Latest Updates
-
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்!
வீட்டில் செல்வமும், அதிர்ஷ்டமும் நிலைத்து இருக்க வீட்டு வாசலில் வைக்க வேண்டியவைகள்!
வீட்டில் செல்வமும், அதிர்ஷ்டமும் நிலைத்திருக்க, வீட்டின் வாசலில் அதை வரவேற்கும் வகையில் குறிப்பிட்ட பொருட்களை வைக்க வேண்டும். இங்கு அந்த பொருட்கள் எவையென்று கொடுக்கப்பட்டுள்ளது.
நாம் அனைவரும் சந்தோஷமாக வாழத் தேவையான பணத்திற்காகத் தான் பகல் இரவு பாராமல் வேலை செய்கிறோம். ஆனால் அப்படி வெறும் வேலை செய்தால் மட்டும், நம் வீட்டில் பணம் சேருமா என்ன? நிச்சயம் இல்லை. வீட்டில் செல்வமும், அதிர்ஷ்டமும் நிலைத்திருக்க, வீட்டின் வாசலில் அதை வரவேற்கும் வகையில் குறிப்பிட்ட பொருட்களை வைக்க வேண்டும்.

இங்கு வாஸ்துப் படி வீட்டு வாசலில் எந்த பொருட்களை வைத்தால், வீட்டில் செல்வமும் மற்றும் அதிர்ஷ்டமும் நிலைத்து இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து உங்கள் வீட்டு வாசலில் வையுங்கள்.

மலர் கண்ணாடி குடுவை
கண்ணாடி குடுவையில் நீர் நிரப்பி, அதனுள் மலர்களை வைத்து, வீட்டின் நுழைவு வாயிலில் வைத்து வந்தால், மலர்கள் வீட்டினுள் நல்ல சக்தியை ஈர்க்கும். முக்கியமாக இப்படி செய்யும் போது, தினமும் தவறாமல் மலர்களை மாற்ற வேண்டும்.

தோரணம்
மாவிலையால் தோரணத்தை தயார் செய்து, அதனை வீட்டின் வாசலில் கட்டி தொடங்க விட்டால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் நுழைவது தடுக்கப்படும். முக்கியமாக இலைகள் காய்ந்தால், அதைத் தவறாமல் மாற்றிவிடுங்கள்.

லட்சுமி போட்டோ
தனத்தை வாரி வழங்கும் லட்சுமி போட்டோவை, வீட்டின் வாசலில் தொங்க விட வேண்டும். அப்படி தொங்க விடும் போது, காலணிகளை வீட்டின் வெளியிலேயே விட வேண்டும்.

லட்சுமி காலடி
லட்சுமியின் காலடித் தடங்களை வீட்டின் நுழைவுப் பாதையில் ஓட்டி வைக்க வேண்டும். அதுவும் லட்சுமி வீட்டினுள் நுழையும் படி ஒட்டினால், அதிர்ஷ்டமும், செல்வமும் வீட்டில் சேரும்.

கலச போட்டோ
வீட்டின் நுழைவு வாயிலில் உள்ள கதவுகளில் கலச போட்டோக்களை ஒட்டினால், வீட்டில் உள்ளோருக்கு எந்நோயும் வராது. மேலும் அந்த வீட்டில் செல்வம் அதிகரிக்கும்.

ஸ்வஸ்திகா அடையாளம்
ஸ்வஸ்திகா அடையாளத்தை வீட்டின் வாசலில் வைத்தால், அந்த வீட்டில் அதிர்ஷ்டமும், செல்வமும் தேடி வரும்.



Click it and Unblock the Notifications
