Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
இதுக்கே ஷாக் ஆயிட்டா எப்படி, இன்னும் நீங்க நம்பி ஏமார்ந்த விஷயம் நிறைய இருக்கு!
இங்கு நாம் அறிந்த தமிழ் பழமொழிகளின், உண்மையான வடிவங்கள் கூறப்பட்டுள்ளன.
திண்ணையில் உட்கார்ந்திருக்கும் பாட்டி, தாத்தா தொட்டதற்கு எல்லாம் ஒரு பழமொழி சொல்லி பாராட்டுவார்கள் அல்லது திட்டுவார்கள். சிலவன சுவாரஸ்யமாக இருக்கும், சிலவன எதுக்குடா வாயக்கொடுத்து மாட்டிக்கிட்டோம் என்பது போல இருக்கும்.
பழமொழிகள் என்பது பொன்னான வாக்கியங்கள். ஆனால், அவை எல்லாம் எழுதியப்படி தான் உரைக்கிறோமா? என்பது தான் பெரிய கேள்விக்குறி. ஆம், நாம் இன்று கேட்கும், பேசும் பழமொழிகள் பலவன வார்த்தைகள் மருவி பயன்படுத்திவரப்படுகின்றன.
அவற்றில் சிலவன பற்றி இங்கே காணலாம்...

#1
பழமொழி:- ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்யலாம்.
உண்மை வாக்கியம்:- ஆயிரம் பேருக்கு போய் சொல்லி திருமணம் நடத்தலாம்.

#2
பழமொழி:- ஆடி காற்றில் அம்மியும் பறக்கும்.
உண்மை வாக்கியம்:- ஆடி காற்றில் அம்மையும் பறக்கும்.

#3
பழமொழி:- மண் குதிரையை நம்பி, ஆற்றில் இறங்காதே.
உண்மை வாக்கியம்:- மங்கு திரையை நம்பி, ஆற்றில் இறங்காதே.

#4
பழமொழி:- சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
உண்மை வாக்கியம்:- சோழியன் குடுமி, சும்மாடு ஆகுமா?

#5
பழமொழி:- களவும் கற்று மற
உண்மை வாக்கியம்:- களவும் கத்தும் மற.

#6
பழமொழி:- ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்.
உண்மை வாக்கியம்:- ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன்.

#7
பழமொழி:- அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
உண்மை வாக்கியம்:- அர்ப்பணித்து வாழ்ந்து வந்தால், அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.

#8
பழமொழி:- நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
உண்மை வாக்கியம்:- நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு.

#9
பழமொழி:- குரைக்கிற நாய் கடிக்காது.
உண்மை வாக்கியம்:- குழைகிற நாய் கடிக்காது.

#10
பழமொழி:- கல்லை கண்டால் நாயை காணோம், நாயைக் கண்டால் கல்லை காணோம்.
உண்மை வாக்கியம்:- கல்லை கண்டால் நாயகனை காணோம், நாயகனை கண்டால் கல்லை காணோம்.

#11
பழமொழி:- கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
உண்மை வாக்கியம்:- கழு தைக்க தெரியுமாம், கற்பூர வாசனை.

#12
பழமொழி:- ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே.
உண்மை வாக்கியம்:- நல்லவை ஆவதும் பெண்ணாலே, தீயவை, அழிவதும் பெண்ணாலே.

#13
பழமொழி:- ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்.
உண்மை வாக்கியம்:- ஆயத்தில் ஒரு கால், செயத்தில் ஒரு கால்.

#14
பழமொழி:- ஆத்துல போட்டாலும், அளந்து போடணும்.
உண்மை வாக்கியம்:- அகத்தில் போட்டாலும், அறிந்து போடணும்.

#15
பழமொழி:- அடிமேல், அடிவைத்தால் அம்மியும் நகரும்.
உண்மை வாக்கியம்:- அடிமேல், அடிவைத்தால், அம்மியும் தகரும்.

#16
பழமொழி:- பழம் நழுவி பாலில் விழுந்தது போல.
உண்மை வாக்கியம்:- பழம் நழுவி பாகில் விழுந்தது போல.

#17
பழமொழி:- வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை.
உண்மை வாக்கியம்:- வாக்கு தெரிந்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கு தெரிந்தவனுக்கு போலீஸ் வேலை.

#18
பழமொழி:- கண்டதை கற்க பண்டிதன் ஆவான்.
உண்மை வாக்கியம்:- கண்டு அதை கற்க பண்டிதன் ஆவான்.

#19
பழமொழி:- கப்பல் கவிழ்ந்தாலும், கன்னத்தில் கை வைக்காதே.
உண்மை வாக்கியம்:- கப்பலே கவிழ்ந்தாலும், கன்னக்கோலில் கை வைக்காதே.



Click it and Unblock the Notifications