Just In
- 1 min ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 29 min ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- 1 hr ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- 2 hrs ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
Don't Miss
- Sports அடுத்தடுத்த வீழ்ந்த 2 வீரர்கள்.. சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் நடந்த மாற்றம்.. ஜடேஜா கொடுத்த சர்ப்ரைஸ்!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- News தமிழகத்தின் 11 ஸ்டார் தொகுதிகளில் ஓட்டு சதவீதம் எவ்வளவு தெரியுமா? இதோ லிஸ்ட்
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- Movies GOAT BTS video: மாஸ்கோவில் GOAT.. சூட்டிங் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா கல்பாத்தி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கால் கட்டை விரல்களை இறந்த பின் ஏன் கட்டுகிறார்கள்?
இங்கு ஏன் கால் கட்டை விரல்களை இறந்த பின் கட்டுகிறார்கள் என்பது குறித்து கூறப்பட்டுள்ளது.
வீட்டில் யாராவது இறந்திருந்தால் நாம் இதை கண்டிப்பாக பார்த்திருப்போம். இறந்தவரது கால் கட்டை விரல்களை ஒரு சிறிய துணி கொண்டு கட்டுவார்கள். இது ஏன்? எதற்கு? என்பது பற்றி நம்மில் பலருக்கும் பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால், காலம், காலமாக இதை நாம் பின்பற்றி வருகிறோம்.
இதற்கான விடை என்ன என்பது குறித்தும். கூறப்படும் தகவல்கள் குறித்தும் நாம் இங்கு காணலாம்....
பிராணசக்தி!
ஒருவர் மரணமடைந்த பின் அவரது உடலில் இருந்து பிராணசக்தி உடலை விட்டு முற்றிலும் அகன்றுவிடுவதில்லை. அந்த உயிரானது உடலை சுற்றி இருந்து கொண்டே இருக்கும். இதன் காரணமாக தான் இறந்தவரது உடலை வடக்கு, தெற்காக வைக்க வேண்டும் என கூறுகின்றனர்.
ஏன் வடக்கு தெற்காக?
இறந்த உடலை அல்லது இறக்க போகும் நபர்களை வடக்கு தெற்காக வைப்பதால் உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த மாற்றங்களால் அவ்வுடலின் பிராணசக்தி ஆனது, உடனே அகன்று விடும் என கூறப்படுகிறது. மற்ற நிலைகளில் பிராணசக்தி மீண்டும் உட்புக முயலும் என்றும் கூறுகின்றனர். இதனால் ஏற்படும் சில தாக்கங்கள் இறந்த நபரின் உடலுக்கும், அவரை சுற்றி இருக்கும் நபர்களுக்கும் உகந்தது அல்ல எனவும் கூறப்படுகிறது.
கால்கள் அகலமாக திறந்தால்?
இறந்த நபரின் கால்கள் அகலமாக திறந்த நிலையில் இருந்தால். பின்புற துவார திறந்திருக்கும். இந்த நிலையில் பிரானசக்தியானது இந்த மூலாதாரம் வழியே மீண்டும் உட்புக முயலும். இதுவும் உடலுக்கும், சூழலுக்கும் உகந்தது அல்ல என கூறப்படுகிறது.
கால் கட்டு!
இதனால் தான் இறந்த நபரின் கால்கள் கட்டப்படுகின்றன. இதனால் மூலாதாரம் மூடப்படும். இதேபோல, யோகக்கிரியைகள் செய்ய நீங்கள் கால் விரல்களை கட்டினாலும் பின்புற துவாரம் இயல்பாக மூடிக் கோலும். இதனால் மீண்டும் பிராணசக்தி உட்புக வாய்ப்புகள் இன்றி போகும்.
மாந்திரீகம்!
மீண்டும் பிராண சக்தி உட்புகும் போது ஏற்படும் சில எதிர்மறை சக்திகள் தீய காந்த அலைகளை உண்டாக்கும் என்றும் அது அந்த உடலை மாந்திரீக செயல்களுக்கு பயன்படுத்தக்கூடும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.
இது போன்ற பல காரணங்கள் இருப்பதால் தான் இறந்த நபரின் கால் விரல்களை கட்டுகிறார்களாம்.