Latest Updates
-
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது..
கோடிக்கணக்கில் ஏமாற்றிவிட்டு இந்தியாவுக்கு டிமிக்கி கொடுத்தவர்கள்!
ஒன்றா.. இரண்டா.., ஒன்பதாயிரம் கோடி வங்கிக் கடனை திருப்பிக் கட்டாமல் நாட்டைவிட்டு ஓடிவிட்டார் விஜய் மல்லையா. இது கண்டிக்க வேண்டியது மட்டுமின்றி தண்டிக்க வேண்டிய குற்றமும் என இன்டர்நெட் முழுக்க பல மீம்ஸ், கருத்துக்கள், ஸ்டேடஸ் பதிவுகள் குவிந்தவண்ணம் உள்ளன.
உலகையே கலக்கிய இந்திய கடத்தல்காரர்கள் பற்றிய திகிலூட்டும் உண்மைகள்!!!
ஆனால், இந்தியாவுக்கோ, இந்தியர்களுக்கோ, இந்திய அரசு / நீதிமன்றத்திற்கோ இது புதியதல்ல. பல வருடங்களாக பல பேர் குற்றம் செய்துவிட்டு, பணமோசடி செய்துவிட்டு இந்தியாவை விட்டு தப்பியோடி இருக்கிறார்கள். இதனால் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், ஏன் உயிரிழப்புகள் நடந்த சம்பவங்களும் கூட அரங்கேற்றியுள்ளன.

வாரன் ஆண்டர்சன்
1984: காங்கிரஸ் ஆட்சி
யூனியன் கார்பைட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி தான் இந்த வாரன் ஆண்டர்சன். போபால் விஷவாயுக் கசிவில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பலிவாங்கிய ஃபாக்டரியை நிறுவியது இந்த ஆண்டர்சன் தான். அந்த கொடூர சம்பவம் நடந்த நான்காம் நாள் ஆண்டர்சன் கைது செய்யப்பட்டார்.

வாரன் ஆண்டர்சன்
சில மணி நேரங்களில் ஜாமீன் வாங்கிக் கொண்டு இந்தியாவை விட்டு ஓட்டம்பிடித்த ஆண்டர்சன் அதற்கு பிறகு வரவேயில்லை. அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தின் காரணத்தினால் தான் ஆண்டர்சன்-க்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.

குவாட்ரோச்சி (Ottavio Quattrochi)
1990: காங்கிரஸ் ஆட்சி
குவாட்ரோச்சி ஒரு இத்தாலிய தொழிலதிபர் ஆவார். இந்தியாவிற்காக போபர்சு நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 155 மிமீ பீரங்கிகள் (குட்டையான பீரங்கி வண்டி - howtzer) வாங்கியதில் தனிப்பட்ட இலாபம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஏறத்தாழ 64 கோடி ரூபாய் மோசடி நடந்ததாக கூறப்படுகிறது.

குவாட்ரோச்சி (Ottavio Quattrochi)
குவாட்ரோச்சி மீது சார்ஜ்ஷீட் 1999-ம் ஆண்டி பிறப்பிக்கப்பட்டது. மலேசியாவில் 2003-ம் ஆண்டும், அர்ஜென்டினாவில் 2007-ம் ஆண்டு குவாட்ரோச்சி கைது செய்ய முயன்று முடியாமல் போனது.

இத்தாலிய மாலுமிகள்
2012: காங்கிரஸ் ஆட்சி
இரண்டு இத்தாலிய மாலுமிகள் (Massimiliano Latorre and Salvatore Girone), கேரள மீனவர்களை 2012-ம் ஆண்டு கொன்றனர். மருத்துவ சிகிச்சைக்காக சுப்ரீம்கோர்ட் அந்தாண்டு ஏப்ரல் மாதம் வரை அவர்களது நாட்டில் இருக்க அனுமதி அளித்தது.

இத்தாலிய மாலுமிகள்
பிறகு அவர்கள் வருவார்கள் வருவார்கள் என கூறப்பட்டு, கடந்த மாதம் ஜனவரி 12, 2016 அன்று அவர்கள் இருவரும் இந்தியா திரும்ப வரமாட்டார்கள் என கூறப்பட்டது.

லலித் மோடி
2012: காங்கிரஸ் ஆட்சி
கடந்த 2012-ம் ஆண்டு அமலாக்க இயக்குனரகம் லலித் மோடி மீது பி.சி.சி.ஐ ஒளிபரப்பு (ஐ.பி.எல் - 2009) உரிமத்தில் பணமோசடி செய்ததாக சார்ஜ் செய்தது. லலித் மோடி உடனே தப்பித்து லண்டன் சென்றுவிட்டார்.

லலித் மோடி
பிறகு அமலாக்க இயக்குனரகம் இன்டர்போலிடம் பேசி லலித் மோடி மீது ரெட் கார்னர் நோட்டீஸ் பதிவு செய்ய கூறியது. பிறகு மும்பை சிறப்பு நீதிமன்றம் லலித் மோடிக்கு ஜாமீன் இல்லாத பிடிவாரன்ட் விதித்தது. இதே வழக்கில் லலித் மோடிக்கு இன்டர்போல் 2015-ம் ஆண்டு ரெட் கார்னர் நோட்டீஸ்-ம் விதித்தது.

லலித் மோடி
மேலும் கடந்த 2013-ம் ஆண்டு பி.சி.சி.ஐ லலித் மோடி மீது வாழ்நாள் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என மறுபுறம் லலித் கூறி வருகிறார்.

நீதி!
பணக்காரர்கள், அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதி, சாமானிய மக்களுக்கு ஓர் நீதியென இருக்கும் சூழல் மாறும் வரை, இவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.



Click it and Unblock the Notifications