Latest Updates
-
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...!
தீராத நோய்களை தீர்க்கும் பருத்தியை பற்றி தெரியுமா?
பருத்தியை நாம் ஆடைகள் தயாரிக்கவும், மெத்தைகளுக்காவும் தான் பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த பருத்தியின் இலை, பூ, பஞ்சு, பட்டை, வேர், வேர்பட்டை என அனைத்தும் மருத்துவ குணங்கள் உடையது. இந்த பருத்தி பஞ்சு மெத்தையில் படுத்து உறங்குவதால் ஆயுள் அதிகரிக்கும். பருத்தி ஆடைகள் கோடை காலத்திற்கு ஏற்றது.

பிரம்மை நோய்
கற்பனையில் ஒரு சிலர் தங்களுக்கு கை வலி, கால் வலி என கூறுவார்கள். மருந்தால் இது சரியாகாது. இது மனஅழுத்தம் ஏற்பட்டு அதனால் நரம்பு மண்டலம் பாதிப்படைந்து உண்டாகும் நோயாகும். இதற்கு பருத்தி வேரின் பட்டையை அரைலிட்டர் தண்ணீரில் போட்டு பாதியளவு சுண்டும் வரை காய்ச்சி வடிக்கட்டி 30மிலி அளவில் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் நரம்பு கோளாறுகள் அதனால் ஏற்படும் கற்பனை நோய்கள் நீங்கும்.

செரிமானம்
இன்று பலருக்கும் இருப்பது செரிமான பிரச்சனை தான். இந்த செரிமான பிரச்சனக்கு மருந்தாக பருத்தி பயன்படுகிறது.

வலிமைக்கு..
இலைக்கொழுந்தை நிழலில் காயவைத்து குடிநீரிட்டு கழிச்சல்களுக்கு கொடுத்தால் கழிச்சல் நிற்கும். உடல் வலிமை பெரும்.

வெள்ளை படுதல்
30 கிராம் இலை அல்லது மொக்கை எடுத்து மசிய அரைத்து 80 மிலி பசும்பாலில் கலந்து காலையில் ஒரு வேளை மட்டும் குடித்து வந்தால் பெண்களின் வெள்ளைப்படுதல் முதலிய சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.

வயிற்று கடுப்பு
தீராத வயிற்று கடுப்பு ஏற்பட்டால் இலைச்சாறு 30மிலி எடுத்து 150 பசும்பாலில் கலந்து காலை மாலை குடித்து வந்தால் மூலம் வயிற்று கடுப்பு நீங்கும்.

காயங்களுக்கு..
பூ அல்லது பருத்தி விதைகளை அரைத்து பற்றுபோட தீக்காயங்கள் ஆறும். பஞ்சை கருக்கிப்பொடித்து புரையோடிய புண்களுக்கு தடவ விரைந்து ஆறும். விதைகளை தோள் நீக்கி பொடித்து ஒரு தேக்கரண்டி வீதம் காலை, மாலை 200மிலி பசும்பாலில் கலந்து குடித்து வர நரம்பு மண்டலம் வலுப்பெறும்.



Click it and Unblock the Notifications











