Just In
- 23 min ago வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- 1 hr ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- 2 hrs ago கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
- 2 hrs ago இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
Don't Miss
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- News சிவப்பு நிறத்திலிருந்து "காவி"க்கு தாவிய DD.. எதிலும் காவி, இதிலேயுமே? தூர்தர்ஷனுக்கு என்னதான் ஆச்சு
- Automobiles விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கர்ணனைப் பற்றி குறைவாக அறியப்பட்ட 11 கதைகள்!
மகாபாரதத்தைப் பற்றி பேசும் போது, கிருஷ்ணர், அர்ஜுனன், யுதிஷ்டர் ஆகியோர் நமது நினைவிற்கு வருகிறார்கள். பின்னர் நமது நினைவிற்கு வருபவர்கள் தீய எண்ணங்கள் கொண்ட கௌரவர்கள். நாம் கடைசியாக நினைவு கூறும் கதாப
மகாபாரதத்தைப் பற்றி பேசும் போது, கிருஷ்ணர், அர்ஜுனன், யுதிஷ்டர் ஆகியோர் நமது நினைவிற்கு வருகிறார்கள். பின்னர் நமது நினைவிற்கு வருபவர்கள் தீய எண்ணங்கள் கொண்ட கௌரவர்கள். நாம் கடைசியாக நினைவு கூறும் கதாப்பாத்திரம் என்றால் அது விதியால் வதைக்கப்பட்ட , பலரால், பல முறை சபிக்கப்பட்ட கர்ணன் என்கிற மனிதன் ஆவார்.
ஆனால் மகாபாரதத்தில் கர்ணனின் பங்கு மிக முக்கியமானது. "சூர்யபுத்திரன்" ஆன கர்ணனைப் பற்றி அதிகம் அறியப்படாத 11 தருணங்களை இங்கே நாங்கள் பகிர்கிறோம். அவர் ஒரு சிறந்த நாயகனுக்கு நிகரான மனிதர் என்பதை இத்தருணங்கள் மூலம் நாம் உணரலாம்.
தருமனை விட கர்ணன் கூர்மையாக இருந்தான்
அதற்கான காரணம் இங்கே.
ஒருமுறை, அர்ஜுனன், கிருஷ்ணரிடம், ஏன் தருமரை, தர்மராஜர் என்றும், மற்றும் கர்ணனை, தன்வீர் என்று அழைக்கிறீர்கள்? என வினவினார் . இந்த வினாவிற்கு பதிலளிக்க, கிருஷ்ணர் தன்னையும் அர்ஜுனனையும் பிராமணர்களாக மாறுவேடமிட்டு இரு ராஜாக்களையும் பார்க்க முடிவு செய்தார்.
முதலில், தருமரைப் சந்தித்து உணவு சமைக்க சந்தனத்தைக் கேட்டார்கள். அந்த நேரத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருந்தது, தருமரால் எரிபொருளாகப் பயன்படுத்த ஏற்ற உலர்ந்த சந்தனத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் இருவரிடமும் மன்னிப்பு கேட்டு, அவர்கள் இருவரையும் வெறுங்கையுடன் அனுப்பினார்.
பிறகு, அவர்கள் கர்ணனிடம் சென்று அதையே கேட்டார்கள். கர்ணன் உலர்ந்த சந்தனத்தை எல்லா இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. ஆயினும் அவர் பிராமணர்களை வெறுங்கையுடன் வீட்டிற்கு செல்ல விடவில்லை. அவர் தனது வில் மற்றும் அம்புகளை எடுத்து சந்தன மரத்தால் செய்யப்பட்ட தமது மாளிகையின் கதவுகளை பெயர்த்து எடுத்து கிருஷ்ணருக்கும், அர்ஜுனனுக்கும் கொடுத்தார்.
கர்ணன் தனது உண்மையான பாரம்பரியத்தை அறிந்திருந்தாலும் ரிஷி பரசுராமரால் சபிக்கப்பட்டார்:
கர்ணனை ஏமாற்றியதற்காக ரிஷி பரசுராம் சபித்தார். கர்ணன் தான் ஒரு பிராமணர் என்று பொய் கூறியிருந்தார். ஏனெனில், எல்லா காலத்திலும் மிகச் சிறந்த ஆசிரியரிடமிருந்து வில்வித்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் பொய் சொல்லும்படி நேர்ந்தது. ஆனால் அந்தப் பொய் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இருப்பினும், உண்மையில், கர்ணனின் உண்மையான பாரம்பரியத்தைப் பற்றி பரசுராமர் அறிந்திருந்தார். ஆனால் பின்னர் நடக்கப் போகும் விஷயங்களும் அவருக்கு தெரிந்திருந்தது.
