Just In
- 25 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
Don't Miss
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலை காட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஜம்மு-காஷ்மீர் குறித்த சில வியப்பூட்டும் உண்மைகள்!
இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள ஓர் அழகான மாநிலம் தான் ஜம்மு-காஷ்மீர். இந்தியாவிலேயே மிகவும் அற்புதமான இடம் என்றாலும் அது காஷ்மீர் தான். இதற்கு பனிகள் நிறைந்த மலைப்பகுதியான இமயமலைத் தொடரில் அமைந்திருப்பதும் ஓர் காரணம்.
உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த இடத்திற்கு செல்ல வேண்டுமென்ற ஆசை இருக்கும்.
மேலும் இம்மாதிரியான ஓர் அற்புதமான இடத்தை உலகில் வேறு எங்கும் காண முடியாது எனலாம். இதன் அழகை வர்ணிக்கும் பலருக்கும், இந்த ஜம்மு-காஷ்மீர் குறித்த சில விஷயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை அழகிய ஜம்மு-காஷ்மீர் குறித்த சில வியப்பூட்டும் உண்மைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இரண்டு தலைநகரங்கள்
ஜம்மு-காஷ்மீருக்கு இரு வேறு தலைநகரங்கள் உள்ளன. அதில் கோடையில் ஸ்ரீநகர் தலைநகராகவும், குளிர்காலத்தில் ஜம்மு தலைநகராகவும் இருக்கும்.
கல்வியறிவு
இந்தியா மற்றும் பாகிஸ்தானை விட அதிகமான அளவில் காஷ்மீரில் கல்வியறிவு கொண்டவர்களின் விகிதம் அதிகம் என்பது தெரியுமா!
ஆர்டிக்கிள் 370
ஆர்டிக்கிள் 370 என்னும் சிறப்புச் சட்டம் காஷ்மீரில் மட்டும் உள்ளது. அது என்னவெனில் வெளியூரைச் சேர்ந்தவர்கள் இம்மாநிலத்தில் நிலங்களை வாங்க முடியாது.
குடியுரிமை ரத்து செய்யப்படும்
ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த பெண், வெளி மாநிலத்தை அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டால், அம்மாநிலத்தின் குடியுரிமை உடனடியாக ரத்து செய்யப்படும். ஆனால் இப்பகுதியைச் சேர்ந்த ஆண்கள், வெளி மாநிலத்தை அல்லது வெளிநாட்டைச் சேர்ந்த பெண்களைத் திருமணம் செய்தால், நிலம் வாங்க முடியும்.
பல்வேறு மத மக்கள்
இம்மாநிலத்தின் காஷ்மீர் பகுதியில் முஸ்லீம்களும், ஜம்மு பகுதியில் இந்துக்களும், லடாக் பகுதியில் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களும் தான் அதிகம் உள்ளனர்.
எல்லைகள்
ஜம்மு மற்றும் காஷ்மீர் சீனா மற்றும் பாகிஸ்தானை எல்லைகளாகக் கொண்டுள்ளது. இருவேறு நாடுகளின் எல்லைகளைக் கொண்ட ஒரே மாநிலம் என்றால் அது ஜம்மு-காஷ்மீர் தான்.
புவியின் சொர்க்கம்
மிக அழகிய பள்ளத்தாக்குகளையும், ஏரிகளையும் கொண்டுள்ளதால், காஷ்மீர் புவியின் சொர்க்கம் என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. இதில் இமயமலையில் இருந்து பாயும் மிகப்பெரிய ஜீலம் ஆறு காஷ்மீர் வழியாக பாய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தனிக்கொடி
இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திற்கு இல்லாத ஒன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமே உள்ளது. அது இம்மாநிலத்திற்கு என்று தனிக்கொடி இருப்பது.
சட்டமன்ற பதவிக்காலம்
இந்தியாவில் மற்ற மாநிலங்களின் சட்டமன்ற பதவிக்காலம் 5 ஆண்டுகள் தான். ஆனால் ஜம்மு-காஷ்மீரிலோ சட்டமன்ற பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும்.
சுய ஆட்சி
இந்திய அரசியலமைப்பின் 370 ஆவது சட்டப்பிரிவின் படி, இம்மாநிலம் சுய ஆட்சியைக் கொண்டுள்ளது. அதில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம் ஆகிய துறைகளைத் தவிர்த்து, மற்ற துறைகளில் இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்படும் எந்தச் சட்டமும் காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி இம்மாநிலத்தில் செல்லாது.