Latest Updates
-
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
சூரிய கிரகணம் அன்று உருவாகும் சதுர்கிரக யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப் போறாங்களாம் -
இஞ்சி தொகையல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - காரசாரமா ஆரோக்கியமா இருக்கும் -
ஆகஸ்ட் மாதம் 2 முறை உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகுதாம் -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப செம்பருத்தி பூவை இப்படி யூஸ் பண்ணுங்க...
அமெரிக்காவில் என்ன நடக்குது? பல மாகணங்களில் கோமாளி வேஷமிட்டு மக்களை அச்சுறுத்தும் கும்பல்!
அமெரிக்காவின் பல்வேறு மாகணங்களில் கோமாளி வேடமிட்டு சிலர் மக்களை அச்சுறுத்தி வருவது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சில வழக்கள் பற்றி இங்கே பகிரப்பட்டுள்ளது.
அமெரிக்கா உலகே கண்டு அஞ்சும் அரசு. ஆனால், அந்நாட்டு மக்களையும், போலீஸையும், அரசையும் கோமாளி வேடமிட்டு சிலர் அச்சுறுத்தி வருவது உலக மக்களுக்கு வியப்பை அளித்து வருகிறது. அதிலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதுப்போன்ற சம்பவம் நிகழ்வது மிரள வைக்கிறது.
பேட்மேன் படத்தில் வரும் ஜோக்கரை போல வேடிக்கையான முகமூடி மற்றும் மேக்கப் போட்டுக்கொண்டு, சாலையில் செல்வோரை, காரில் செல்வோரை எல்லாம் வழிமறித்து மிரட்டி, பயமுறுத்தி வருகிறார்கள். சிலர் கால் செய்தும் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.

வழக்கு #1
கோமாளி போல வேடமிட்டு, கார்கள் முன்னாள் குதித்து, நடனமாடிய வழக்கு.பல தீவிரமான கால்கள் மூலம் இதுக்குறித்து போலீஸில் புகார் அளிக்கபப்ட்டன. இதுவரை எந்த ஒரு அரஸ்ட்-ம் ஆகவில்லை. போலீசால் அவர்களை வெற்றிகரமாக சேஸ் செய்து பிடிக்க முடியாமல் போனாது.
வழக்கு #2
ஒரு அச்சுறுத்தலான கோமாளி, ப்ளோரிடா மாகாணத்தில் சாலை ஓரமாக நின்று கொண்டு பயமுறுத்தியது மிரள வைக்கிறது. இந்த காணொளி ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற தளங்களில் வைரலாகி வருகிறது.

வழக்கு #3
ஓஹியோ மாவட்ட பள்ளியில் ஒரு கோமாளி அச்சுறுத்தல் வந்ததால் பள்ளியையே மூடிவிட்டனர். அந்த கோமாளி ஒரு பெண் என்றும் கூறப்படுகிறது. பல முறை கால் செய்து, குழந்தைகளை கொன்றுவிடுவேன் என அவர் மிரட்டியுள்ளார். இந்த வழக்கிலும் யாரும் போலீசாரால் அரஸ்ட் செய்யப்படவில்லை.
வழக்கு #4
ஒரு பெண் அப்பார்ட்மெண்ட் அருகில் ஒரு கோமாளி துரத்தியதை 911க்கு செய்து புகார் அளித்த ஒலிநாடா பதிவு.

வழக்கு #5
டவுன் முழுவதும் அச்சுறுத்தல் உண்டாக்கிய கோமாளிகளின் படத்தை ஒரு தம்பதியினர் வெளியிட்டுள்ளனர். இது கேளிக்கையாக தெரியவில்லை. எதற்காக அமெரிக்காவின் நல மாகாணங்களில் இதுப்போன்ற சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது என்று புரியாமல் மக்கள் குழம்பி வருகின்றனர்.



Click it and Unblock the Notifications