கு அதிகமான இரத்தப்போக்கு கூட நேரிடும். அதுவே அந்த இரத்தக்கட்டிகள் அளவுக்கு அதிகமாக இருந்தால், அந்த நஞ்சுக்கொடி கருப்பையிலிருந்து பிளவுபட்டு, இறுதியில் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். இந்த சப்க்ரோனிக் ஹெமடோமாஸிற்கு என்று எந்த ஒரு தனி சிகிச்சையும் இல்லை. இந்த பிரச்சனை இருந்தால், மருத்துவர்கள் என்ன அறிவுறுத்துவார்கள் என்றால், தாயை நன்கு ஓய்வு எடுக்க சொல்வார்கள், உடலுறவு நிச்சயம் கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள், சில மருந்துகளான லோவெனாக்ஸ் அல்லது ஹெப்பரின் போன்ற மருந்துகளை உட்கொள்ளச் சொல்வார்கள். இவற்றை சரியாக மேற்கொண்டு வந்தால், இந்த பிரச்சனை இருந்தாலும் ஆரோக்கியமான பிரசவம் நடக்கும் வாய்ப்புள்ளது.
* கர்ப்பமாக இருக்கும் போது, அதிலும் ஆரம்ப காலத்தில் இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கு காரணமாகவும் இருக்கும். மேலும் அவ்வாறு வரும் இரத்தம் அடர்ந்த சிவப்பு நிறத்தில் வந்தால், அது நிச்சயம் கருசிதைவிற்கான இரத்தப்போக்கு தான் என்பதை உறுதிபடுத்தலாம். பெரும்பாலும் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் அதாவது முதல் 12 வாரத்தில் இந்த மாதிரியான இரத்தப்போக்கு ஏற்படும். இதற்கு காரணம் கருவின் வளர்ச்சி சரியாக இல்லாததே ஆகும்.



Click it and Unblock the Notifications











