Latest Updates
-
மசாலா பன் தோசையும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
இன்றைய ராசிபலன் 30 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு கேட்டது கிடைக்கும் நாளாக இருக்குமாம் -
புதன் மேஷ ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்!
118 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருக்கும் ஆலமரம் - ஏன்? எதற்காக?
விசித்திரமான காரணத்தால் பிரிட்டிஷ் அதிகாரி ஒருவரின் உத்தரவால் 118 ஆண்டுகளாக ஒரு ஆலமரம் சிறைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வடிவேலு ஒரு படத்தில் கிணத்தை காணவில்லை என் புகார் அளித்த சம்பவத்திற்கு நேர் எதிர் மாறாக அமைந்திருக்கிறது இந்த ஆலமர கைது சம்பவம்.
நமது உலகில் விசித்திரங்களுக்கு பஞ்சம் இல்லை தான். அதற்காக ஆலமரத்தை நூறாண்டுகளுக்கு மேலாக சிறைப்பிடித்து வைத்திருப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.

லண்டி கோட்டல்!
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இருக்கும் மாவட்டம் லண்டி கோட்டல். லண்டி கோட்டலில் இருக்கும் ஒரு இராணுவ முகாமில் தான் ஒரு ஆலமரம் நூறாண்டுகளுக்கு மேலாக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டு இருக்கிறது.

விசித்திரம்!
அப்படி என்ன காரணத்திற்காக இந்த மரத்தை சிறைப்பிடித்து வைத்திருக்கின்றனர் என்று விசாரித்தால், அவர்கள் கூறும் தகவல் விசித்திரமாக இருக்கிறது. மேலும், இவர்கள் கூறும் கதையில் துளி அளவு கூட லாஜிக் இல்லை.
Image Courtesy: Dawn

பிரிட்டிஷ் அதிகாரி!
பிரிட்டிஷ் இராணுவ அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ஜேம்ஸ் ஸ்குவிட் என்பவர். குடிபோதையில் இருந்த இவர் மரம் தன்னை நோக்கி வந்ததாக கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த அதிகாரி. அந்த மரத்திற்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என அதை கைதும் செய்துள்ளார்.

இன்றளவும்!
பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து பல காலம் ஆனபிறகும் கூட. இன்றளவும் அந்த மரம் சங்கலிகளால் கட்டுப்பட்டு தான் வைத்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில், இந்த மரத்தை ஆணையை மீறி யாரேனும் செயற்பட்டால், அவர்களுக்கும் இதே தண்டனை என பிரிட்டிஷ் அதிகாரி கண்டித்தும் இருந்தாராம்.
Image Source :samaa.tv

சுற்றுலா இடம்!
விசித்திரமான காரணத்தால் இந்த மரத்தை கைது செய்த காரணத்தால். இப்போது இந்த இடம் இரு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக மாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Image Source: tribune.com.pk



Click it and Unblock the Notifications