ஆண்டிற்கு 300 நாட்கள் தூங்கும் வியாதி கொண்ட நவீன 'கும்பகர்ணன்'.. தலைசுற்ற வைக்கும் அறிவியல் கோளாறு!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள நாகூரை சேர்ந்தவர் புர்காரம். 42 வயதாகும் இவர் ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்குகிறார். ஆக்சிஸ் ஹைப்பர்சோம்னியா எனும் வினோத நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

தூக்கம் என்பது நம் அனைவருக்கும் அவசியமானது. ஏனெனில், தூக்கம் நம் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. துக்கிமின்மை பிரச்சனை பல்வேறு சுகாதார நிலைகளை ஏற்படுத்தும். ஆதலால், ஒரு நாளைக்கு குறைந்தது 6-8 மணி நேர தூக்கம் என்பது நம் அனைவருக்கும் அவசியமானது. ஒரு நபரால் ஒரு நாள் முழுக்க தூங்க முடியாமா? என்றால் கண்டிப்பாக இல்லை. ஆனால், ராஜாஸ்தானை சேர்ந்த 42 வயதான ஒருவர் 300 நாட்கள் தூங்குகிறார். இது உங்களுக்கு ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கும். ஆனால், இது உண்மையாம்.

Rajasthan man sleeps 300 days a year due to axis hypersomnia disorder; know causes, symptoms and treatment of this disease in tamil

ராமாயணத்தில் ராவணனின் தம்பியான கும்பகர்னனை நம்மில் பெரும்பாலோருக்கு தெரியும். கும்பகர்ணன் தன் வாழ்வின் பல காலத்தை தூக்கத்தில் கழிந்தான். ஒரே நேரத்தில் ஆறு மாதங்கள் வரை தூங்கிக்கொண்டிருந்தான் எனப் புராணங்களில் கூறுவதுண்டு. மேலும் பெரும்பாலும், நம் நாட்டில் நீண்ட மற்றும் ஆழமாக தூங்கும் நபர்களை அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் "கும்பகர்ணன்" என்று கேலி மற்றும் கிண்டல் செய்வார்கள். இதேபோன்று, உண்மையாக 300 நாட்கள் தூங்கும் நபரை பற்றியும் அவருக்கு வந்திருக்கும் அறிய வியாதியை பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தூங்கும் வியாதி

தூங்கும் வியாதி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள நாகூரை சேர்ந்தவர் புர்காரம். 42 வயதாகும் இவர் ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்குகிறார். ஆக்சிஸ் ஹைப்பர்சோம்னியா எனும் வினோத நோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயினால் 23 ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டார்.

அரிய வகை நோய்

அரிய வகை நோய்

ஒரு நாளைக்கு எட்டு மணிநேர தூக்கம் போதுமானது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், புர்காரம் ஒருமுறை 25 நாட்கள் தூங்குவதாக கூறப்படுகிறது. ஆக்சிஸ் ஹைப்பர்சோம்னியா எனப்படும் அரிய கோளாறால் புர்காரம் அவதிப்படுகிறார். 23 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு முதன்முதலில் அரிய நோய்க்குறி இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர், இந்த நிலை அவரது நல்வாழ்வையும் வாழ்க்கை முறையையும் முழுவதுமாக பாதித்தது.

அவரது தொழில்

அவரது தொழில்

புர்காரம் தனது கிராமத்தில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். புர்காரமின் அரிய நிலை காரணமாக, அவர் தனது உள்ளூர் கடையை ஒரு மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டுமே திறந்து வைத்து தொழில் செய்கிறார். ஏனெனில் அவர் தூங்கும்போது, அவரை எழுப்புவது மிகவும் கடினமான பணியாகும்.

உணவு

உணவு

புர்காரின் தூக்க நாட்கள் அதிகரித்தவுடன் இது ஒரு வினோத நோய் என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

தூக்கத்திலிருந்து உணவு சாப்பிடவும் அவர் எழுந்திருக்க மாட்டாராம். இதனால் அவர் தூங்கும் போதோ அவரது உறவினர்கள் அவருக்கு உணவை ஊட்டுகிறார்களாம். இந்த வியாதியால், அந்த நபரே தூக்கத்திலிருந்து எழ நினைத்தாலும் அவரது உடல் ஒத்துழைக்காது என்று மருத்துவர்கள் கூறுகிறார்களாம்.

ஆரம்பகால நோயறிதல்

ஆரம்பகால நோயறிதல்

புர்காரம் ஆரம்ப நாட்களில் அதிகமாக தூங்கியபோது அவரது குடும்பத்தினர் மருத்துவ உதவியை நாடினர். அந்த நேரத்தில், அவர் ஒரு நாளைக்கு 15 மணி நேரம் தூங்குவார் என்று கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக, தூக்கத்தின் காலம் பல மணிநேரங்கள் அதிகரித்தது. இறுதியில், இப்போது அவரது அறிகுறிகள் மிகவும் மோசமாகிவிட்டன. ஆதலால், அவர் 20 முதல் 25 நாட்கள் வரை இப்போது தூங்குகிறார். ஆதாவது ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்கியே தன் வாழ்க்கையை கழிக்கிறார்.

தலைவலியை அனுபவிக்கிறார்

தலைவலியை அனுபவிக்கிறார்

அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போதே குடும்ப உறுப்பினர்கள் அவருக்காக அன்றாட வேலைகளைச் செய்ய வேண்டும். புர்காரம் இதுகுறித்து கூறுகையில், நீண்ட நேரம் தூக்கத்தால் தான் ஓய்வெடுக்கவில்லை என்றும் அவர் பெரும்பாலான நேரங்களில் சோர்வாக இருப்பதாகவும் கடுமையான தலைவலியை அனுபவிப்பாதாகவும் கூறுகிறார்.

