For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சபரிமலை ஐயப்பன் மகர சங்கராந்தி நாளில் ஜோதியாக தெரிவது எப்படி?

சபரிமலையில் நடைபெறும் மிக முக்கியமான பூஜைகளில் ஒன்று மகரசங்கரம பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில் நடைபெறும் இந்த பூஜையில் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இர

|

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்குப் பூஜைத் திருவிழா ஏழு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி நாளில், சூரியன் மறைவுக்குப் பின்பு பொன்னம்பல மேட்டில் பேரொளி ஒன்று தோன்றி மறைகிறது. சபரிமலையில் இருந்து இந்தப் பேரொளியைக் காணும் பக்தர்கள், பொன்னம்பல மேட்டில் இருக்கும் ஐயப்பனே, ஜோதி வடிவில் பக்தர்களுக்குக் காட்சியளிப்பதாக நம்புகின்றனர். மகரவிளக்கு மகரஜோதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஜனவரி 14ம் தேதியான இன்று இரவு நடை அடைக்கப்படுவதில்லை. விடிய விடிய திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் நடைபெறும் மிக முக்கியமான பூஜைகளில் ஒன்று மகரசங்கரம பூஜை. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசியில் கடக்கும் முகூர்த்தத்தில் நடைபெறும் இந்த பூஜையில் திருவனந்தபுரம் கவடியார் அரண்மனையில் இருந்து வரும் நெய்தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படும். இந்த நாளில் தான் மகரஜோதியும், மகர நட்சத்திரமும் காட்சி தரும். பந்தளத்தில் இருந்து வரும் திருவாபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெறும்.

Makaravilakku Festival On Sabarimalai On January 15, 2020

இந்த ஆண்டு சூரியன் மகரராசிக்கு ஜனவரி15ஆம்தேதி அதிகாலை 2 மணிக்கு கடக்கிறார். இதனால் ஜனவரி 14 மாலை 5 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு 11 மணிக்கு அடைக்கப்படாமல் தொடர்ந்து திறந்திருக்கும். பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 15 அதிகாலை 1.45 மணிக்கு மகர சங்கரம பூஜைக்கான ஆயத்தங்கள் துவங்கும். 2.09 மணிக்கு இந்த பூஜை நடந்த பின்னர் 2.30 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

ஜனவரி 15 அதிகாலை 3.00 மணிக்கு பதிலாக 4.00 மணிக்கு நடை திறக்கப்படும். பகல் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்படும். பகல் ஒரு மணிக்கு பின்னர் திருவாபரணங்கள் வந்து தீபாராதனை முடிந்த பின்னர் தான் பக்தர்கள் படியேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Makaravilakku Festival On Sabarimalai On January 15, 2020

Makaravilakku is one of the most important festivals at Sabarimala Temple. Makaravilakku festival after which it will close on January 20.
Story first published: Tuesday, January 14, 2020, 14:03 [IST]
Desktop Bottom Promotion