Latest Updates
-
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்..
ஜம்மு-காஷ்மீர் குறித்த சில வியப்பூட்டும் உண்மைகள்!
இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஓர் அழகான மாநிலம் தான் ஜம்மு-காஷ்மீர். இந்தியாவிலேயே மிகவும் அற்புதமான இடம் என்றாலும் அது காஷ்மீர் தான். இதற்கு பனிகள் நிறைந்த மலைப்பகுதியான இமயமலைத் தொடரில் அமைந்திருப்பதும் ஓர் காரணம்.
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த இடத்திற்கு செல்ல வேண்டுமென்ற ஆசை இருக்கும்.
மேலும் இம்மாதிரியான ஓர் அற்புதமான இடத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது எனலாம். இதன் அழகை வர்ணிக்கும் பலருக்கும், இந்த ஜம்மு-காஷ்மீர் குறித்த சில விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை அழகிய ஜம்மு-காஷ்மீர் குறித்த சில வியப்பூட்டும் உண்மைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

இரண்டு தலைநகரங்கள்
ஜம்மு-காஷ்மீருக்கு இரு வேறு தலைநகரங்கள் உள்ளன. அதில் கோடையில் ஸ்ரீநகர் தலைநகராகவும், குளிர்காலத்தில் ஜம்மு தலைநகராகவும் இருக்கும்.

கல்வியறிவு
இந்தியா மற்றும் பாகிஸ்தானை விட அதிகமான அளவில் காஷ்மீரில் கல்வியறிவு கொண்டவர்களின் விகிதம் அதிகம் என்பது தெரியுமா!

ஆர்டிக்கிள் 370
ஆர்டிக்கிள் 370 என்னும் சிறப்புச் சட்டம் காஷ்மீரில் மட்டும் உள்ளது. அது என்னவெனில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் இம்மாநிலத்தில் நிலங்களை வாங்க முடியாது.

குடியுரிமை ரத்து செய்யப்படும்
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பெண், வெளி மாநிலத்தை அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால், அம்மாநிலத்தின் குடியுரிமை உடனடியாக ரத்து செய்யப்படும். ஆனால் இப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள், வெளி மாநிலத்தை அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்தால், நிலம் வாங்க முடியும்.

பல்வேறு மத மக்கள்
இம்மாநிலத்தின் காஷ்மீர் பகுதியில் முஸ்லீம்களும், ஜம்மு பகுதியில் இந்துக்களும், லடாக் பகுதியில் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் தான் அதிகம் உள்ளனர்.

எல்லைகள்
ஜம்மு மற்றும் காஷ்மீர் சீனா மற்றும் பாகிஸ்தானை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இருவேறு நாடுகளின் எல்லைகளைக் கொண்ட ஒரே மாநிலம் என்றால் அது ஜம்மு-காஷ்மீர் தான்.

புவியின் சொர்க்கம்
மிக அழகிய பள்ளத்தாக்குகளையும், ஏரிகளையும் கொண்டுள்ளதால், காஷ்மீர் புவியின் சொர்க்கம் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. இதில் இமயமலையில் இருந்து பாயும் மிகப்பெரிய ஜீலம் ஆறு காஷ்மீர் வழியாக பாய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தனிக்கொடி
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திற்கு இல்லாத ஒன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமே உள்ளது. அது இம்மாநிலத்திற்கு என்று தனிக்கொடி இருப்பது.

சட்டமன்ற பதவிக்காலம்
இந்தியாவில் மற்ற மாநிலங்களின் சட்டமன்ற பதவிக்காலம் 5 ஆண்டுகள் தான். ஆனால் ஜம்மு-காஷ்மீரிலோ சட்டமன்ற பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும்.

சுய ஆட்சி
இந்திய அரசியலமைப்பின் 370 ஆவது சட்டப்பிரிவின் படி, இம்மாநிலம் சுய ஆட்சியைக் கொண்டுள்ளது. அதில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம் ஆகிய துறைகளைத் தவிர்த்து, மற்ற துறைகளில் இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்படும் எந்தச் சட்டமும் காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி இம்மாநிலத்தில் செல்லாது.



Click it and Unblock the Notifications