Latest Updates
-
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க
அரிய வகை கண் நோயினால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவனின் சோக கதை!
இப்படியும் ஒரு கொடிய நோய் இருக்குமா என்று பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையிலான ஒரு அரிய வகை கண் நோயால் தான் சிறுவன் ஒருவன் அவஸ்தைப்பட்டுள்ளான். இதுக்குறித்து தான் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமைச் சேர்ந்த 4 வயதைக் கொண்ட சாகர் டோர்ஜி என்னும் இளம் சிறுவனின் கதை தான் இது. இச்சிறுவனின் கதையைக் கேட்டால், நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பதை உணர்வீர்கள். இப்படியும் ஒரு கொடிய நோய் இருக்குமா என்று பலரையும் ஆச்சரியப்படுத்தும் வகையிலான ஒரு அரிய வகை கண் நோயால் தான் இச்சிறுவன் அவஸ்தைப்பட்டுள்ளான்.
அதுவும் அச்சிறுவனின் கண்கள் வீக்கமடைந்து, இரத்தக்கசிவு ஏற்பட்டு, இரத்தம் உறைந்து யாரும் பார்க்க முடியாத அளவில் பயங்கரமாக இருக்குமாம். இப்போது அச்சிறுவனின் கதையைக் காண்போம்.

விசித்திர நிலை
சாகர் என்னும் சிறுவனுக்கு பிலாட்ரல் ப்ராப்டோசிஸ் மற்றும் தீவிரமான மைலாய்டு லுகிமியா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையால், இச்சிறுவனின் விழிகள் பிதுங்கியவாறும், கடுமையான இரத்தப்போக்கினால் இரத்தம் உறைந்தும் இருக்கும்.

வைரலாக பரவிய கதை
இச்சிறுவனின் கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியதால், இச்சிறுவனைக் காப்பாற்றுவதற்கு அரசே முயற்சி மேற்கொண்டு, இச்சிறுவனை சிகிச்சைக்காக பெங்களூருக்கு மாற்றியது.

தீவிரமான மைலாய்டு லுகிமியா
மஜும்தார் ஷா புற்றுநோய் மையத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தான் இச்சிறுவனுக்கு தீவிரமான மைலாய்டு லுகிமியா என்னும் ஒருவகையான இரத்த புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும் இந்த வகை இரத்த புற்றுநோய் கண்களைத் தாக்குவது என்பது மிகவும் அரிது என்றும் மருத்துவர்கள் கூறினர்.

சிகிச்சை
அதோடு இச்சிறுவனுக்கு பிலேட்ரல் ப்ரோப்டோசிஸ் என்னும் விழி வீக்க பிரச்சனையால், பார்வையையும் இழந்திருந்தான். 5 மாதங்களுக்கு முன் தான், இச்சிறுவனுக்கு இருந்த அரிய நோய் கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தம்பியைக் காப்பாற்றிய சகோதரி
இச்சிறுவனுடைய சகோதரியின் எலும்பு மஜ்ஜையைக் கொண்டு தான் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிறுவன் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி, அதனால் தான் இச்சிறுவனின் எலும்பு மஜ்ஜை சகோதரியுடன் 30% ஒத்துப்போனது.

முற்றிலும் குணம்
தற்போது இச்சிறுவன் மருத்துவமைனையில் இருந்து வீடு திரும்ப, எவ்வித பிரச்சனையும் இல்லாமல், சந்தோஷமாக தன் பெற்றோருடன் வாழ்ந்து வருகிறான்.
குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள சிறுவன் நோய் தாக்கியவாறான புகைப்படங்கள் கிராபிக் செய்யப்பட்டவை.
All Image Sources



Click it and Unblock the Notifications