Latest Updates
-
கொங்கு ஸ்பெஷல் வெள்ளை குஸ்கா ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 4 ரகசியங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் ஆண்களின் வாழ்க்கை நரகமாக மாறுமாம் -
ஜூலை 14 நிகழும் குருபகவானின் அஸ்தமனத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் துவரம் பருப்பு இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. தோசை, இட்லிக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 01 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கப் போகுதாம் -
July 2026 Monthly Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஜூலை மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..
நாசாவையே தூக்கி சாப்பிடும் இஸ்ரோ - வியப்பூட்டும் தகவல்கள்!
விண்வெளி தொழில் நூட்பங்களையும், பயன்பாடுகளையும் உருவாக்குவதன் மூலம் நாட்டுக்கு தேவையான அனைத்து பணிகளையும் நிறைவேற்றுவது தான் இஸ்ரோவின் குறிக்கோள் ஆகும். 1975 ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு சோவியத் ஒன்றியத்தில் இருந்து ஏவப்பட்டது.
ஒவ்வொரு இந்தியனையும் பெருமையடைய வைக்கும், இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!
கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரோ இந்திய செயற்கை கோள்கள் மட்டுமின்றி, பிற நாடுகளின் செயற்கை கோள்களையும் ஏவ உதவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக பல சாதனைகள் செய்த இஸ்ரோ, விண்வெளி ஆராய்ச்சியில் உலகளவில் ஆறாவது இடத்தில் இருக்கிறது.

தகவல் #1
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த 1969-ம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தன்று டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களால் உருவாக்கப்பட்டது.

தகவல் #2
எஸ்.எல்.வி-3 தான் இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் ஆகும். மற்றும் இந்த ப்ராஜக்ட்-ன் இயக்குனராக பணியாற்றியவர் நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள்.

தகவல் #3
நாசாவின் ஓராண்டு பட்ஜெட்டில் அரைவாசி பங்கு அளவு தான் இஸ்ரோ-வின் நாற்பது ஆண்டு செலவு ஆகும்.

தகவல் #4
இந்திய மத்திய அரசின் ஓராண்டு பட்ஜெட்டில் இஸ்ரோ-விற்கு ஒதுக்கப்படும் சதவீதம் 0.34% தான்.

தகவல் #5
இஸ்ரோ புவன் என்ற செயற்கைக் கோளை உருவாக்கியுள்ளது. இது கூகுள் எர்த்தை போன்ற 3டி புகைப்பட கருவி சார்ந்தது ஆகும்.

தகவல் #6
இந்தியாவில் மொத்தம் 13 இஸ்ரோ மையங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன.

தகவல் #7
கடந்த வருடம் மட்டும் இஸ்ரோ மூலம் இந்தியாவிற்கு 14 பில்லியன் ரூபாய் வருமானம் வந்துள்ளது.

தகவல் #8
இஸ்ரோ மார்ஸ் மிஷனில் செலவு செய்தது வெறும் 450 கோடி தான். இது தான் இருப்பதிலேயே மிக குறைவான செலவில் உருவாக்கப்பட்ட மார்ஸ் மிஷனாகும். ஏறத்தாழ கிலோமீட்டர்-க்கு 12 ரூபாய் என்ற செலவில் இதை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

தகவல் #9
மார்ஸ் மிஷனில் முதல் முறையிலேயே வெற்றி கண்ட முதல் நாடு இந்தியா (இஸ்ரோ) தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் #10
உலகில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையங்களிலேயே அதிக திருமணமாகாத நபர்கள் பணிபுரியும் ஆராய்ச்சி மையம் ஐ,எஸ்.ஆர்.ஓ தான்.

தகவல் #11
மார்ஸ் மிஷனுக்கு அமெரிக்க போன்ற நாடுகளிடம் இருந்து பொறியியல் உதவி நாடலாம் என்ற போது நமது ஆராய்ச்சியாளர்கள் அதற்கு மறுத்து, அனைத்து வேலைப்பாடுகளையும் சொந்தமாகவே செய்து வெற்றிக் கண்டுள்ளனர்.

தகவல் #12
உலகிலேயே ஆறு நாடுகள் மட்டும் தான் சொந்த நாட்டில் இருந்து செயற்கைக்கோள்கள் ஏவ திறன் கொண்டுள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று என்பது பெருமைக்குரிய விஷயம்.

தகவல் #13
இஸ்ரோ இதுவரை தொடர்ந்து வெற்றிகரமாக 23 பி.எஸ்.எல்.வி செயற்கைகோள்களை ஏவியுள்ளது.

தகவல் #14
இஸ்ரோ நமது நாட்டின் சொந்த செயற்கை கோள்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளின் 29 செயற்கை கோள்களையும் ஏவியுள்ளது.



Click it and Unblock the Notifications