Just In
- 24 min ago 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- 2 hrs ago இட்லி, தோசைக்கு ஒருமுறை இப்படி தக்காளியை குருமாவை செஞ்சு பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
- 10 hrs ago கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
- 12 hrs ago உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கா? மறந்தும் இந்த சப்ளிமென்டுகளை எடுக்காதீங்க.. அப்புறம் கஷ்டப்படுவீங்க..
Don't Miss
- News சிஏஏவுக்கு எதிரான 200 வழக்குகளை இன்று ஒன்றாக விசாரிக்கும் உச்சநீதிமன்றம்- மத்திய அரசுக்கு நெருக்கடி?
- Movies மஞ்சுமெல் பாய்ஸ் தான் இங்கே.. கேரளாவில் விஜய் படங்கள் பண்ண ரெக்கார்டு எல்லாம்.. பிருத்விராஜ் பளிச்!
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
118 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கும் ஆலமரம் - ஏன்? எதற்காக?
விசித்திரமான காரணத்தால் பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரின் உத்தரவால் 118 ஆண்டுகளாக ஒரு ஆலமரம் சிறைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வடிவேலு ஒரு படத்தில் கிணத்தை காணவில்லை என் புகார் அளித்த சம்பவத்திற்கு நேர் எதிர் மாறாக அமைந்திருக்கிறது இந்த ஆலமர கைது சம்பவம்.
நமது உலகில் விசித்திரங்களுக்கு பஞ்சம் இல்லை தான். அதற்காக ஆலமரத்தை நூறாண்டுகளுக்கு மேலாக சிறைப்பிடித்து வைத்திருப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.
லண்டி கோட்டல்!
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இருக்கும் மாவட்டம் லண்டி கோட்டல். லண்டி கோட்டலில் இருக்கும் ஒரு இராணுவ முகாமில் தான் ஒரு ஆலமரம் நூறாண்டுகளுக்கு மேலாக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.
விசித்திரம்!
அப்படி என்ன காரணத்திற்காக இந்த மரத்தை சிறைப்பிடித்து வைத்திருக்கின்றனர் என்று விசாரித்தால், அவர்கள் கூறும் தகவல் விசித்திரமாக இருக்கிறது. மேலும், இவர்கள் கூறும் கதையில் துளி அளவு கூட லாஜிக் இல்லை.
Image Courtesy: Dawn
பிரிட்டிஷ் அதிகாரி!
பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ஜேம்ஸ் ஸ்குவிட் என்பவர். குடிபோதையில் இருந்த இவர் மரம் தன்னை நோக்கி வந்ததாக கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த அதிகாரி. அந்த மரத்திற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என அதை கைதும் செய்துள்ளார்.
இன்றளவும்!
பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து பல காலம் ஆனபிறகும் கூட. இன்றளவும் அந்த மரம் சங்கலிகளால் கட்டுப்பட்டு தான் வைத்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில், இந்த மரத்தை ஆணையை மீறி யாரேனும் செயற்பட்டால், அவர்களுக்கும் இதே தண்டனை என பிரிட்டிஷ் அதிகாரி கண்டித்தும் இருந்தாராம்.
Image Source :samaa.tv
சுற்றுலா இடம்!
விசித்திரமான காரணத்தால் இந்த மரத்தை கைது செய்த காரணத்தால். இப்போது இந்த இடம் இரு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக மாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Image Source: tribune.com.pk