Just In
- 51 min ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 1 hr ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
- 2 hrs ago எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Don't Miss
- Movies பிரபல யூட்யூபர் 27 வயதில் மரணம்.. அப்படி என்ன ஆச்சு?.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஷாக்
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இதுக்கே ஷாக் ஆயிட்டா எப்படி, இன்னும் நீங்க நம்பி ஏமார்ந்த விஷயம் நிறைய இருக்கு!
இங்கு நாம் அறிந்த தமிழ் பழமொழிகளின், உண்மையான வடிவங்கள் கூறப்பட்டுள்ளன.
திண்ணையில் உட்கார்ந்திருக்கும் பாட்டி, தாத்தா தொட்டதற்கு எல்லாம் ஒரு பழமொழி சொல்லி பாராட்டுவார்கள் அல்லது திட்டுவார்கள். சிலவன சுவாரஸ்யமாக இருக்கும், சிலவன எதுக்குடா வாயக்கொடுத்து மாட்டிக்கிட்டோம் என்பது போல இருக்கும்.
பழமொழிகள் என்பது பொன்னான வாக்கியங்கள். ஆனால், அவை எல்லாம் எழுதியப்படி தான் உரைக்கிறோமா? என்பது தான் பெரிய கேள்விக்குறி. ஆம், நாம் இன்று கேட்கும், பேசும் பழமொழிகள் பலவன வார்த்தைகள் மருவி பயன்படுத்திவரப்படுகின்றன.
அவற்றில் சிலவன பற்றி இங்கே காணலாம்...
#1
பழமொழி:- ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்யலாம்.
உண்மை வாக்கியம்:- ஆயிரம் பேருக்கு போய் சொல்லி திருமணம் நடத்தலாம்.
#2
பழமொழி:- ஆடி காற்றில் அம்மியும் பறக்கும்.
உண்மை வாக்கியம்:- ஆடி காற்றில் அம்மையும் பறக்கும்.
#3
பழமொழி:- மண் குதிரையை நம்பி, ஆற்றில் இறங்காதே.
உண்மை வாக்கியம்:- மங்கு திரையை நம்பி, ஆற்றில் இறங்காதே.
#4
பழமொழி:- சோழியன் குடுமி சும்மா ஆடுமா?
உண்மை வாக்கியம்:- சோழியன் குடுமி, சும்மாடு ஆகுமா?
#5
பழமொழி:- களவும் கற்று மற
உண்மை வாக்கியம்:- களவும் கத்தும் மற.
#6
பழமொழி:- ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்.
உண்மை வாக்கியம்:- ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன்.
#7
பழமொழி:- அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்.
உண்மை வாக்கியம்:- அர்ப்பணித்து வாழ்ந்து வந்தால், அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.
#8
பழமொழி:- நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
உண்மை வாக்கியம்:- நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு.
#9
பழமொழி:- குரைக்கிற நாய் கடிக்காது.
உண்மை வாக்கியம்:- குழைகிற நாய் கடிக்காது.
#10
பழமொழி:- கல்லை கண்டால் நாயை காணோம், நாயைக் கண்டால் கல்லை காணோம்.
உண்மை வாக்கியம்:- கல்லை கண்டால் நாயகனை காணோம், நாயகனை கண்டால் கல்லை காணோம்.
#11
பழமொழி:- கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை.
உண்மை வாக்கியம்:- கழு தைக்க தெரியுமாம், கற்பூர வாசனை.
#12
பழமொழி:- ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே.
உண்மை வாக்கியம்:- நல்லவை ஆவதும் பெண்ணாலே, தீயவை, அழிவதும் பெண்ணாலே.
#13
பழமொழி:- ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்.
உண்மை வாக்கியம்:- ஆயத்தில் ஒரு கால், செயத்தில் ஒரு கால்.
#14
பழமொழி:- ஆத்துல போட்டாலும், அளந்து போடணும்.
உண்மை வாக்கியம்:- அகத்தில் போட்டாலும், அறிந்து போடணும்.
#15
பழமொழி:- அடிமேல், அடிவைத்தால் அம்மியும் நகரும்.
உண்மை வாக்கியம்:- அடிமேல், அடிவைத்தால், அம்மியும் தகரும்.
#16
பழமொழி:- பழம் நழுவி பாலில் விழுந்தது போல.
உண்மை வாக்கியம்:- பழம் நழுவி பாகில் விழுந்தது போல.
#17
பழமொழி:- வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை.
உண்மை வாக்கியம்:- வாக்கு தெரிந்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கு தெரிந்தவனுக்கு போலீஸ் வேலை.
#18
பழமொழி:- கண்டதை கற்க பண்டிதன் ஆவான்.
உண்மை வாக்கியம்:- கண்டு அதை கற்க பண்டிதன் ஆவான்.
#19
பழமொழி:- கப்பல் கவிழ்ந்தாலும், கன்னத்தில் கை வைக்காதே.
உண்மை வாக்கியம்:- கப்பலே கவிழ்ந்தாலும், கன்னக்கோலில் கை வைக்காதே.