நம்பிக்கை தெரிவிக்கின்றனர்

நம்பிக்கை தெரிவிக்கின்றனர்

புர்காராமின் மனைவி லிச்மி தேவியும் அவரது தாயார் கன்வாரி தேவியும் விரைவில் அவர் குணமடைவார்கள், முன்பு போலவே இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று நம்புகிறார்கள் என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

ஹைப்பர்சோம்னியா

ஹைப்பர்சோம்னியா

ஹைப்பர்சோம்னியா என்பது பகலில் அதிக தூக்கத்தை உணரும் ஒரு நிலை. நீண்ட தூக்கத்திற்குப் பிறகும் இது ஏற்படலாம். ஹைப்பர்சோம்னியாவின் மற்றொரு பெயர் அதிகப்படியான பகல்நேர தூக்கம் (EDS). ஹைப்பர்சோம்னியா முதன்மை நிலை அல்லது இரண்டாம் நிலை என வகைப்படுத்தப்படுகிறது. இரண்டாம் நிலை ஹைப்பர்சோமியா மற்றொரு மருத்துவ நிலையின் விளைவாகும். ஹைப்பர்சோம்னியா உள்ளவர்கள் பகலில் செயல்படுவதில் சிரமப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் அடிக்கடி சோர்வாக இருக்கிறார்கள். இது அவர்களின் செறிவு மற்றும் ஆற்றல் மட்டத்தை பாதிக்கும்.

ஹைப்பர்சோமியாவின் அறிகுறிகள்

ஹைப்பர்சோமியாவின் அறிகுறிகள்

ஹைப்பர்சோம்னியாவின் முக்கிய அறிகுறி நிலையான சோர்வு. ஹைப்பர்சோம்னியா உள்ளவர்கள் மயக்கத்திலிருந்து விடுபடாமல் நாள் முழுவதும் தூங்கலாம். நீண்ட கால தூக்கத்திலிருந்து எழுந்திருப்பதற்கும் அவர்களுக்கு சிரமம் உள்ளது. பிற அறிகுறிகள்:

  • குறைந்த ஆற்றல்
  • எரிச்சல்
  • கவலை
  • பசியிழப்பு
  • மெதுவான சிந்தனை அல்லது பேச்சு
  • நினைவில் கொள்வதில் சிரமம்
  • ஓய்வின்மை
  • ஹைப்பர்சோம்னியாவுக்கு என்ன காரணம்?

    ஹைப்பர்சோம்னியாவுக்கு என்ன காரணம்?

    முதன்மை ஹைப்பர்சோம்னியா தூக்கம் மற்றும் விழித்திருக்கும் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் மூளை அமைப்புகளில் உள்ள சிக்கல்களால் ஏற்படுகிறது. சோர்வு அல்லது தூக்க மூச்சுத்திணறல் போன்ற போதிய தூக்கத்தை ஏற்படுத்தும் நிலைமைகளால் இரண்டாம் நிலை ஹைப்பர்சோம்னியா ஏற்படுகிறது. சில மருந்துகள் ஹைப்பர்சோம்னியாவை ஏற்படுத்தும். அடிக்கடி போதைப்பொருள் மற்றும் ஆல்கஹால் பயன்பாடு பகலில் தூக்கத்தைத் தூண்டும். குறைவான பொதுவான காரணங்கள் குறைந்த தைராய்டு செயல்பாடு மற்றும் தலையில் காயம் ஆகியவற்றாலும் ஏற்படலாம்.

    ஹைப்பர்சோம்னியா சிகிச்சை என்ன?

    ஹைப்பர்சோம்னியா சிகிச்சை என்ன?

    ஹைப்பர்சோம்னியாவின் காரணத்தைப் பொறுத்து இந்த நிலைக்கு சிகிச்சைகள் மாறுபடும். சில சந்தர்ப்பங்களில், போதைப்பொருள் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் ஹைப்பர்சோம்னியாவுக்கு சிகிச்சையளிக்கலாம். ஹைப்பர்சோம்னியா சிகிச்சையின் மற்றொரு முக்கியமான படி வாழ்க்கை முறை மாற்றங்கள். ஹைப்பர்சோம்னியா உள்ளவர்களுக்கு மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவர்கள் ஆல்கஹால், போதைப்பொருள் அல்லது காபி கூட உட்கொள்ளக்கூடாது. ஆற்றல் மட்டங்களை இயற்கையாக பராமரிக்க உயர் ஊட்டச்சத்து உணவு பரிந்துரைக்கப்படலாம்.

    இறுதி குறிப்பு

    இறுதி குறிப்பு

    ஆக்சிஸ் ஹைப்பர்சோம்னியா அல்லது ஹைப்பர்சோம்னியா என்பது உயிருக்கு ஆபத்தான நிலை அல்ல. ஆனால் இது ஒரு நபரின் ஆரோக்கியத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் கடுமையாக பாதிக்கும். சிலருக்கு, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சிகிச்சையின் மூலம் ஹைப்பர்சோம்னியாவை நிர்வகிக்க முடியும், ஆனால் சிலருக்கு இது வாழ்நாள் முழுவதும் தொந்தரவாக இருக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, July 14, 2021, 18:02 [IST]
Desktop Bottom Promotion