கர்ணன் துரியோதனனிடம் தர்மத்தால் மட்டுமே ஈர்க்கப்படவில்லை:
அங்க தேசத்து மன்னனாக கர்ணனுக்கு முடிசூட்டப்பட்ட பிறகு, அவர் துரியோதனனுடன் அதிக நேரம் செலவிட்டார். அவர்கள் மாலையில் பகடை விளையாடுவார்கள். சூரியன் மறையும் மாலை நேரத்தின் ஒரு நாள், அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது , துரியோதனன் சிறிது நேரத்தில் வெளியேற வேண்டியிருந்தது. அந்த வழியாக சென்று கொண்டிருந்த அவரது மனைவி பானுமதி, கர்ணன் தனது கணவருக்காக காத்திருப்பதைக் கண்டு, கணவரின் விளையாட்டைத் தொடர முடிவு செய்தார். அந்த நேரத்தில் அவர்களிடையே யாருடைய முறை அடுத்தது என்று ஒரு சாதாரண சண்டை இருந்தது. விளையாட்டுத்தனமாக, கர்ணன் பானுமதி கையிலிருந்து பகடை பறிக்க முயன்றான். அவர்கள் அசைந்துகொண்டிருந்தபோது, பானுமதியின் உடை இடையிலிருந்து வெளியேறியது, அவளது முத்து நகை உடைந்து, முத்துக்கள் தரையில் எங்கும் சிதறிக்கிடக்கின்றன. அந்த நேரத்தில், துரியோதனன் உள்ளே நுழைகிறான், அப்போது அவர்களுடைய உடைகள் சிக்கி, முத்துக்கள் அனைத்தும் தரையில் காணப்பட்டன. துரியோதனன் கர்ணனிடம் இருவருக்கும் என்ன சண்டை என்று கேட்டார். காரணம் தெரிந்ததும் வெடித்து சத்தமாக சிரித்துக் கொண்டே இருந்தார்.
பின்னர், பானுமதி ஏன் துரியோதனனிடம் அவளை சந்தேகிக்கவில்லை என்று கேட்டபோது, அவர் பதிலளித்தார், "ஒரு உறவில் சந்தேகத்திற்கு வாய்ப்பில்லை, ஏனென்றால் சந்தேகம் தீரும் போது எந்த உறவும் இருக்காது. கர்ணன் எனது சிறந்த நண்பர், நான் அவரை நம்புகிறேன், ஏனெனில் நான் அவர் ஒருபோதும் என் நம்பிக்கையை உடைக்க மாட்டார் என நம்புகின்றேன் என்றான்.
மகாபாரதத்தில் கர்ணன் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்:
உண்மையில், அர்ஜுனனால் கூட கர்ணனைத் தானே தோற்கடிக்க முடியவில்லை. குருக்ஷேத்திரப் போரின்போது, கிருஷ்ணரும் இந்திரனும் பாண்டவர்களுக்கு கர்ணனைக் கொல்ல உதவினார்கள். கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு ஒரு தேரோட்டியாக போர்க்களத்திற்குள் நுழைந்தான், இந்திரன் கர்ணனிடமிருந்து கவசத்தை எடுத்துச் சென்று, அர்ஜுனனுக்கான வழியைத் தெளிவுபடுத்தினான்.
கடைசி வரை, கர்ணன் தான் செய்த எல்லாவற்றிற்கும் துரியோதனுக்கு நன்றி செலுத்தினார்:
போருக்கு முன்பு, கிருஷ்ணர் கர்ணனை எதிர்கொண்டு, அவர் எப்படி பாண்டவர்களில் மூத்தவர், சிம்மாசனத்தின் சரியான வாரிசு என்று சொன்னார். குந்தி தனது தாயார் மற்றும் அவரது தந்தை சூர்ய தேவர் என்று தெரிந்ததும் கர்ணன் மகிழ்ச்சியடைந்தாலும், துரியோதனனிடம் இருந்த நட்பும் விசுவாசமும் காரணமாக பாண்டவர்களுடன் சேர அவர் மறுத்துவிட்டான் . உண்மையைச் சொன்னால், கர்ணன் மட்டுமே வாழ்நாள் முழுவதும் தர்மத்தைப் பின்பற்றினான்.
