Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கஷ்டங்கள் நிறைந்த நாளாக இருக்கும் -
கேது நட்சத்திர பெயர்ச்சியால் டிசம்பர் வரை இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
5 முக்கிய தொகுதிகளை கொண்ட திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா சுவையின் ரகசியம் இதாங்க! -
IPL 2026: சிஎஸ்கே Vs ஆர்சிபி ஜோதிட கணிப்பு - எந்த அணி வெற்றி பெறும்? -
30 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் ஒன்றிணையும் 4 கிரகங்கள்: ஏப்ரல் 11 முதல் 12 ராசிக்கும் எப்படி இருக்கும்? -
ருசியான கறிவேப்பிலை சிக்கன் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க -
ஆட்டு நுரையீரல் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் இதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர் -
குரு-புதனால் உருவாகும் பரிவர்த்தனை யோகம்: ஏப்ரல் 11 முதல் இந்த 6 ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டப்போகுது! -
செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 05 ஏப்ரல் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு நினைச்சது நடக்கும் நாளாக இருக்குமாம்
திருபாய் அம்பானி பற்றி பலரும் அறியாத தகவல்கள்!!!
முயற்சி ஒன்றே பெரிய மூலதனம் என்பார்கள். அத்துடன் நம்மை ஊக்குவிக்கும் மக்களும் நம்மை சுற்றி இருந்தால் இந்த உலகையே கூட ஒற்றை விரலில் கட்டி இழுக்கலாம். சாதாரண பெட்ரோல் பங்கில் மாதம் 300 ரூபாய் சம்பளத்தில் தொடங்கி பல ஆயிர கோடிகளுக்கு அதிபதியாக உயரம் கண்டவர் திருபாய் அம்பானி.
இனி, திருபாய் அம்பானி பற்றி பலரும் அறியாத தகவல்கள் பற்றி காணலாம்...

பிறப்பு
திருபாய் அம்பானி குஜராத்தை சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஹிராசந்த் கோர்தன்பாய் அம்பானி ஓர் பள்ளி ஆசிரியர். இவர் தனது பள்ளி படிப்பை பதினாறு வயதில் முடித்தார்.

முதல் வேலை
இவரது முதல் வேலையை A.Besse & Co எனும் ஓர் பெட்ரோல் பங்கில் பார்த்தார். அப்போது அவர் வாங்கிய மாத சம்பளம் முன்னூறு ரூபாய் மட்டுமே ஆகும்.

ஜவுளி வியாபாரம்
1958-ல் வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்பிய அம்பானி ஜவுளி தொழில் இறங்கினார். இவரது உறவினர் சம்பக்லால் என்பவருடன் இணைந்து இந்த தொழிலை தொடங்கினார்.

33 சதுரடியில் ரிலையன்ஸ்
இந்தியாவில் கொடிக்கட்டி பறக்கும் நிறுவனமான ரிலையன்ஸ் வெறும் 33 சதுரடி அறையில் தொடங்கப்பட்டது ஆகும். ஓர் மேசை, மூன்று நாற்காலி, ஒரு தொலைபேசி தான் அன்றைய ரிலையன்ஸின் சொத்து.

பிரிவு
1965-ல் உறவினருடன் ஏற்பட்ட தொழில் கருத்து வேறுபாட்டால் தனித்தனியாக பிரிந்தனர். பிறகு 1970-ல் தனியாக பத்து லட்சம் மதிப்பிலான வீட்டிற்கு தென் மும்பை பகுதியில் இருக்கும் அல்டமௌன்ட் சாலை பகுதியில் குடியேறினார் அம்பானி.

முதல் ஜவுளி நிறுவனம்
1977-ல் விமல் என்ற பெயரில் தனது முதல் ஜவுளி நிறுவனத்தை அகமதாபாத் நரோடா எனும் இடத்தில் தொடங்கினர்.

விளையாட்டரங்கில் கூட்டம்
தனியார் நிறுவனம் ஓர் விளையாட்டு அரங்கில் தனது வருடாந்திர கூட்டத்தை நடத்தியது என்ற முதல் பெருமை பெற்றவை அம்பானி.இவர் குஜராத் மக்கள் பலரை தனது நிறுவனத்தின் பங்குதாரர்களாக சேர்த்துக் கொண்டார்.

3,50,000 பேர்
1986-ல் ஏறத்தாழ மூன்றரை லட்சம் பங்குதாரர்கள் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டம் மும்பையில் நடந்தது.

பல்வேறு துறைகளில் கால் பதித்தார்
பிறகு, பெட்ரோ கெமிக்கல், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், எரிசக்தி, சில்லறை விற்பனை, மூலதனச் சந்தைகள் என பல துறைகளில் கால் பதித்தார் அம்பானி.

உடல்நலம்
முன்னூறு ரூபாயில் தொடங்கி பல ஆயிரக் கோடிக்கு அதிபதி ஆனார் அம்பானி. 1986-ல் முதல் ஸ்ட்ரோக் ஏற்பட்ட போது இவருக்கு வலது கை பக்கவாதம் ஏற்பட்டது. பிறகு 2வது முறையாக 2002-ம் ஆண்டு ஸ்ட்ரோக் ஏற்பட்ட போது இரண்டு வாரம் கோமாவில் இருந்து இறந்துபோனார் அம்பானி.

இறுதி அஞ்சலி
இவரது இறுதி அஞ்சலியில், அரசியல், சினிமா நபர்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பொது மக்களும் பங்கேற்றனர்.



Click it and Unblock the Notifications











