Latest Updates
-
இன்றைய ராசிபலன் 16 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், சவால்களும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், வெற்றிகளையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
1 கப் மீல் மேக்கர் இருந்தா இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - சாதம், சப்பாத்தி எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக பெரிய சாதனையாளர்களாக வருவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முட்டை சால்னாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
மின்விசிறிகளில் ஏன் எப்போதும் மூன்று இறக்கைகள் மட்டுமே உள்ளது தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
1 கப் பாஸ்மதி அரிசி இருந்தா இந்த காஷ்மீர் பேமஸ் யக்னி புலாவை செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
ஜூலை 16-ல் நிகழும் சூரியன்-சந்திரன் அரிய சேர்க்க: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்க போகுதாம் - உங்க ராசி என்ன? -
இந்த அறிகுறிகளில் ஒன்று உங்கள் வீட்டில் இருந்தாலும் நீங்க பணக்கஷ்டத்தில் சிக்க போறீங்களாம் - சாணக்கிய தந்திரம் -
சேமியா உப்புமாவும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
தர்பூசணி சாப்பிட்டதும் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது தெரியுமா?
நீர்ச்சத்துள்ள தர்பூசணியை சாப்பிட்ட பின் பலருக்கு தாகம் ஏற்படும். தர்பூசணி சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்வார்கள். ஏனெனில் அப்படி குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்குமாம்.
பழங்களில் தர்பூசணி நீர்ச்சத்து அதிகம் கொண்ட ஒரு சுவையான பழம். பொதுவாக பழங்களை சாப்பிட்டால் தாகம் எடுக்காது. இதற்கு அவற்றில் உள்ள நீர்ச்சத்து நமக்கு ஏற்படும் தாகத்தைத் தணிக்கிறது. ஆனால் நீர்ச்சத்துள்ள தர்பூசணியை சாப்பிட்ட பின் பலருக்கு தாகம் ஏற்படும் என்பது தெரியுமா? ஆம். இருப்பினும், தர்பூசணி சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று நம் வீட்டில் உள்ள பெரியோர்கள் சொல்வார்கள். ஏனெனில் அப்படி குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்குமாம்.

சரி, தர்பூசணி சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும், எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். ஆகவே தான், தமிழ் போல்ட்ஸ்கை தர்பூசணியை சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பதால் சந்திக்கும் விளைவுகளை உங்களுக்காக கீழே கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு
தர்பூசணியில் 92% தண்ணீர் மற்றும் 6% சர்க்கரை உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டாலே உடலுக்கு நிறைய தண்ணீர் கிடைத்துவிடும். ஆனால் தர்பூசணி சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால், உடலில் நீரின் அளவு அதிகரித்து, உடலை கனமாக்கிவிடுகிறது. இதன் காரணமாக வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.

நீரிழப்பு
தர்பூசணி சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதன் மூலம், அடிக்கடி கழிவறைக்கு செல்ல வேண்டியிருக்கும். ஏனெனில், தர்பூசணி ஒரு டையூரிக் பண்புகளைக் கொண்ட பழம். இதன் காரணமாக, சாதாரணமாக இந்த பழத்தை சாப்பிட்டாலே அதிகம் கழிவறைக்கு செல்லக்கூடும். அதுவும் இப்பழத்தை சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்தால், உடலில் இருந்து இன்னும் அதிக நீர் வெளியேறி, நீரிழப்புக்கு ஆளாக நேரிடும்.

செரிமானம் தாமதமாகும்
தர்பூசணி சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடித்தால், உடல் கனமாகி, இதன் விளைவாக செரிமானம் மெதுவாக ஆரம்பிக்கும் மற்றும் உடல் சர்க்கரையை ஜீரணிப்பதில் சிரமத்தை சந்திக்கத் தொடங்கும். ஆகவே தான் தண்ணீர் குடிக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.

குமட்டல்
ஏற்கனவே ஒருவர் வயிறு சரியில்லாமல் இருந்தால், அவர் தர்பூசணியை சாப்பிடக்கூடாது. ஒரு வேளை சாப்பிட்டுவிட்டால், அதன் பின் எக்காரணம் கொண்டும் தண்ணீர் குடிக்கக்கூடாது. இல்லாவிட்டால், அவர் குமட்டல் மற்றும் உடல்நலக் குறைவால் அவதிப்படுவார். எனவே கவனமாக இருங்கள்.

உடல் பலவீனம்
தர்பூசணி சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பதால், உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் சமநிலையில் இல்லாமல் இருக்கும். தர்பூசணி மற்றும் தண்ணீரை ஒருவர் ஒன்றாக உட்கொள்ளும் போது, அது உடலின் செல்களை அழித்து, மிகவும் பலவீனமாக உணர ஆரம்பிக்கும். ஆகவே தான் தண்ணீரை தர்பூசணி சாப்பிட்ட உடனே குடிக்கக்கூடாது என்று கூறுகிறார்கள்.
செரிமான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க பழங்களை சாப்பிட்ட பின் ஒரு மணிநேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தர்பூசணி, முலாம் பழம் போன்றவற்றுடன் மற்ற பழங்களை சேர்த்து சாப்பிடக்கூடாது. குறிப்பாக கிரேப்ஃபுரூட், ஸ்ட்ராபெர்ரி போன்ற அசிட்டிக் பழங்கள் அல்லது ஆப்பிள், மாதுளை, பீச், வாழைப்பழம் மற்றும் உலர் திராட்சை போன்றவற்றை சேர்த்து சாப்பிட வேண்டாம்.
ஆயுர்வேதத்தின் படி, தர்பூசணி மற்றும் பால் ஆகிய இரண்டும் எதிர் இயல்புடையவை. அதில் பால் இனிப்பு இயல்புடையதாகவும், தர்பூசணி சிட்ரிக் தன்மையைக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, இந்த இரண்டையும் ஒன்றாக ஒரே நேரத்தில் உட்கொள்ளும் போது, அது வயிற்றுப் பிரச்சனைகள் மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.



Click it and Unblock the Notifications