Latest Updates
-
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
H1N1 Alert: கர்நாடகாவில் பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பலி - இதன் அறிகுறிகள் என்ன? இது எப்படி பரவுகிறது? -
சில நாடுகள் ஏன் இடதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன? சில நாடுகள் ஏன் வலதுப்புறத்தில் கார் ஓட்டுகின்றன தெரியுமா? -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 45 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க வேலையில் கவனமா இருக்கணும்.. -
சாணக்கிய நீதி படி பெற்றோர்கள் செய்யும் இந்த 4 தவறுகள் அவர்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்குமாம் -
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...!
ஜோதிடத்தின் கிரகங்களின் இயக்கங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. ஒரு ராசியில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இணையும் போது அவை ராஜயோகங்ளை உருவாக்குகின்றன. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் சுக்கிரன், சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்கள் ரிஷப ராசியில் இணைந்து சக்திவாய்ந்த திரிகிரக யோகத்தை உருவாக்குகின்றன.
கிரகங்களின் ராஜாவான சூரியன், கிரகங்களின் இளவரசரான புதன் மற்றும் செல்வத்தின் அதிபதியான சுக்கிரன் ஒரே ராசியில் இணையும் போது அது ஜோதிடரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த யோகம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சில ராசிக்காரர்கள் மகத்தான அதிர்ஷ்டத்தை அடையப்போகிறார்கள். இதனால் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலுமே மிகப்பெரிய நன்மைகளை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பொற்காலத்தின் தொடக்கமாக இருக்கபோகிறது. அவர்களின் இரண்டாவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகிறது. இதனால் அவர்களின் பொருளாதார நிலையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படுகிறது. இது அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும் காலமாக இருக்கும். வேலையில் இருப்பவர்கள் அவர்களின் துறையில் பெரிய சாதனைகளை செய்ய முடியும். அவர்கள் மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஆதரவைப் பெறுவார்கள், அதன் மூலம் வெற்றியை அடைவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பும் வேலை கிடைக்கும்.
இந்த காலகட்டத்தில் அவர்களின் நீண்ட கால இலக்குகளை அடைய முடியும். வியாபாரிகளுக்கு சில பெரிய ஆர்டர்கள் அவர்களைத் தேடி வரும். உடல்நிலை திருப்திகரமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு அவர்களுக்கு பொருத்தமான துணை கிடைக்க வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான தருணங்கள் வரும். இது பொதுவாக வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலகட்டங்களில் ஒன்றாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களின் ஒன்பதாம் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவார்கள். அவர்களின் முதலீடுகள் சிறந்த பலன்களைத் தரும், மேலும் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து லாபம் ஈட்டலாம். வீட்டில் சுப காரியங்களில் நடப்பதற்கும், குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தைச் செலவிடுவதற்கும் இது ஒரு நல்ல காலமாக இருக்கும்.
சூரியன் மற்றும் புதனின் ஆசியால் அவர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றத்தையும், நிம்மதியையும் அடைய முடியும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன, மேலும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும். இந்த காலகட்டத்தில் பெரிய உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இருக்காது, பழைய உடல்நல பிரச்சினைகளும் முடிவுக்கு வரும்.
மகரம்
மகர ராசியின் ஐந்தாவது வீட்டில் இந்த திரிகிரக யோகம் உருவாகிறது, இது அவர்களின் அதிர்ஷ்டக்கதவைத் திறக்கப்போகிறது. இந்த யோகத்தால் அவர்கள் பல நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். அவர்களின் கடின உழைப்புக்கான பலன்களை இப்போது அறுவடை செய்யப்போகிறார்கள். பணியிடத்தில் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை அவர்கள் திறமையாக முடிக்க முடியும். இதனால் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். திட்டமிட்ட பணிகளைத் திறமையாகச் செய்ய அவர்களால் முடியும். வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் எதிர்பாராத லாபத்தை அதிகரிக்கலாம். திருமண வாழ்க்கையில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சூரியன் மற்றும் சுக்கிரனின் ஆசியுடன், அவர்கள் வாழ்க்கையில் பல நன்மைகளை அடையப்போகிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
