Latest Updates
-
இன்றைய ராசிபலன் 31 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வண்டி ஓட்டணும்... இல்லனா ஆபத்து தேடிவரும்...! -
புதன் உருவாக்கும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் அசுர வளர்ச்சி ஏற்படும்.. -
தமிழ் புத்தாண்டு அன்று மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்! -
ஒரு துண்டு இஞ்சி இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்... -
IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள்! -
நெகட்டிவா யோசிக்கிறதுல இந்த 4 ராசிக்காரங்கள யாராலும் மிஞ்ச முடியாதாம்... உங்க ராசி என்ன? -
முட்டை இருந்தா.. ஒருடைம் ஈவ்னிங் நேரத்துல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
திமுக, அதிமுக இரண்டு திராவிட கட்சிகளாலும் ஜெயிக்கவே முடியாத தமிழ்நாட்டின் 2 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்படப்போகுது.. -
தக்காளி பிரியாணி ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு செஞ்சு பாருங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்...!
வட இந்தியாவில் பிரபலமான 'பாங்' பானத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
இன்று ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி என்றாலே அனைவருக்கும் வண்ணப் பொடிகளை தூவி விளையாடுவது தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் வட இந்தியாவில் வண்ணப் பொடிகளை தூவி விளையாடுவது மட்டுமின்றி, பாங் என்றும் பானமும் மிகவும் பிரபலமானது.
இது ஒரு சோமபானம். இந்த பாங் பானம் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தது என்று புராணங்கள் கூறுகின்றனர். இது ஆல்கஹால் வகையைச் சேர்ந்தது தான். ஆனால் இதனை அளவாக பருகினால் நல்லது. அதுவே அளவுக்கு அதிகமானால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இங்கு வட இந்தியாவில் பிரபலமான பாங் பானத்தைப் பற்றிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

இயற்கை வலி நிவாரணி
பாங் ஒரு இயற்கையான வலி நிவாரணி. இது கன்னாபிஸ் என்னும் ஒருவகை கஞ்சா இலைகள் மற்றும் மலர்களால் தயாரிக்கப்படுவது. இது இந்தியாவில் பழங்காலம் முதலாக சமயம் சார்ந்த சடங்குகளில் பருகப்பட்டு வருகிறது.

கவலையை போக்கும்
பழங்காலத்தில் பாங் என்னும் பானம் மனக் கவலைகளைப் போக்க பருகப்பட்டு வந்தது. மேலும் இந்த பானம் சிவபெருமானுடன் தொடர்பு படுத்தப்பட்டு வருகிறது.

நன்மைகள்
பாங் என்னும் பானம் மன இறுக்கம், காய்ச்சல், ஆர்த்ரிடிஸ், செரிமான பிரச்சனைகளைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

பக்க விளைவு
பாங் பானத்தை அளவுக்கு அதிகமாக பருகினால், தீவிர பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் வேகமாக இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும்.

பருகக்கூடாதவர்கள்
பாங் பானத்தை இதய பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் கொண்டவர்கள் பருகக் கூடாது.

வெறும் வயிற்றில் கூடாது
பாங் பானத்தை வெறும் வயிற்றில் பருகக்கூடாது. அப்படி பருகினால், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.

ஹோலி, சிவராத்திரி
என்ன தான் இது சட்டவிரோதமான ஒன்றாக இருந்தாலும், இந்தியாவில் இது ஹோலி மற்றும் சிவராத்திரி காலங்களில் பேஸ்ட் செய்து உருண்டைகளாக விற்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications











