Latest Updates
-
150 ஆண்டுக்கு மேல் வாழும் பாகிஸ்தானின் ரகசிய இனக்குழு பெண்கள் - இவர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன தெரியுமா? -
கோதுமை ரவா பொங்கலும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குதூகலமான நாளாக இருக்குமாம் -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-செவ்வாய்: மே 10 வரை இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
குருபகவான் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
கர்நாடகா பேமஸ் குடைமிளகாய் தக்காளி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
உங்க முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க! -
வெயில் காலத்தை சமாளிக்க உதவும் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தை மாற்றப்போகும் ஸ்டார் வேட்பாளர்களும் அவர்களின் தொகுதிகளும் -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடங்களில் மருந்துகளை வெச்சு யூஸ் பண்ணாதீங்க, இல்ல மருத்துவ செலவு அதிகரிக்கும்!
இறந்த குழந்தை, இறுதி சடங்கிற்கு ஒரு நிமிடத்திற்கு முன் உயிர் பெற்ற அதிசயம்!
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக செவிலியர்கள் கூற, இறுதி சடங்கிற்கு ஒரு நிமிடத்திற்கு முன் குழந்தை உயிருடன் இருப்பது தெரிய வந்த கதை.
நல்ல ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கத் தான் ஒவ்வொரு பெற்றோரது கனவாகவும் இருக்கும். ஒருவேளை பிரசவித்த கர்ப்பிணி, குழந்தையை குறைப்பிரசவத்தில் பெற்றெடுத்தால், அது அப்பெண் மற்றும் குழந்தையின் தந்தைக்கு பெரும் மன அழுத்தத்தைத் தரும்.

இந்த வழக்கில் குறைப்பிரசவத்தில் பிறந்த புதிய குழந்தை இறந்துவிட்டதாக, பிரசவம் பார்த்த செவிலியர்கள் கூறிவிட்டனர். அதுவும் மருத்துவர் இல்லாத நேரத்தில் குழந்தை பிறந்ததோடு, மருத்துவர் பரிசோதித்து சொல்லாமலேயே அம்மாதிரியான முடிவை தெரிவித்துவிட்டனர்.
அதிர்ஷ்டவசமாக அக்குழந்தைக்கு இறுதி சடங்கை செய்ய ஆரம்பிக்கும் போது குடும்ப உறுப்பினர்கள் சரியாக கவனித்ததால், குழந்தை உயிருடன் இருந்தது தெரிய வந்தது. இந்த கதையை விரிவாக தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அரசு மருத்துவமனை
ராஜஸ்தானின் புண்டியில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் பிரசவ வலி அதிகமானதன் காரணமாக, மகப்பேறு மருத்துவர் இல்லாமலேயே வெறும் செவிலியர்களின் உதவியுடன் குறைப்பிரசவத்தில் குழந்தைப் பிறந்தது.

22-24 வார குழந்தை
இந்த குழந்தை கருவுற்று 22-24 வாரங்கள் தான் ஆகியிருக்கும். அதற்குள் அந்த குழந்தை பிறந்துவிட்டது. குழந்தை பிறக்கும் போது, அதன் எடை 350-400 கிராம் தான் இருக்கும்.

குழந்தை இறந்துவிட்டதாக கூறிய செவிலியர்
பிரசவத்தின் போது குழந்தை இறந்துவிட்டதாக செவிலியர்கள் தெரிவித்துவிட்டனர். அதுவும் அவர்கள் குழந்தை பிறந்த பின், அதற்கு செய்ய வேண்டிய முறைய சோதனைகள் ஏதும் செய்யாமல், குழந்தை அசையவில்லை மற்றும் மூச்சு விடவும் இல்லை என்பதை மட்டும் பார்த்து, குழந்தை இறந்துவிட்டதாக முடிவெடுத்துவிட்டனர்.

குடும்ப உறுப்பினர்களிடம் இறந்த குழந்தை ஒப்படைப்பு
செவிலியர்கள் குடும்ப உறுப்பினர்களிடம், குழந்தையிடம் எவ்விட அசைவும் இல்லை, எனவே குழந்தை இறந்துவிட்டது, மேற்படி செய்ய வேண்டியதை செய்து கொள்ளுங்கள் என்று கூறி இறந்த குழந்தையை ஒப்படைத்துவிட்டனர்.

குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் சுவாசம்
இறந்துவிட்ட குழந்தைக்கு இறுதி சடங்கு நடத்துவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன், குடும்ப உறுப்பினர்கள் குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் மூச்சுவிடுவதைப் பார்த்து, குழந்தை உயிருடன் தான் உள்ளது என்பதை அறிந்து கொண்டனர். ஒரு பக்கம் இச்சம்பவம் அவர்களுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தாலும், மறுபக்கம் தவறாக கூறிய செவிலியர்களின் மீது அளவில்லாத கோபத்துடன் இருந்தனர்.

மருத்துவமனை மீது வழக்கு
குழந்தையின் குடும்பத்தினர் மருத்துவமனையை முற்றுகையிட்டு, நீதி வேண்டுமென்று போராடினர். பின் பொறுப்பின்றி நடந்து கொண்ட செவிலியர்களின் செயலால், மருத்துவமனை மீது வழக்கு பதியப்பட்டது.



Click it and Unblock the Notifications











