Latest Updates
-
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய பனாமா கால்வாய் பற்றிய திகைக்க வைக்கும் உண்மைகள்!
* பனாமா கால்வாய் கட்டுமான பணியில் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன.* ஈபிள் டவர் மற்றும் சூயிஸ் கால்வாய் கட்டியவர் பனாமா கால்வாய் காட்டுமான முயற்சியில் தோல்வியுற்றார்.
வட அமெரிக்கா, தென் அமெரிக்கா இடையே பசுபிக் பெருங்கடல் மற்றும் அட்லான்டிக் பெருங்கடலை இணைக்கும் மாபெரும் கால்வாய் தான் பனாமா கால்வாய். தென் அமெரிக்காவை சுற்றி நெடுங்காலம் எடுத்து செல்ல வேண்டியிருந்த போது பயண நேரம் மற்றும் பொருளாதார அதிக விரயம் ஆனது.
இதை குறைக்கவே இந்த கால்வாய் பணி மிக முக்கியமாக இருந்தது. இதன் கட்டுமானம் பல உயிர்களை பலிவாங்கியுள்ளது. தோல்விகளை கடந்து நூற்றாண்டுகள் கடந்து தான் பனாமா நினைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மை #1
15-ம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் கடற்பயணி வாஸ்கோ நூனஸ் முதல் முறையாக இரு அமெரிக்க கண்டங்களுக்கு நடுவே பசுபிக், அட்லாண்டிக் கடலை பிரித்து சிறிய அளவில் ஒரு கால்வாய் போவதை கண்டார். அது தான் பனாமா.
Image Source

உண்மை #2
1534-ல் ரோம பேரரசர் ஐந்தாம் சார்லஸ் அவ்விடத்தில் கப்பல் செல்லும் வகையில் கால்வாய் கட்ட முடியுமா ஆய்வு செய்ய கூறினார். ஆய்வு முடிவுகளில் அவ்விடத்தில் கப்பல் செல்லும் அளவிற்கு கால்வாய் கட்டுவது இன்றியமையாத காரியம் என தெரிவிக்கப்பட்டது.
Image Source

உண்மை #3
ஈபிள் டவர் மற்றும் சூயிஸ் கால்வாய் கட்டியவர் பனாமா கால்வாய் காட்டுமான முயற்சியில் தோல்வியுற்றார். 1880-களிலேயே கால்வாய் கட்ட முயற்சிகள் எடுத்து, சரியான திட்டங்கள் இல்லாமல் தோல்வியில் முடிந்தது.

உண்மை #4
சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், ட்ராபிக்கல் நோய் காரணமாக பனாமா கால்வாய் கட்டுமான பணியில் ஈடுப்பட்ட பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உண்மை #5
முதலில் அமெரிக்கா பனாமாவில் இல்லாமல், நிகரகுவாவில் கால்வாய் கட்டலாம் என்று தான் திட்டமிட்டது. ஆனால், நிகரகுவா பகுதியில் எரிமலை அபாயங்கள் இருப்பதால் பின்னர் நிபுணர்களின் அறிவுரைக்கு ஏற்ப முயற்சியை கைவிட்டனர்.
Image Source

உண்மை #6
பிறகு மீண்டும் 1900களில் ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாய் கட்டுமான பணியைத் தொடங்கி 1914 -ல் பனாமா கால்வாய் திறக்கப்பட்டது. பிரெஞ்சு, ஐக்கிய அமெரிக்க முயற்சிகளில் மொத்தமாக 27,500 தொழிலாளர் இறந்ததாக மதிப்பிடப்பட்டது.

உண்மை #7
பனாமா கால்வாய் 78 கிமீ நீளமும் 33.5 மீட்டர் அகலமும் உடையது. பனாமா கால்வாய் 1999 -ல் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு வருடமும் ஏறத்தாழ 13,000 - 14,000 வரையிலான எண்ணிக்கையில் கப்பல்கள் பனாமா கால்வாயை கடந்து செல்கின்றன.



Click it and Unblock the Notifications