Just In
- 30 min ago அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
- 1 hr ago 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- 1 hr ago திரிபலா பற்றி தெரியுமா? உங்கள் உடலுக்கும் அழகுக்கும் சிறந்த மூலிகை..!
- 1 hr ago ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இந்த 5 ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க...!
Don't Miss
- Sports சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு! டிவோன் கான்வே விலகல்.. மாற்று வீரராக யாக்கர் கிங் அறிவிப்பு
- News கோவை தொழிலதிபரிடம் ரூ 300 கோடி மோசடி! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது.. மேலும் இருவருக்கு வலை
- Finance இந்த ஒரு விஷயத்துக்கு இந்தியா, விளாடிமீர் புடின்-க்கு நன்றி சொல்லிய ஆகனும்..!
- Movies Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஒரு மாதம் தொடர்ச்சியாக சீரக நீரைக் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தொடர்ச்சியாக அந்நீரை ஒரு மாதம் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
வீட்டுச் சமையலறையில் உள்ள மசாலாப் பொருட்களில் ஒன்று தான் சீரகம். இந்த சீரகத்தில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சீரகத்தில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள், உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து உடலைப் பாதுகாக்கும்.
மேலும் ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்திலும் சீரகம் பல பிரச்சனைகளைப் போக்க முக்கிய பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அத்தகைய சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தொடர்ச்சியாக அந்நீரை ஒரு மாதம் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.
செரிமான பிரச்சனைகள்
செரிமான பிரச்சனைகள் இருந்தால், சீரகத் தண்ணீர் உடனடி நிவாரணம் வழங்கும்.
மலச்சிக்கல்
சீரகத்தில் நார்ச்சத்து உள்ளது. எனவே மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள், சீரக நீரை வெறும் வயிற்றில் குடித்தால், சிறப்பான பலன் கிடைக்கும்.
இரத்த அழுத்தம்
இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், சீரக நீரை எப்போதும் குடிப்பது மிகவும் நல்லது. ஏனெனில் சீரகத்தில் பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.
இரத்த சோகை
இரத்த சோகை இருப்பவர்களுக்கும் சீரகத் தண்ணீர் நல்லது. இதற்கு சீரகத்தில் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. இது ஹீமோகுளோபின் அளவை உடலில் அதிகரித்து, இரத்த சோகையைப் போக்கும்.
சளி
சளி பிரச்சனை இருந்தால், அப்போது வெறும் சுடுநீரைக் குடிக்காமல், நீரில் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், சுவாசக் குழாயில் உள்ள நோய்க்கிருமிகள் அழிக்கப்பட்டு, சளி, இருமலில் இருந்து விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
ஞாபக சக்தி
சீரகத்தில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இதனை அன்றாடம் உணவில் சேர்த்தால், ஞாபக சக்தி ஊக்குவிக்கப்படும்.
நோயெதிர்ப்பு மண்டலம்
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைத்தால், வெறும் நீரைக் குடிக்காமல், சீரக நீரைத் தொடர்ச்சியாக குடித்து வாருங்கள். இதனால் உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளிடமிருந்து நல்ல பாதுகாப்பு கிடைக்கும்.