Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஜல்லிக்கட்டு போராளிகளிடம் இருந்து உலகம் கற்க வேண்டிய 10 விஷயங்கள்!
இங்கு ஜல்லிக்கட்டு போராளிகளிடம் இருந்து உலகம் கற்க வேண்டிய பத்து விஷயங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் உலகிற்கு இரு அடிகளில் எண்ணற்ற வாழ்வியல் பாடங்களை கற்றுக் கொடுத்தார். தமிழக இளைஞர்கள் ஐந்து நாட்களில் உலகிற்கு பல சமோக பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளனர். ஒவ்வொரு துளியும் ஒன்றாக சங்கத்து சமுத்திரமாக மாறினால் உரிமை கைக்கு எட்டும் கனி தான் நிரூபித்து காட்டியுள்ளனர்....

வயது ஒரு தடை அல்ல
போராடுவதற்கு வயது ஒரு தடை அல்ல. ஆறில் இருந்து, அறுபது வரை எல்லாரும் பங்கேற்று ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

மனதில் இருப்பது தான் தவறு
ஊனம் உடலில் இருப்பதை விட, மனதில் இருப்பது தான் தவறு. ஊனத்தை கடந்து, போராட்டத்திற்கு எழுச்சி கொடுத்த இளைஞர்.

ஆயிரத்தில் ஒருத்தி
ஆயிரம் ஆண்களுக்கு மத்தியில் ஒரு பெண் பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதை உலகிற்கே பாடமாக காண்பித்த இளைஞர்கள்.

தன் கையே தனக்கு உதவி
தன் கையே தனக்கு உதவி என நிரூபித்தனர். அரசு விளக்குகளை ஆப் செய்த மறுநொடி, மொபைல் டார்ச்சை ஆன் செய்து பிரம்மாண்டத்தை காட்டிய இளைஞர்கள்.

நாகரீகம்!
குப்பைகளை அகற்றி, தாங்கள் இருந்த இடத்தை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக் கொண்ட மாணவர்கள். ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தனர்.

ஜாதி, மதத்தை கடந்த போராட்டம்!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நேரத்திலும் இஸ்லாமிய தோழர்கள் வணங்கும் நேரத்தில் கோஷங்களை நிறுத்தி அவர்களுக்காக அமைதி காத்தனர்.

சட்டம் ஒழுங்கு
சட்டம் ஒழுங்கு மக்களுக்கு எதிரி அல்ல என நிரூபித்த போராட்டம்.

பகிர்வு!
உணவை ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து, நல்லுணர்வை எடுத்துக் காட்டிய போராட்டம்.

பெண்கள் முன்னின்று நடத்திய போராட்டம்.
பெண்கள் முன்னின்று நடத்திய போராட்டம். கர்ப்பிணி பெண்கள் முதல், பச்சிளம் குழந்தைகளை ஏந்தியபடி என பல பெண்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஒவ்வொரு துளியும் ஒன்றாக சங்கமித்து
எல்லைகள் கடந்து, ஒவ்வொரு துளியும் ஒன்றாக சங்கமித்து சமுத்திரமாக மாறினால் வெற்றி நிச்சயம் என்பதை நிரூபித்த பெரும் போராட்டம்.



Click it and Unblock the Notifications
