Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
கர்ப்பமாக இருக்கும் போது ஏன் இரத்தம் வருதுன்னு தெரியுமா?

* சில பெண்களுக்கு கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் கருப்பையின் அகத்திரையில் முட்டை பொருந்துவதால், பிங்க் அல்லது ப்ரௌன் நிறத்தில் இரத்தம் வரும். அதுவும் இது கருவுற்ற 6 முதல் 12 நாட்களில் ஏற்படும். ஏனெனில் முதன் முதலில் கருமுட்டையானது கருப்பையில் போகும் போது, தாயின் இரத்த குழாயிலிருந்து சிறிது இரத்தம் வெளியேறும். இதிலும் இவை சில நாட்கள் சில நேரங்களில் மட்டும் தான் ஏற்படும்.
* கர்ப்பமாக இருக்கும் போது கருப்பை வாய்க்கு அதிகமான இரத்தம் பாயும். இதனால் மிகவும் சென்சிட்டிவ்வான கருப்பையானது சற்று அதிக அழுத்தத்திற்குட்பட்டு, இரத்தம் வடிகிறது. இவ்வாறு இரத்தம் வந்தால் எதற்கும் கவலைப் பட வேண்டாம்.
* நஞ்சுக்கொடியில் (placenta) ஏதேனும் இரத்தக்கட்டிகள் இருந்தால், இரத்தப்போக்கு ஏற்படும். சில சமயங்களில் அளவுக்கு அதிகமான இரத்தப்போக்கு கூட நேரிடும். அதுவே அந்த இரத்தக்கட்டிகள் அளவுக்கு அதிகமாக இருந்தால், அந்த நஞ்சுக்கொடி கருப்பையிலிருந்து பிளவுபட்டு, இறுதியில் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். இந்த சப்க்ரோனிக் ஹெமடோமாஸிற்கு என்று எந்த ஒரு தனி சிகிச்சையும் இல்லை. இந்த பிரச்சனை இருந்தால், மருத்துவர்கள் என்ன அறிவுறுத்துவார்கள் என்றால், தாயை நன்கு ஓய்வு எடுக்க சொல்வார்கள், உடலுறவு நிச்சயம் கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள், சில மருந்துகளான லோவெனாக்ஸ் அல்லது ஹெப்பரின் போன்ற மருந்துகளை உட்கொள்ளச் சொல்வார்கள். இவற்றை சரியாக மேற்கொண்டு வந்தால், இந்த பிரச்சனை இருந்தாலும் ஆரோக்கியமான பிரசவம் நடக்கும் வாய்ப்புள்ளது.
* கர்ப்பமாக இருக்கும் போது, அதிலும் ஆரம்ப காலத்தில் இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கு காரணமாகவும் இருக்கும். மேலும் அவ்வாறு வரும் இரத்தம் அடர்ந்த சிவப்பு நிறத்தில் வந்தால், அது நிச்சயம் கருசிதைவிற்கான இரத்தப்போக்கு தான் என்பதை உறுதிபடுத்தலாம். பெரும்பாலும் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் அதாவது முதல் 12 வாரத்தில் இந்த மாதிரியான இரத்தப்போக்கு ஏற்படும். இதற்கு காரணம் கருவின் வளர்ச்சி சரியாக இல்லாததே ஆகும்.



Click it and Unblock the Notifications











