இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம்

ஒவ்வொரு வீட்டிலும் பூஜையறை என்பது மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. இது நேர்மறை மற்றும் ஆன்மீக ஆற்றல் நிறைந்த இடமாக உள்ளது. இந்த இடத்தில் மக்கள் அமைதியை உணர்வதுடன், தியானம் செய்யவும், இறைவனுடன் ஆழமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது. எனவே, அந்த இடத்தின் புனிதத்தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலைப் பாதுகாக்கக, சில குறிப்பிட்ட பொருட்களை பூஜையறையில் வைக்கக் கூடாது.

Vastu Tips Things You Should Never Keep in Your Pooja Room

வாஸ்து சாஸ்திரத்தின்படி, பலர் அறியாமலேயே பூஜை அறையிலோ அல்லது அதைச் சுற்றியுள்ள இடங்களிலோ சில பொருட்களை வைத்துவிடுகிறார்கள். இது வீட்டில் பல்வேறு சிக்கல்களையும், எதிர்மறை ஆற்றலையும் வரவழைக்கக்கூடும். இந்த பதிவில் வீட்டில் எந்தெந்த பொருட்களை வைத்திருப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்து கொள்ளலாம்.

உடைந்த கடவுள் சிலைகள் மற்றும் கிழிந்த படங்கள்

வாஸ்து சாஸ்திரத்தின்படி, உடைந்த அல்லது சேதமடைந்த சிலைகள் மற்றும் படங்களை ஒருபோதும் பூஜை அறையில் வைக்கக்கூடாது. இந்த பொருட்கள் வாஸ்து தோஷங்கள், எதிர்மறை ஆற்றல் மற்றும் துரதிர்ஷ்டத்தை ஈர்ப்பதாகக் கருதப்படுகிறது. அதற்குப் பதிலாக, அவற்றை ஓடும் நீரில் மரியாதையுடன் கரைக்க வேண்டும் அல்லது மரத்திற்கு அருகில் நிலத்தில் புதைக்க வேண்டும். உடைந்த அல்லது சேதமடைந்த சிலைகளை பூஜை அறையில் அல்லது வீட்டில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இறந்தவர்களின் புகைப்படங்கள்

வாஸ்து சாஸ்திரத்தின்படி, இறந்த உங்கள் குடும்பத்தினர் புகைப்படங்களை பூஜை அறையில் வைப்பது அசுபமாகக் கருதப்படுகிறது. பூஜை அறை என்பது கடவுளை வழிபடும் இடம்தானே தவிர முன்னோர்களை நினைவுகூரும் இடமல்ல. எனவே இறந்தவர்களின் புகைப்படங்களை வீட்டின் வேறு ஒரு தனி இடத்தில் வைப்பதே சிறந்தது.

பழைய பிரசாதம் மற்றும் வாடிய மலர்கள்

பழைய பிரசாதம், வாடிய மலர்கள் மற்றும் சேதமடைந்த மாலைகளை ஒருபோதும் பூஜை அறையில் வைத்திருக்கக்கூடாது. கடவுள் சிலைகளுக்குப் படைத்த பிறகு அவற்றை அகற்றுவதை பெரும்பாலான மக்கள் மறந்துவிடுகிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின்படி, இது வீட்டில் உள்ள நேர்மறை ஆற்றலைப் பாதிக்கக்கூடும். உங்கள் வீட்டில் நல்லிணக்கத்தையும் தூய்மையையும் பாதுகாக்க, ஒவ்வொரு முறை பூஜை செய்யும்போதும் கடவுள் சிலைகளுக்குப் புதிய மலர்கள், பழங்கள் அல்லது பிரசாதத்தைப் படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

கண்ணாடி

பூஜை அறையில் கடவுள் சிலைகளுக்கு நேர் எதிரே கண்ணாடியை வைப்பது அசுபமாகக் கருதப்படுகிறது; ஏனெனில், இது வீட்டில் ஆற்றல் சமநிலையின்மையை உருவாக்கக்கூடும். மேலும், கண்ணாடிகள் ஆற்றலைப் பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. எனவே கண்ணாடி பூஜை அறையில் இருந்தால், அவை நேர்மறை மற்றும் ஆன்மீக ஆற்றலைப் பூஜை அறையிலிருந்து விலக்கிச் செல்லவும் வாய்ப்புள்ளது.

ஒரே மாதிரியான பல சிலைகள்

பலர் ஒரே தெய்வத்தின் பல சிலைகளையோ அல்லது புகைப்படங்களையோ வைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். வாஸ்து சாஸ்திரத்தின்படி, இது பூஜை அறையில் ஆற்றல் சமநிலையின்மையை ஏற்படுத்தக்கூடும். எனவே பூஜை அறையில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு சிலை மட்டுமே போதுமானது.

கூர்மையானப் பொருட்கள்

கத்தி அல்லது கத்தரிக்கோல் போன்ற கூர்மையான பொருட்களை ஒருபோதும் பூஜை அறையில் வைக்கக்கூடாது. ஏனெனில், அவை எதிர்மறை ஆற்றலை ஈர்ப்பதாகவும், பூஜை அறையின் புனிதமான மற்றும் அமைதியான சூழலுக்கு முரணானவை என்றும் நம்பப்படுகிறது. மேலும், இத்தகைய பொருட்கள் வழிபாட்டின் போது கவனச்சிதறலை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Friday, August 7, 2026, 21:50 [IST]
Desktop Bottom Promotion