Latest Updates
-
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்..
ஹை பிபி உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கோடையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில உணவுகளைக் காண்போம் வாருங்கள்.
இன்று ஏராளமானோர் சர்க்கரை நோயைப் போலவே, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். சொல்லப்போனால் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உயர் இரத்த அழுத்தம் ஓர் முக்கிய காரணமாகும். ஒருவர் தங்களது இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளாவிட்டால், அது இதய நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு மற்றும் மோசமான கண் பார்வை உட்பட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், தங்களின் இரத்த அழுத்தத்தை வழக்கமாக கண்காணிக்க வேண்டும் மற்றும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். அதோடு வாழ்க்கை முறை மாற்றங்களும் அவசியமாகும். இதனால் பல நோய்களை வரவிடாமல் சமாளிக்க முடியும்.

ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் பல காரணங்களால் ஏற்படலாம். அவை அதிகப்படியான உப்பு உட்கொள்வது, குறைவான பொட்டாசியத்தை எடுப்பது, அதிகளவு மது அருந்துவது, போதுமான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் மன அழுத்தம் போன்றவை. உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் ஒருசில உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் தேதி உலக உயர் இரத்த அழுத்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கோடையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில உணவுகளைக் காண்போம் வாருங்கள்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது. இச்சத்துக்கள் அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் வாழைப்பழம் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கிறது.

மாதுளை
மாதுளை இரத்த நாளங்களின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒரு நொதியான ACE அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க மாதுளையை தினமும் சிறிது உட்கொள்வது நல்லது.

மாம்பழம்
கோடையில் அதிகம் கிடைக்கும் பழங்களுள் ஒன்று தான் மாம்பழம். மாம்பழத்தில் நார்ச்சத்து, பீட்டா-கரோட்டின், பொட்டாசியம் போன்ற இரத்த அழுத்தத்தைக் குறைக்க தேவையான சத்துக்கள் உள்ளன. அதற்கு மாம்பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது மாம்பழ மில்க் ஷேக், ஸ்மூத்தி என்று எப்படி வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.

ஸ்ட்ராபெர்ரி
இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையைக் கொண்ட ஸ்ட்ராபெர்ரியில் அந்தோசையனின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளன. ஆகவே இப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

பசலைக்கீரை, பீட்ரூட் மற்றும் இஞ்சி
பீட்ரூட், பசலைக்கீரை, இஞ்சி போன்ற காய்கறிகளில் நைட்ரேட்டுகள் உள்ளன. இது உடலுக்குள் சென்று செரிமானத்திற்கு பின் நைட்ரிக் ஆக்ஸைடாக மாறும். இந்த நைட்ரிக் ஆக்ஸைடு இரத்த நாளங்களை தளர்த்தி விரிவுபடுத்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. ஆகவே உயர் இரத்த அழுத்த +நோயாளிகள் இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

தயிர்
தயிரில் கால்சியம் மட்டுமின்றி, பொட்டாசியமும் அதிகம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கிறது. இதில் நல்ல பாக்டீரியாக்களும் அதிகம் உள்ளதால், இது மன அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அதற்கு கோடையில் தயிரை மோர், ஸ்மூத்தி, லஸ்ஸி மற்றும் ரெய்தா போன்ற எந்த வடிவங்களிலும் உட்கொள்ளலாம்.

இளநீர்
இளநீர் உடலை குளிர்ச்சியுடனும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, ஒரு இயற்கையான டையூரிக்காகவும் செயல்படுகிறது. மேலும் இளநீர் உடலில் எலக்ட்ரோலைட்டுக்களை சமநிலையில் பராமரிப்பதோடு, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே கோடையில் தவறாமல் இளநீரை அதிகம் குடியுங்கள்.



Click it and Unblock the Notifications











