Latest Updates
-
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்
வட இந்தியாவில் பிரபலமான 'பாங்' பானத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
இன்று ஹோலி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி என்றாலே அனைவருக்கும் வண்ணப் பொடிகளை தூவி விளையாடுவது தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் வட இந்தியாவில் வண்ணப் பொடிகளை தூவி விளையாடுவது மட்டுமின்றி, பாங் என்றும் பானமும் மிகவும் பிரபலமானது.
இது ஒரு சோமபானம். இந்த பாங் பானம் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தது என்று புராணங்கள் கூறுகின்றனர். இது ஆல்கஹால் வகையைச் சேர்ந்தது தான். ஆனால் இதனை அளவாக பருகினால் நல்லது. அதுவே அளவுக்கு அதிகமானால் பல விளைவுகளை சந்திக்க நேரிடும்.
இங்கு வட இந்தியாவில் பிரபலமான பாங் பானத்தைப் பற்றிய சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

இயற்கை வலி நிவாரணி
பாங் ஒரு இயற்கையான வலி நிவாரணி. இது கன்னாபிஸ் என்னும் ஒருவகை கஞ்சா இலைகள் மற்றும் மலர்களால் தயாரிக்கப்படுவது. இது இந்தியாவில் பழங்காலம் முதலாக சமயம் சார்ந்த சடங்குகளில் பருகப்பட்டு வருகிறது.

கவலையை போக்கும்
பழங்காலத்தில் பாங் என்னும் பானம் மனக் கவலைகளைப் போக்க பருகப்பட்டு வந்தது. மேலும் இந்த பானம் சிவபெருமானுடன் தொடர்பு படுத்தப்பட்டு வருகிறது.

நன்மைகள்
பாங் என்னும் பானம் மன இறுக்கம், காய்ச்சல், ஆர்த்ரிடிஸ், செரிமான பிரச்சனைகளைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும்.

பக்க விளைவு
பாங் பானத்தை அளவுக்கு அதிகமாக பருகினால், தீவிர பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதுவும் வேகமாக இதயத் துடிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றால் அவஸ்தைப்படக்கூடும்.

பருகக்கூடாதவர்கள்
பாங் பானத்தை இதய பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் கொண்டவர்கள் பருகக் கூடாது.

வெறும் வயிற்றில் கூடாது
பாங் பானத்தை வெறும் வயிற்றில் பருகக்கூடாது. அப்படி பருகினால், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.

ஹோலி, சிவராத்திரி
என்ன தான் இது சட்டவிரோதமான ஒன்றாக இருந்தாலும், இந்தியாவில் இது ஹோலி மற்றும் சிவராத்திரி காலங்களில் பேஸ்ட் செய்து உருண்டைகளாக விற்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications