Just In
- 7 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 8 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 9 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
வயிற்று கோளாறுகளை சரி செய்யும் கடுக்காய்! நாட்டு மருத்துவ குறிப்புகள்!
கடுக்காயின் பயன்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
கடுக்காய் அதிக மருத்துவ தன்மைகள் கொண்ட மருத்துவப்பொருள். இது பழங்காலமாக மருத்துவத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கடுக்காய் எளிதில் நாட்டுமருந்து கடைகளில் கிடைக்க கூடியது. இது சூரணமாகவும் கூட கிடைக்கிறது. கடுக்காய் வறட்சி, பசியின்மை, தோல் நோய்கள், குடல் புண்கள், காமாலை, பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற பலவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது.
வயிற்றுப்போக்கு
கடுக்காய் தூளை 1/2 தேக்கரண்டி அளவு எடுத்து, மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நீங்கும். இதனை தினமும் இரண்டு வேளைகள் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
மலச்சிக்கல் :
கடுக்காய்த்தூளை அரை தேக்கரண்டி அளவு எடுத்து, ஏழு நாட்களுக்கு இரவில் மட்டும் வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் தீரும்.
பல் வலி
கடுக்காய் தூளை சரிபாதியளவு உப்புடன் சேர்த்து பல் துலக்கி வந்தால் ஈறுகளில் உள்ள வலி, பற்களில் உள்ள வலிகள், பல் ஈறுகளில் இரத்தம் கசிதல் ஆகியவை குணமாகும்.
திரிபலா சூரணம்
திரிபலா சூரணம் நாட்டு மருந்து கடைகளில் எளிதில் கிடைக்க கூடிய ஒன்றாகும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவற்றின் கலவையே திரிபலா சூரணம் ஆகும்.
பயன்கள்
இந்த திரிபலா சூரணத்தை வெந்நீரில் இட்டு காய்ச்சி பருகி வந்தால், புளிச்ச ஏப்பம், செரியாமை, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற வயிற்று உபாதைகள் முற்றிலும் குணமாகும்.