Latest Updates
-
12 வருடம் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: ஜூன் 02 முதல் இந்த 4 ராசிக்கு கஷ்ட காலம் தொடங்குது.. உஷார்.. -
வெள்ளைப்பூசணி இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
ஜூன் மாதம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஆன்மீக குருக்கள் என்ற பெயரில் நடக்கும் அதிர்ச்சி மோசடி! உங்கள் பணத்தை இப்படித்தான் திருடுகிறார்களா? -
உங்க தலைமுடி தேங்காய் நார் போல இருக்கா? அப்ப தயிரை வெச்சு இப்படி ஹேர் மாஸ்க் போடுங்க.. -
முன்னாள் காதலர் வாழ்க்கையில் முக்கிய மாற்றம்! சமூக வலைதளங்களில் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய அந்த 'முக்கிய' நாகரிகம் என்ன? -
ராகுவின் பிடியில் இருந்து விடுதலை.. மே 31 முதல் இந்த 3 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறங்க.. -
செஃப் அருணா ஸ்டைல் மாங்காய் ரசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கடும் வெயிலில் வீடே கொதிக்குதா? இந்த வாஸ்து செடிகளை வைத்தால் குளிர்ச்சியும் பணவரவும் நிச்சயம்! -
Summer Eye Health: கோடையில் சந்திக்கும் கண் பிரச்சனைகளை தடுப்பது எப்படி? - விளக்கும் டாக்டர்!
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடங்களில் மருந்துகளை வெச்சு யூஸ் பண்ணாதீங்க, இல்ல மருத்துவ செலவு அதிகரிக்கும்!
Vastu Tips In Tamil: நாம் அனைவருமே நமது வீட்டில் குறிப்பிட்ட மருந்து மாத்திரைகளை எப்போதும் ஸ்டாக் வைத்திருப்போம். அதுவும் தற்போது பெருகி வரும் சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனையால், வீட்டிற்கு ஒருவராவது இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு, தினசரி மருந்து மாத்திரைகளை எடுத்து வர நேரிடுகிறது.
இப்படி எடுக்கும் மருந்து மாத்திரைகளை நமது வீட்டில் சரியான இடத்தில், சரியான திசையில் வைத்து பயன்படுத்த வேண்டும். ஒருவேளை தவறான இடத்தில் வைத்து பயன்படுத்தினால், அது வாஸ்து தோஷத்திற்கு வழிவகுக்கும். இதன் விளைவாக ஆரோக்கிய பிரச்சனைகள் தொடர்ந்து அதிகரிப்பதோடு, மருத்துவ செலவுகளையும் அதிகம் சந்திக்க நேரிடும்.

ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தின்படி, ஒருவர் மருந்துகளைத் தவறான திசையில் வைத்தால், அவரால் நோய்களிலிருந்து ஒருபோதும் விடுபட முடியாது. அப்படி கீழே வீட்டில் எந்த இடத்தில் மருந்துகளை வைத்து பயன்படுத்தக்கூடாது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த இடத்தில் மருந்துகளை வைக்கக்கூடாது?
* வாஸ்துப்படி, வீட்டின் வடக்கு மற்றும் மேற்கு திசைகளில் மருந்துகளை வைத்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது அந்த மருந்து எடுப்பவரை கடுமையான நோய்க்கு உள்ளாக்கும். அதோடு வாழ்வில் பல பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும்.
* வாஸ்துப்படி, மருந்துகளை வைக்க என்று எப்போதும் ஒரு தனி இடத்தை ஒதுக்காதீர்கள். இல்லாவிட்டால் ஒன்றன்பின் ஒன்றாகப் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் வாஸ்துப்படி வீட்டினுள் முதலுதவி பெட்டியை வைத்திருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அந்த வீட்டில் எப்போதும் நோய்கள் சூழ்ந்திருக்கும்.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, மருந்துகளை எப்போதும் படுக்கைக்கு அருகிலோ அல்லது தலைக்கு அருகிலோ வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது ராகு-கேது தோஷத்தை ஏற்படுத்தும். இதன் விளைவாக அந்நபர் நோய்களைத் தவிர வாழ்வில் பல பிரச்சனைகளை அடுத்தடுத்து சந்திக்க நேரிடும்.
* முக்கியமாக மருந்துகளை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த திசையில் மருந்துகளை வைத்து பயன்படுத்தினால், எப்போதும் ஆரோக்கிய பிரச்சனை தீராது. அதுமட்டுமின்றி, வாழ்நாள் முழுவதும் இந்த பிரச்சனையை சந்திக்க நேரிடும். மேலும் அந்த வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தி மருத்துவ செலவுகளை அதிகரித்துவிடும்.
* பலர் தங்கள் வீட்டின் சமையலறையில் முதலுதவி பெட்டியை வைத்திருப்பார்கள். ஆனால் வாஸ்துப்படி, சமையலறையில் மருந்து பெட்டியை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது ஆரோக்கியத்தில் தான் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
எந்த இடத்தில் மருந்துகளை வைக்கலாம்?
* வாஸ்துப்படி, மருந்துகளை வீட்டின் வடகிழக்கு திசையில் வைக்கலாம். இதனால் நோய்களில் இருந்து விரைவில் விடுபடலாம். மேலும் கிழக்கு திசைகளிலும் மருந்துகளை வைத்து பயன்படுத்தலாம்.
* அதுவும் வடகிழக்கு திசையில் மருந்துகளை வைப்பதாக இருந்தால், பூஜை அறைக்கு அருகில் வைத்து மருந்துகளை பயன்படுத்தாதீர்கள். இல்லாவிட்டால் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து மருந்துகளை எடுக்க வேண்டிய சூழல் உருவாகும்.
* வீட்டின் ஓனர் தங்களின் மருந்துகளை தென்மேற்கு திசையில் வைத்து பயன்படுத்தலாம். ஆனால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் மருந்துகளை வைத்தால், சாதகமான பலன்கள் கிடைக்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