கிருஷ்ணர் பல சந்தர்ப்பங்களில் கர்ணனைப் புகழ்ந்தார்:
போரின் நடுவில், கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கர்ணன் உண்மையில் ஒரு உண்மையான போர்வீரன் என்றும், அவரை விட மிகச் சிறந்தவர் யாருமில்லை என்றும் கூறினார். "கடினமான காலங்கள் ஒருபோதும் நீடிக்காது, ஆனால் கடினமான மனிதர்கள்" என்ற பழமொழியை கர்ணன் நமக்கு நினைவூட்டுகிறார்.
மகாபாரதத்தில் இருந்த மற்றவர்களை விட கர்ணனின் வாழ்க்கையில் அதிக சோகங்கள் இருந்தன:
போரில்,கர்ணரின் அனைத்து மகன்களும், ஒருவரைத் தவிர, பாண்டவர்களால் கொல்லப்பட்டனர். கர்ணனின் வாழ்க்கை மாறி மாறி பல்வேறு சோகங்கள் மற்றும் தியாகங்களால் சூழப்பட்டது. அவர் தவறான அணுகுமுறையால் அழிக்கப்பட்டார், துரியோதனன் செய்வது தவறு என்று அவருக்குத் தெரியும், ஆனால் அவர் துரியோதனை முடிவில்லாமல் ஆதரித்த செயலில் ஈடுபட்டவர். கர்ணன் அனைவருக்கும் விசுவாசம் மற்றும் நன்றியுணர்வு கொண்டு இருந்தார்.
கர்ணன் இந்தியாவின் மன்னனாக வேண்டும் என்று பகவான் கிருஷ்ணர் கோரியிருந்தார்:
கிருஷ்ணரின் கூற்றுப்படி, போரைத் தவிர்ப்பதற்காக, அவர் கர்ணனை மன்னனாக ஆகும் படி கோரினார். தருமர் மற்றும் துரியோதன் இருவருக்கும் மூத்தவராக இருப்பதால் கர்ணன் அரியணைக்கு சரியான வாரிசு என்று அவர் வாதிட்டார். ஆனால் கர்ணன் இந்த வாய்ப்பை மறுத்துவிட்டார்.
குருக்ஷேத்திரப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை கர்ணன் எப்போதும் அறிந்திருந்தார்:
பாண்டவர்கள் போரை வெல்வார்கள் என்று உனக்கு எப்படி தெரியும் என்று கர்ணனிடம் கிருஷ்ணர் கேட்டார், அதற்கு அவர், "குருக்ஷேத்ரா ஒரு தியாகத் பூமியாகும். அர்ஜுனன் தலைமை பூசாரி, நீ-கிருஷ்ணர் தான் பிரதான தெய்வம். நான் (கர்ணன்), பீஷ்ம தேவர், துரோணாச்சார்யர், துரியோதனன் ஆகியோர் தான் தியாகம். ' இதைக் கண்டு நெகிழ்ந்த கிருஷ்ணர் கர்ணனிடம்,' நீங்கள் பாண்டவர்களில் சிறந்தவர் 'என்று கூறி அவர்களின் உரையாடலை முடித்தார்.
கர்ணன் கிருஷ்ணரின் படைப்பு என்று சில கோட்பாடுகள் கூறுகின்றன:
தியாகத்தின் உண்மையான அர்த்தத்தை உலகுக்குக் காண்பிப்பதற்காகவும், அவர்களின் தலைவிதியை ஒருவர் எவ்வாறு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் மக்களுக்கு உணர்த்தவும் கிருஷ்ணர் கர்ணனை உருவாக்கினார். துரதிர்ஷ்டம் அல்லது கெட்ட நேரங்கள் இருந்தபோதிலும், கர்ணன் ஆன்மீகம், தாராள மனப்பான்மை, பணிவு, கண்ணியம் மற்றும் சுய மரியாதை ஆகியவற்றில் தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருந்தார், மேலும் தனது அன்புக்குரியவர்களிடம் மரியாதை செலுத்தினார்.
கர்ணன் ராதேயா- ராதாவின் மகன் என்று நினைவுகூர விரும்பினான்.
கர்ணனை ஈன்றெடுத்த தாய் குந்தி, ஆனால் அதைக் தெரிந்து கொண்ட பிறகும், அவர் ராதாவின் மகனாகவே அறிய விரும்பினார். குந்தியின் மகனாய் அறிய அவர் விரும்பவில்லை.