Just In
- 1 hr ago
சர்க்கரை நோயாளிகள் வெல்லம் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
- 2 hrs ago
மிதுனம் செல்லும் புதனால் அடுத்த 15 நாட்கள் இந்த ராசிகளுக்கு செம சூப்பரா இருக்கப் போகுது...
- 2 hrs ago
இந்த 5 ராசிக்காரர்கள் மிகவும் அப்பாவிகளாக இருப்பார்களாம்... இவங்கள சமாளிப்பது ரொம்ப கஷ்டமாம்!
- 3 hrs ago
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
Don't Miss
- News
என் கேரக்டரே இது தான்! எதைப்பற்றியும் கவலைப்படும் ஆள் நானில்லை -அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
- Finance
கோவை, சேலம் தொழிற்துறை ஊழியர்களை பதம் பார்க்கும் பணவீக்கம்.. மத்திய அரசு ரிப்போர்ட்..!
- Movies
அப்பாவை மறக்கமுடியாமல் அழுகிறாள் மீனாவின் மகள்..பார்க்கவே பாவமாக இருக்கு..கலங்கும் கலா மாஸ்டர்!
- Technology
வெறும் 4 நிமிடத்தில் 50% சார்ஜ்: மின்னல் வேக சார்ஜிங் டெக்னாலஜியை அறிமுகம் செய்த Infinix.!
- Sports
இதை கவனிதீர்களா?? இந்தியாவின் 3 ஸ்டார் வீரர்கள் படைக்கப்போகும் சாதனை.. இங்கி, டெஸ்டில் கலக்கல் தான்
- Automobiles
முன்பதிவு தொடங்கியது... இந்த காருக்காகதான் இந்தியாவே வெயிட்டிங்.... இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ஹை பிபி உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்!
இன்று ஏராளமானோர் சர்க்கரை நோயைப் போலவே, உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர். சொல்லப்போனால் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு உயர் இரத்த அழுத்தம் ஓர் முக்கிய காரணமாகும். ஒருவர் தங்களது இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளாவிட்டால், அது இதய நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு மற்றும் மோசமான கண் பார்வை உட்பட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், தங்களின் இரத்த அழுத்தத்தை வழக்கமாக கண்காணிக்க வேண்டும் மற்றும் மருந்துகளை தவறாமல் உட்கொள்ள வேண்டும். அதோடு வாழ்க்கை முறை மாற்றங்களும் அவசியமாகும். இதனால் பல நோய்களை வரவிடாமல் சமாளிக்க முடியும்.
ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் பல காரணங்களால் ஏற்படலாம். அவை அதிகப்படியான உப்பு உட்கொள்வது, குறைவான பொட்டாசியத்தை எடுப்பது, அதிகளவு மது அருந்துவது, போதுமான உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது மற்றும் மன அழுத்தம் போன்றவை. உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் கொண்டவர்கள் ஒருசில உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம் தேதி உலக உயர் இரத்த அழுத்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த உலக உயர் இரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள கோடையில் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில உணவுகளைக் காண்போம் வாருங்கள்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் உள்ளது. இச்சத்துக்கள் அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் வாழைப்பழம் செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்பி வைத்திருக்கிறது.

மாதுளை
மாதுளை இரத்த நாளங்களின் அளவைக் கட்டுப்படுத்தும் ஒரு நொதியான ACE அளவைக் குறைக்க உதவுகிறது. எனவே உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க மாதுளையை தினமும் சிறிது உட்கொள்வது நல்லது.

மாம்பழம்
கோடையில் அதிகம் கிடைக்கும் பழங்களுள் ஒன்று தான் மாம்பழம். மாம்பழத்தில் நார்ச்சத்து, பீட்டா-கரோட்டின், பொட்டாசியம் போன்ற இரத்த அழுத்தத்தைக் குறைக்க தேவையான சத்துக்கள் உள்ளன. அதற்கு மாம்பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது மாம்பழ மில்க் ஷேக், ஸ்மூத்தி என்று எப்படி வேண்டுமானாலும் உட்கொள்ளலாம்.

ஸ்ட்ராபெர்ரி
இனிப்பு மற்றும் புளிப்பு கலந்த சுவையைக் கொண்ட ஸ்ட்ராபெர்ரியில் அந்தோசையனின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை உள்ளன. ஆகவே இப்பழம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

பசலைக்கீரை, பீட்ரூட் மற்றும் இஞ்சி
பீட்ரூட், பசலைக்கீரை, இஞ்சி போன்ற காய்கறிகளில் நைட்ரேட்டுகள் உள்ளன. இது உடலுக்குள் சென்று செரிமானத்திற்கு பின் நைட்ரிக் ஆக்ஸைடாக மாறும். இந்த நைட்ரிக் ஆக்ஸைடு இரத்த நாளங்களை தளர்த்தி விரிவுபடுத்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. ஆகவே உயர் இரத்த அழுத்த +நோயாளிகள் இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுவது நல்லது.

தயிர்
தயிரில் கால்சியம் மட்டுமின்றி, பொட்டாசியமும் அதிகம் உள்ளது. இது உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கிறது. இதில் நல்ல பாக்டீரியாக்களும் அதிகம் உள்ளதால், இது மன அழுத்தம் மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அதற்கு கோடையில் தயிரை மோர், ஸ்மூத்தி, லஸ்ஸி மற்றும் ரெய்தா போன்ற எந்த வடிவங்களிலும் உட்கொள்ளலாம்.

இளநீர்
இளநீர் உடலை குளிர்ச்சியுடனும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, ஒரு இயற்கையான டையூரிக்காகவும் செயல்படுகிறது. மேலும் இளநீர் உடலில் எலக்ட்ரோலைட்டுக்களை சமநிலையில் பராமரிப்பதோடு, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே கோடையில் தவறாமல் இளநீரை அதிகம் குடியுங்கள்.