Latest Updates
-
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..
கர்ப்பமாக இருக்கும் போது ஏன் இரத்தம் வருதுன்னு தெரியுமா?

* சில பெண்களுக்கு கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் கருப்பையின் அகத்திரையில் முட்டை பொருந்துவதால், பிங்க் அல்லது ப்ரௌன் நிறத்தில் இரத்தம் வரும். அதுவும் இது கருவுற்ற 6 முதல் 12 நாட்களில் ஏற்படும். ஏனெனில் முதன் முதலில் கருமுட்டையானது கருப்பையில் போகும் போது, தாயின் இரத்த குழாயிலிருந்து சிறிது இரத்தம் வெளியேறும். இதிலும் இவை சில நாட்கள் சில நேரங்களில் மட்டும் தான் ஏற்படும்.
* கர்ப்பமாக இருக்கும் போது கருப்பை வாய்க்கு அதிகமான இரத்தம் பாயும். இதனால் மிகவும் சென்சிட்டிவ்வான கருப்பையானது சற்று அதிக அழுத்தத்திற்குட்பட்டு, இரத்தம் வடிகிறது. இவ்வாறு இரத்தம் வந்தால் எதற்கும் கவலைப் பட வேண்டாம்.
* நஞ்சுக்கொடியில் (placenta) ஏதேனும் இரத்தக்கட்டிகள் இருந்தால், இரத்தப்போக்கு ஏற்படும். சில சமயங்களில் அளவுக்கு அதிகமான இரத்தப்போக்கு கூட நேரிடும். அதுவே அந்த இரத்தக்கட்டிகள் அளவுக்கு அதிகமாக இருந்தால், அந்த நஞ்சுக்கொடி கருப்பையிலிருந்து பிளவுபட்டு, இறுதியில் கருச்சிதைவு ஏற்பட்டுவிடும். இந்த சப்க்ரோனிக் ஹெமடோமாஸிற்கு என்று எந்த ஒரு தனி சிகிச்சையும் இல்லை. இந்த பிரச்சனை இருந்தால், மருத்துவர்கள் என்ன அறிவுறுத்துவார்கள் என்றால், தாயை நன்கு ஓய்வு எடுக்க சொல்வார்கள், உடலுறவு நிச்சயம் கொள்ளக்கூடாது என்று கூறுவார்கள், சில மருந்துகளான லோவெனாக்ஸ் அல்லது ஹெப்பரின் போன்ற மருந்துகளை உட்கொள்ளச் சொல்வார்கள். இவற்றை சரியாக மேற்கொண்டு வந்தால், இந்த பிரச்சனை இருந்தாலும் ஆரோக்கியமான பிரசவம் நடக்கும் வாய்ப்புள்ளது.
* கர்ப்பமாக இருக்கும் போது, அதிலும் ஆரம்ப காலத்தில் இரத்தப்போக்கு ஏற்பட்டால், அது கருச்சிதைவிற்கு காரணமாகவும் இருக்கும். மேலும் அவ்வாறு வரும் இரத்தம் அடர்ந்த சிவப்பு நிறத்தில் வந்தால், அது நிச்சயம் கருசிதைவிற்கான இரத்தப்போக்கு தான் என்பதை உறுதிபடுத்தலாம். பெரும்பாலும் கர்ப்பத்தின் ஆரம்பத்தில் அதாவது முதல் 12 வாரத்தில் இந்த மாதிரியான இரத்தப்போக்கு ஏற்படும். இதற்கு காரணம் கருவின் வளர்ச்சி சரியாக இல்லாததே ஆகும்.



Click it and Unblock the Notifications