Just In
- 3 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 8 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 11 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Movies டாடா பட நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்டம்..களைகட்டிய திருமணம்!
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நீரை நன்கு கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!
மழைக்காலமானது நெருங்கிக் கொண்டிருக்கிறது. இக்காலத்தில் நோய்களானது நீரின் வழியே அதிகம் பரவக்கூடும். எனவே இந்த மழைக்காலத்தில் குடிக்கும் நீரை நன்கு கொதிக்க வைத்து, வடிகட்டி குடித்து வர வேண்டும். இதனால் குடிக்கும் நீரில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் இருந்தாலும், அவை அழிக்கப்பட்டு, உடலை நோய்கள் தாக்காமல் பாதுகாக்கும்.
வெள்ளை சாதம் சாப்பிடுவதை தவிர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!!
ஆனால் பலருக்கு சுடுநீரை குடிப்பது என்றால் பிடிக்காது. மேலும் இத்தகையவர்கள் உடல்நலம் சரியில்லாத காலத்திலும் சுடுநீரை குடிக்கமாட்டார்கள். ஆனால் சுடுநீர் குடிப்பதால், உடலை நோய்கள் தாக்காமல் இருப்பதுடன், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இந்த கட்டுரையில், நீரை கொதிக்க வைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து பார்த்து, இனிமேலாவது நீரை கொதிக்க வைத்து குடித்து வாருங்கள்.
இதுப்போன்று வேறு: நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
நல்ல பாதுகாப்பு அளிக்கும்
பொதுவாக உடல்நலம் சரியில்லாமல் மருத்துவரிடம் சென்றால் அவர்கள் முதலில் பரிந்துரைப்பது நீரை காய்ச்சி குடிக்க சொல்வார்கள். ஏனெனில் உடல் நலம் பாதிக்கப்படுவதற்கு முதன்மையான காரணமாக இருப்பது நீர் தான். அத்தகைய நீரானது கிருமிகள் நிறைந்திருந்தால், அவை உடல் நலத்தை மேலும் பாதிக்கும். அதிலும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை அடிக்கடி வர ஆரம்பிக்கும். எனவே நீரை கொதிக்க வைத்து குடிப்பதால், அவை கிருமிகளின் தாக்கத்தை குறைப்பதுடன், டைபாய்டு, மஞ்சள் காமலை போன்றவற்றையும் விரைவில் குணமாகச் செய்யும். ஆகவே உடலை நோய்கள் தாக்காமல் இருக்க வேண்டுமானால், நீரை கொதிக்க வைத்து குடியுங்கள்.
செரிமானத்தை அதிகரிக்கும்
தினமும் காலையில் ஒரு டம்ளர் நீரை கொதிக்க வைத்து வெதுவெதுப்பான நிலையில் குடித்து வந்தால், அவை செரிமான மண்டலத்தின் செயல்பாட்டினை சீராக வைக்கும்.
டாக்ஸின்களை வெளியேற்றும்
நீரை காய்ச்சி குடிப்பதன் மூலம், உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் முற்றிலும் வெளியேற்றப்பட்டு, உடலானது சுத்தமாகவும், கொழுப்புக்கள் இன்றியும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே முடிந்தவரையில் குடிக்கும் நீர் சுடுநீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
தொண்டைக்கு பாதுகாப்பானது
கொதிக்க வைத்த நீர் தொண்டையில் உள்ள புண் மற்றும் நோய்த்தொற்றுக்களை நீக்கவல்லது. அதிலும் தொண்டைக் கரகரப்பு இருப்பவர்கள், சுடுநீரை குடித்து வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக பாட்டு பாடுவதில் ஆர்வம் உள்ளவர்கள், எப்போதும் சுடுநீர் குடிப்பது நல்லது.
குழந்தைகளுக்கு நல்லது
பெரியவர்களை விட, குழந்தைகள் தான் அவ்வப்போது காய்ச்சல், இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு ஆளாவார்கள். எனவே சிறு வயதிலிருந்தே அவர்களுக்கு நீரை காய்ச்சி குடிக்க வைத்துப் பழகினால், பிற்காலத்தில் நோய் தாக்குதல்களால் அவஸ்தைப்படாமல் இருப்பார்கள்.