Just In
- just now புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- 1 hr ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 3 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 3 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
Don't Miss
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Movies என்னது கங்குவா பட்ஜெட் 350 கோடி ரூபாயா?.. அடேங்கப்பா தலையே சுத்துதே
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
தீபாவளியன்று ஆஸ்துமா தொல்லையில் இருந்து விடுபட அற்புதமான வழிகள்!!!
ஆஸ்துமா என்றால் என்ன? சுவாசத்தின் போது நாம் உள்ளிழுக்கும் ஆக்ஸிஜனை நுரையீரலுக்குச் செல்ல விடாமல் தடுக்கும் சளி, நம் நுரையீரலையும் வீங்க வைத்திருக்கும். இதனால் ஆக்ஸிஜன் உள்ளே செல்ல முடியாமல், மார்பு இறுக்கமடையும்; நுரையீரலில் ஒருவிதமான ஒலி புறப்படும்; நம் சுவாசத்தில் ஒரு தடுமாற்றம் ஏற்படும். இந்தத் தொல்லைக்குப் பெயர்தான் ஆஸ்துமா!
சிகரெட் மற்றும் தூசி போன்ற மாசுள்ள காற்றை சுவாசித்தல் உள்ளிட்ட பல விஷயங்கள் ஆஸ்துமாவுக்குக் காரணிகளாக உள்ளன. ஆஸ்துமா நோயாளிகளுக்கான ஒரு வரப்பிரசாதமாகவே ஒரு இன்ஹேலரைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த நோயாளிகள் எதை மறந்து போனாலும், இந்த இன்ஹேலரை மட்டும் தன்னுடன் வைத்திருக்க மறக்கவே மாட்டார்கள்.
ஒருவேளை, ஏதாவது தவிர்க்க முடியாத காரணங்களால் அவர்கள் கைவசம் அந்த இன்ஹேலர் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது? அதிலும் தீபாவளி பண்டிகையின் போது இப்பிரச்சனைக்கு அதிகம் உள்ளாகக்கூடும். அப்போது அவர்கள் பதறக் கூடாது; மனம் உடைந்து போய்விடக் கூடாது. இன்ஹேலர் இல்லாத சமயத்திலும் ஆஸ்துமாவின் பாதிப்புகளிலிருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
நேராக உட்காரவும்
ஆஸ்துமா பிரச்சனை காரணமாக மார்பு திடீரென இறுக்கமடையும் போது, என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை அப்படியே போட்டு, நேராக நிமிர்ந்து உட்காருங்கள். உடம்பை வளைத்து அமர்ந்தாலோ அல்லது படுத்தாலோ, சரியாகச் சுவாசிக்க முடியாமல் போகும்.
ஆழமாக மூச்சு விடவும்
நேராக அமர்ந்தவாறு, நீளமாகவும் ஆழமாகவும் மூச்சை நன்றாக இழுத்து விடுங்கள். மூக்கின் மூலம் மூச்சை இழுத்து, வாயின் மூலம் வெளியேற்றுங்கள். அப்படிச் செய்தால்தான் சுவாசம் சீராகும்.
பதறாமல் இருக்கவும்
ஆஸ்துமா தன் வேலையைக் காண்பிக்கும் போது, 'அய்யோ, இன்ஹேலர் இல்லாமல் போச்சே' என்று பதறித் தவித்து விடாதீர்கள். பதறினால் மார்பின் இறுக்கம் மேலும் அதிகமாகித் தொல்லை கொடுக்கும். அப்படிப் பதறாமல், அமைதியாக இருந்தாலே போதும். மார்பின் இறுக்கம் தளர்ந்து, சுவாசமும் சீராகும்.
காரணிகளிலிருந்து தள்ளி இருக்கவும்
எந்த ஒவ்வாமை காரணமாகத் தன்னை ஆஸ்துமா தாக்கும் என்று ஒவ்வொரு ஆஸ்துமா நோயாளிக்கும் நன்றாகவே தெரியும். அந்தக் காரணிகளிலிருந்து அவர்கள் எப்போதும் தள்ளியே இருக்க வேண்டும். அதிலும் தீபாவளி அன்று வெளியே அதிகம் சுற்றக்கூடாது. ஏ.சி. அறை அல்லது தூய்மையான காற்று கிடைக்கும் இடத்திற்கு உடனடியாக அவர்கள் நகர்ந்து விட வேண்டும்.
சூடான பானம் குடிக்கவும்
ஆஸ்துமாவினால் அவதிப்படும் நேரத்தில், காபி போன்ற சூடான பானத்தைக் குடிப்பது நல்லது. அது சுவாசத்தை சீராக்கும் உடனடி நிவாரணியாக இருக்கும். மேலும் ஓரிரு மணிநேரத்திற்குத் தாக்குப் பிடிக்கவும் அது உதவியாக இருக்கும்.
அவசர உதவி கோரவும்
ஆஸ்துமாவின் காரணமாகத் தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு மூச்சு விட சிரமப்பட்டாலோ அல்லது இருமல் இருந்தாலோ, அசட்டையாக இருந்து விடாதீர்கள். உதவிக்கு உடனடியாக யாரையாவது அழைக்கவும். தேவைப்பட்டால், சட்டென்று 108-க்கு போன் செய்து ஆம்புலன்ஸை அழைத்து, அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.