Just In
- 1 hr ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 2 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 4 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 7 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
Don't Miss
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்து மத புனிதக் கயிறுகளின் முக்கியத்துவம்!
உடலின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு நிற நூல்கள் அணிந்த பல மக்களை நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள். புனித நூல்களை அணிவது இந்துக்களின் ஒரு பொதுவான நடைமுறையாகும். கழுத்து, மணிக்கட்டு, இடுப்பு போன்ற இடங்களில் கருப்பு, வெள்ளை, மஞ்சள், சிவப்பு நிற கயிறுகளை கட்டி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
ஒவ்வொரு புனித நூலும் இந்து மதத்தில் ஒரு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இவை கண் திருஷ்டி, நல்ல உடல் நிலை, செழிப்பு ஆகியவற்றிற்காக உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் கட்டப்பட்டிருக்கும்.
இந்து மதத்தில் உள்ள இந்த புனித கயிறுகளைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் அனைத்துக் கயிறுகளையும் எல்லோராலும் அணிய முடியாது. எடுத்துக்காட்டாக பூநூலை இந்து மதத்தின் மேல் ஜாதியினர் மட்டுமே அணிய முடியும். மேலும் மஞ்சள் கயிறு அல்லது மாங்கல்யமானது திருமணமான பெண்களால் மட்டுமே அணிய முடியும். இந்து மதத்தில் உள்ள புனித கயிறுகளைப் பற்றி நீங்கள் மேலும் அறிந்து கொள்ள விரும்புகிறீர்களா? எனில் தொடர்ந்து படிக்கவும்.
சிவப்பு கயிறு
மணிக்கட்டில் சிவப்பு நூல் அணிவது என்பது இந்தியாவில் பொதுவான ஒன்றாகும். ஆண்கள் மற்றும் பெண்களும் அணிந்திருக்கும் இந்த சிவப்பு நூல், நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பை குறிக்கும். இந்த சிவப்பு கயிறானது ஆண்கள் மற்றும் திருமணமாகாத பெண்களுக்கு வலது கையிலும், திருமணமான பெண்களுக்கு இடது கையிலும் கட்டப்படும்.
கருப்பு கயிறு
கருப்பு நிறம் தீயவற்றின் பார்வையிலிருந்து தரும் பாதுகாப்பை குறிக்கும். கறுப்புக் கயிறானது குழந்தைகளுக்கு இடுப்பில் அணிவிக்கப்படுகிறது. இது கண் திருஷ்டி மற்றும் தீயவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும்.
ஆரஞ்சு அல்லது காவி நிறக் கயிறுகள்
ஆரஞ்சு அல்லது காவி நிறக் கயிறுகளும் மணிக்கட்டில் கட்டப்படும். மேலும் இது புகழ், அதிகாரம் சேர்க்கும் என்றும், தீயவற்றிலிருந்து பாதுகாப்பு தரும் என்றும் நம்பப்படுகிறது.
வெள்ளை நூல்
புனித வெள்ளை நூல் உபநயன விழாவோடு தொடர்புடையது. வெள்ளை நிறம், தூய்மையை குறிக்கும். இந்து மத நடைமுறையின் படி வெள்ளை நூலானது மேல் ஜாதியினரால் மட்டுமே அணிய முடியும்.
மஞ்சள் கயிறு
மஞ்சள் கயிறு என்பது திருமணத்தின் சின்னமாகும். திருமண நாளின் போது பூசாரி வேத மந்திரங்கள் ஓத மஞ்சள் கொண்டு செய்யப்பட்ட மஞ்சள் கயிறு மணமகளின் கழுத்தில் கட்டப்பட்டு மூன்று முடிச்சு போடப்படும்.