Latest Updates
-
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மொறுமொறு ராகி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மோசமான பலன்களை அனுபவிக்கப் போறாங்களாம் -
ஜூலை 07-ல் வக்ர நிலையில் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 6 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
குருபகவானின் அஸ்தமனத்தால் ஆகஸ்ட் மாதம் வரை கஷ்டப்படப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
மதுரை ஸ்பெஷல் தக்காளி கார சட்னி ரெசிபி - காரசாரமா இப்படி செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் அதிகமா சாப்பிடுவாங்க -
இந்த விரலில் தங்க மோதிரம் போட்டா அவங்க வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் எப்போதும் போகாதாம் - எந்த விரலில் போடணும்?
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
Chanakya Niti: பண்டைய இந்தியவின் சிறந்த அறிஞர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஆச்சார்ய சாணக்கியர். சாணக்கியர் ஒரு சிறந்த இராஜதந்திரி, அறிஞர் மற்றும் பொருளாதாரம் என பல துறைகளில் நிபுணராக விளங்கினார். மனித வாழ்க்கை தொடர்பான அனைத்து அம்சங்களையும் அவர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிட்டுள்ளார். வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு தனது சாணக்கிய நீதி மூலம் பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

சாணக்கியரின் புகழ் பெற்ற நூலான சாணக்கிய நீதியில் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தனிப்பட்ட வாழ்க்கை, வேலை, தொழில், உறவுகள், நட்பு, எதிரிகள் என வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விளக்கியுள்ளார். சாணக்கியர் கூறும் இந்தக் கருத்துக்கள் சில சமயங்களில் கடுமையானதாகத் தோன்றினாலும், அவை ஒருவருக்குச் சரியானது எது, தவறானது எது என்பதற்கான வேறுபாட்டை உணர்த்துகின்றன.
சாணக்கியரின் நீதிநெறிகள் மனிதர்களை வாழ்க்கையில் வெற்றிபெறத் தூண்டுகின்றன. ஆச்சார்ய சாணக்கியரின் கருத்துப்படி, குறிப்பிட்ட குணமுள்ள பெண்களை மணக்கும் ஒருவரின் தலைவிதி சிறப்பானதாக அமையும். இந்த குணமுள்ள பெண்கள் ஆண்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருபவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த குணமுள்ள பெண்கள் கணவருக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டுவருவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடிய பெண்கள்
சாணக்கிய நீதியின் படி, பெண்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகக் கருதப்படுகிறார்கள். அவர்களின் உணர்ச்சிகள் எந்தளவுக்கு அதிகம் என்றால், மகிழ்ச்சியோ அல்லது துயரமோ, எந்த உணர்வாக இருந்தாலும் அவர்கள் முதலில் கண்ணீர் விடுகிறார்கள். ஆனால், அத்தகைய பெண்களிடம் ஒரு சிறப்பு உள்ளது. எதற்கெடுத்தாலும் அழுது புலம்பும் பெண்களின் இந்த இயல்பு சற்று விசித்திரமானதாகத் தோன்றலாம். இருப்பினும், அத்தகைய பெண்களை மணம் முடிப்பவரின் தலையெழுத்து சிறப்பானதாக அமையும் என்று ஆச்சார்ய சாணக்கியர் கூறுகிறார்.
கண்ணீர் விடும் பெண்களின் சிறப்பு
சாணக்கியரின் கருத்துப்படி, ஆண்களை விட பெண்களுக்கு அதிக சகிப்புத்தன்மை உண்டு. ஒரு பெண் துயரத்தால் கண்ணீர் விடுகிறார் என்றால், அவர் பலவீனமானவர் என்று அர்த்தமல்ல. ஒவ்வொரு ஆணும் அத்தகைய பெண்ணை அவசியம் மதிக்க வேண்டும். சாணக்கியரின் கூற்றுப்படி, இத்தகைய பெண்கள் உண்மையான மற்றும் உயர்ந்த சிந்தனைகளைக் கொண்டிருப்பார்கள். மேலும் மனம் விட்டுப் பேசுபவர்கள், கண்ணீர் விடுபவர்கள் அல்லது தங்கள் காதலன் அல்லது கணவனை விட்டுப் பிரிய விரும்பாத பெண்கள் ஆகியோர் குடும்பத்திற்கு மிகவும் ஏற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள். மென்மையான இதயம் கொண்ட பெண்கள் அனைவரின் உணர்வுகளையும் மதிப்பவர்களாக இருப்பார்கள். எனவே இத்தகைய பெண்களை ஆண்கள் அவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது என்று 'சாணக்கிய நீதி' கூறுகிறது.
பெண்களின் கண்ணீரில் பெரிய சக்தி உள்ளது
சாணக்கியரின் கூற்றுப்படி, எந்தத் தவறும் செய்யாத போது கண்ணீர் விடும் பெண்ணிடம் தாய்மை உணர்வு மேலோங்கி இருக்கும். இந்த நற்பண்பின் காரணமாக, அத்தகைய பெண்கள் குடும்பத்திலுள்ள அனைவருடனும் இணக்கமாகப் பழகுவார்கள். பெண்களின் அழுகை மற்றும் கூக்குரல் பல வகையான தீவிர நோய்களைக் குணப்படுத்துவதாகவும், அழுகையானது மனதிற்கு நிம்மதியையும் மன அழுத்தத்திலிருந்து விடுதலையையும் அளிக்குமென்று சாணக்கியர் கூறுகிறார்.
அழும் பெண்கள் ஒருபோதும் பிறர் மனதை நோகடிப்பதில்லை. அவர்கள் எப்போதும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறார்கள். பசியுடன் வருபவர்களுக்கு உணவளிக்காமல் தாங்கள் உண்ணாத பண்பு கொண்டவர்கள் அவர்கள் ஒருபோதும் மற்றவர்களை பசியுடன் இருக்க அனுமதிக்க மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications
