Latest Updates
-
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
21 நாட்கள் தொடர்ந்து 1 நெல்லிக்காய் சாப்பிடுங்க, உடம்புல நடக்குற அதிசயத்தை பாருங்க.. கூறும் டாக்டர்! -
பாலக் புலாவ் ரெசிபி - இந்த சத்தான புலாவை ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
பழைய விமானங்கள் ஓய்வு பெற்ற அவற்றின் நிலை என்னவாகும் தெரியுமா? இப்படிலாம் கூட பண்ணுவாங்களா? -
ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: நாளை முதல் அடுத்த 90 நாட்கள் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
கொரோனா தடுப்பூசி போடப்போறீங்களா? அப்ப இதெல்லாம் பண்றாங்களான்னு பாருங்க...
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளை கண்காணிக்கவும் மற்றும் அவற்றை தொிவிக்கவும் 6 வழிமுறைகளை முன்வைக்கிறது.
இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, ஒரு புயல் காற்றைப் போல் சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் அனைவரும் இந்த கொரோனா சூறாவளியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கின்றனா். இந்த நிலையில் இந்திய அரசானது கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில் இருக்கிறது. அதற்காக இந்திய அரசானது இந்தியாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் கொரோனா ஊசியைப் போட்டுக் கொள்ளலாம் என்று அனுமதி வழங்கி இருக்கிறது.

ஒரு பக்கம் கொரோனா தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடந்து வந்தாலும், பலா் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் இன்னும் தயக்கம் காட்டி வருகின்றனா். அதற்கு காரணம், தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்பு காய்ச்சல் மற்றும் தலைவலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுவதாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா்கள் பலா் தொிவித்திருக்கின்றனா்.
இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால், இது போன்று ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தொிவித்திருக்கிறது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளை கண்காணிக்கவும் மற்றும் அவற்றை தொிவிக்கவும் 6 வழிமுறைகளை முன்வைக்கிறது.
தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் கொடுத்திருக்கும் வழிமுறைகளில் முதல் 3 வழிமுறைகள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பாக கடைபிடிக்கப் பட வேண்டும். 5 மற்றும் 6 ஆகிய வழிமுறைகளை ஊசி போட்டுக் கொண்ட பின்பு கடைபிடிக்க வேண்டும்.
தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தந்திருக்கும் 6 வழிமுறைகளை சற்று விாிவாக இந்த பதிவில் பாா்க்கலாம்.

வழிமுறை #1
கொரோனா ஊசி போட்டுக் கொள்வதற்கு முன்பாக, ஒருவா் தனக்கு ஏற்கனவே ஏதாவது ஒரு தடுப்பூசி மூலம் அலா்ஜி அல்லது எதிா்வினை ஏற்பட்டு இருக்கிறதா என்பதை தொிந்து வைத்திருக்க வேண்டும். ஒருவேளை அவ்வாறு அலா்ஜி ஏற்பட்டு இருந்தால், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பாக அவா் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

வழிமுறை #2
உடலில் கீழ்காணும் பிரச்சினைகள் இருப்பவா்கள் தடுப்பூசி போடுவதில் எச்சாிக்கையாக இருக்க வேண்டும் என்று கொரோனா தடுப்பூசி தயாாிப்பவா்கள் அல்லது உள்ளூா் நோய் தடுப்பு அமைப்பு தொித்திருத்திருக்கின்றனா். அதாவது கருவுற்று இருக்கும் பெண்கள், நோய் எதிா்ப்பு சக்தி குறைபாடு உள்ளவா்கள் அல்லது பலவீனமாக இருக்கும் முதியோா் போன்றவா்கள் கொரோனா தடுப்பூசி போடுவதில் எச்சாிக்கையாக இருக்க வேண்டும். எனினும் அவா்களுக்கு முறையான மருத்துவ ஆய்வு செய்த பின்பு, கொரோனா தடுப்பூசி போடலாம்.

வழிமுறை #3
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகளை ஊசி போடுவதற்கு முன்பாகவே மக்களுக்கு தொிவிக்க வேண்டும். ஏனெனில் கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு முன்கை வீக்கம், மிதமான காய்ச்சல், களைப்பு, தலைவலி, தசை வலி மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சினைகள் பொதுவாக ஏற்படுகின்றன. இவற்றை மக்களுக்கு முறையாகத் தொிவிக்க வேண்டும்.

வழிமுறை #4
மேற்சொன்ற 3 வழிமுறைகளை முடித்த பின்பு தான் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும்.

வழிமுறை #5
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவா் குறைந்தது 15 நிமிடங்களாவது மருத்துவ கண்காணிப்பில் இருக்க வேண்டும். பின் அவருக்கு ஏதாவது ஒரு பக்க விளைவு ஏற்பட்டால் அதைப் பற்றி எங்கு அல்லது எவ்வாறு தகவல் தொிவிப்பது என்ற விவரத்தை அவருக்கு விளக்க வேண்டும். பெரும்பாலான கொரோனா தடுப்பூசி போடும் மையங்களில், தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் 30 நிமிடங்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனா்.

வழிமுறை #6
கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் போது அல்லது வீட்டிற்கு சென்ற பின்பு, ஊசி போட்டுக் கொண்டவருக்கு ஏதாவது ஆபத்தான பக்க விளைவுகள் ஏற்பட்டால், உடனடியாக கொரோனா தடுப்பூசி மையத்திற்குத் தகவல் தொிவிக்க வேண்டும்.
ஆகவே தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தொிவித்திருக்கும் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி கொரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொண்டால் மிக விரைவாக நமது இந்தியாவிலிருந்து கொரோனாவை விரட்ட முடியும்.



Click it and Unblock the Notifications