Latest Updates
-
கேஸ் அதிக தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி... இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...!
உணவு மற்றும் மாத்திரை இல்லாமலே உங்க நோயெதிர்ப்பு சக்தியை இந்த வழிகள் மூலம் பலப்படுத்தலாமாம்...!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, மக்களை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்கள் அனைவரும் அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முயற்சி செய்துவருகின்றனர். அந்த வகையில், வைட்டமின் சி மாத்திரைகள், துத்தநாக சப்ளிமெண்ட்ஸ் மற்றும் ஆயுர்வேத பொருட்கள் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர்.

தற்போது வரை கோவிட்-19 க்கு திட்டவட்டமான சிகிச்சை எதுவும் இல்லை என்பதால், மக்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதாக உறுதியளிக்கும் எதையும் தீவிரமாக எடுத்துக்கொள்வதால், வைட்டமின்கள் மற்றும் கூடுதல் பொருட்கள் வீட்டு அலமாரிகளில் இருக்கின்றன. எவ்வாறாயினும், நம் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வேலை கிக்ஸ்டார்ட் செய்ய ஒரு மாத்திரையை மட்டும் விட மிகவும் சிக்கலானது என்பதை நாம் உணரவில்லை. உணவுகள் மற்றும் மாத்திரை இல்லாமல் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிக்கலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

நோயெதிர்ப்பு அமைப்பு
நீங்கள் ஒரு மில்லியன் சப்ளிமெண்ட்ஸ் வாங்குவதற்கு முன், நோயெதிர்ப்பு அமைப்பு ஆன்டிபாடிகள், செல்கள், ரசாயனங்கள் மற்றும் உறுப்புகளின் சிக்கலான வலையமைப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவை நோய்க்கிருமிகளைத் தடுப்பதிலும், உங்கள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு தொற்றுநோயையும் எதிர்த்துப் போராடுவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த அமைப்பு எந்த நோய்களையும் உங்கள் உடலுக்குள் அனுமதிக்காது. நமது நோயெதிர்ப்பு அமைப்பு செயல்படும் முறை சரியாக நேர்கோட்டு அல்ல என்பதால், தேவை வரும்போது மாத்திரையை எடுத்துக்கொள்வதை விட அதை அதிகரிப்பது அல்லது ஆதரிப்பது மிக அவசியம்.

நோயெதிர்ப்பு அமைப்பு உங்கள் தனிப்பட்ட இராணுவம்
தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடும் உங்கள் இராணுவமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை நீங்கள் நினைக்கலாம். ஆனால் தேவை வரும்போது அதைச் செய்வதற்கான சரியான பயிற்சிக்கு நீங்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். ஒரு நாள் முன்பு உங்கள் வீரர்கள் வெடிமருந்துகளை வழங்குவதன் மூலம் ஒரு போரில் வெற்றி பெறுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. இதேபோல், உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை தொடர்ந்து பராமரிக்க நீங்கள் பயிற்சியளிக்க வேண்டும். உங்கள் உடலுக்கு வரும் எந்த நோய்க்கிருமிகளையும் சமாளிக்க இயங்க வேண்டும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ ஒரு முழுமையான அணுகுமுறையை உருவாக்கும் வழிகளை இக்கட்டுரையில் பட்டியலிட்டுள்ளோம்.

தூக்க சுழற்சியை சரிசெய்யவும்
இது மிகவும் வெளிப்படையான அறிவுரை மற்றும் நீங்கள் எப்போதுமே கேட்கும் ஒன்று போல் தோன்றினாலும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்கம் உங்கள் வேலையை சரியாக செய்ய உதவுகிறது மற்றும் மன அழுத்தமில்லாத வாழ்க்கை முறையை வழிநடத்துகிறது. ஆதலால், தினமும் 6 முதல் 7 மணிநேரம் வரை தூக்கத்தைப் பெறுவதை உறுதிசெய்யுங்கள். அப்போது, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் உணர்வீர்கள். தூக்கமின்மையால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பும் பாதிக்கப்பட்டிருக்கும். ஆதலால், நன்றாக தூங்குவது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நோயெதிர்ப்பு அமைப்பை பாதிக்கிறது
பரபரப்பான நம்முடைய வாழ்க்கை முறையில் மன அழுத்தத்தை ஒழிக்க முடியாது என்பதை நாம் அறிவோம். எவ்வாறாயினும், நம் வாழ்வில் உள்ள அழுத்தங்களையும் எதிர்மறையான சூழ்நிலைகளையும் நிர்வகிப்பதற்கான சமாளிக்கும் வழிமுறைகளை நாம் அனைவரும் கற்றுக்கொள்ளலாம். அதிகளவு மன அழுத்தம் அழற்சி செயல்பாட்டின் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இதன் விளைவாக, உங்கள் நோயெதிர்ப்பு அமைப்பு பாதிக்கப்படும் மற்றும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் திறன் குறைகிறது.

மன அழுத்தத்தை குறைக்கவும்
நீங்கள் அதிக மன அழுத்தமாக இருக்கும்போது, அதை குறைக்க அதிக முன்னுரிமை கொடுக்க வேண்டும். உங்கள் மனதில் உள்ள விஷயங்கள் அனைத்தையும் எழுத முயற்சி செய்யலாம். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் செய்ய முயற்சிக்காதீர்கள். அதற்கேற்ப உங்கள் வேலையைப் பிரிக்கவும். மற்றொரு மாற்று அணுகுமுறை என்னவென்றால், உங்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களிடம் மனம்விட்டு பேசுங்கள். எதிர்மறை எண்ணங்களை தவிர்த்து, நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

உடலுக்கு என்ன தேவை?
பெரும்பாலும், உடற்பயிற்சி செய்யும்போது ஒரு தீவிர அணுகுமுறையை நாம் நாடுகிறோம். பெரும்பாலான மக்கள் உட்கார்ந்த வாழ்க்கை முறையைதான் வாழ்கிறார்கள். இதனால் பல ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நடைமுறைகள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை அழிக்கக்கூடும். இந்நிலையில், நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியமாகிறது. உங்கள் வொர்க்அவுட்டை வழக்கமாகக் கொண்டு வரும்போது சமநிலையை ஏற்படுத்துவது முக்கியம் மற்றும் உங்கள் உடலின் தேவைகளைக் கேட்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்
நீங்கள் குறிப்பாக நன்கு நிதானமாகவும், ஆற்றலுடன் இருப்பதாக உணர்ந்தால், வழக்கத்தை விட சற்று அதிகமாக நீங்கள் பயிற்சி மேற்கொள்ளலாம். ஆனால் நீங்கள் ஏற்கனவே சோர்வாக உணர்ந்தால், குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் பயிற்சியை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். நினைவில் கொள்ளுங்கள், இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.



Click it and Unblock the Notifications











