Just In
- 36 min ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- 1 hr ago சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- 2 hrs ago வீட்டில் பல்லி இருப்பது நல்லதா? கெட்டதா? ஜோதிடம் சொல்வது என்ன?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்க சிறந்த பாலியல் துணையாக இருப்பார்களாம்... இவங்க வாழ்க்கைத்துணையா கிடைக்க அதிர்ஷ்டம் வேணும்!
Don't Miss
- Movies இமான் வருவதற்குள்.. இன்னைக்கும் சிவகார்த்திகேயனை விடாமல் விரட்டிய ப்ளூ சட்டை மாறன்!
- News பலாப்பழம் ஏன் கருப்பா இருக்கு.. வேலூரில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குவாதம் செய்த மன்சூர் அலிகான்
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எச்சரிக்கை... இந்த காயில் புற்றுநோய் உண்டாக்கும் பொருள் இருக்குதாம்... அதை கண்டறியும் அற்புத வழி இதோ!
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில் ஒரு சோதனை வீடியோவைப் பகிர்ந்தது. அதில் நாம் சாப்பிடும் பச்சை நிற காய்கறிகள் மற்றும் கீரைகள் கலப்படம் உள்ளதா இல்லையா என்பதை எவ்வாறு சோதிக்கலாம் என உள்ளது
ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் குறித்து பேசும் போது, நமக்கு எழும் முதல் கேள்வி, நாம் தற்போது சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமானது தானா என்பது தான்? நாம் சாப்பிடும் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆரோக்கியமானதாக இருந்தால் தான், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். தற்போது நாம் சாப்பிடும் பல உணவுப் பொருட்கள் கலப்படமிக்கதாக உள்ளது. குறிப்பாக நாம் சாப்பிடும் பச்சை நிற காய்கறிகளில் கூட கலப்படம் உள்ளது என்பது தெரியுமா? ஆம், காய்கறிகள் நன்கு பச்சை நிறத்தில் இருப்பதற்காக மலாக்கிட் பச்சை என்னும் கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது.
இப்படி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்கறிகளில் கலப்படம் இருந்தால், நாம் எப்படி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும். இதற்கு என்ன தான் தீர்வு என்று நீங்கள் கேட்கலாம். நம்மால் சந்தைகளில் விற்கப்படும் கலப்படமிக்க காய்கறிகளை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் நம்மால் கலப்படமிக்க காய்கறிகளை சாப்பிடாமல் இருக்க முடியும். அதற்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) சமீபத்தில் ஒரு சோதனை வீடியோவைப் பகிர்ந்தது. அதில் நாம் சாப்பிடும் பச்சை நிற காய்கறிகள் மற்றும் கீரைகள் கலப்படம் உள்ளதா இல்லையா என்பதை எவ்வாறு சோதிக்கலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
Detecting malachite green adulteration in green vegetable with liquid paraffin.#DetectingFoodAdulterants_1@MIB_India@PIB_India @mygovindia @MoHFW_INDIA pic.twitter.com/knomeEnbmA
— FSSAI (@fssaiindia) August 18, 2021
மலாக்கிட் பச்சை என்றால் என்ன?
மிகவும் எளிமையாக கூற வேண்டுமானால், மலாக்கிட் பச்சை ஒரு கரிம கலவை ஆகும். இது நிறமளிப்பதற்காக மற்றும் மீன் வளர்ப்பில் நுண்ணுயிர் எதிர்ப்பியாகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அறிக்கைகளின் படி, 1877 -ல் ஹெர்மன் ஃபிஷர் என்பவரால் சல்ப்யூரிக் அமிலம் முன்னிலையில் 1: 2 என்ற மூலக்கூறு விகிதத்தில் பென்சால்டிஹைட் மற்றும் டைமெதிலானிலின் ஒடுக்கம் மூலம் தயாரிக்கப்பட்டது.
மலாக்கிட் பச்சை மற்றும் உணவு கட்டுப்பாடு
2006 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடல் உணவுகளில் மலாக்கிட் பச்சை பயன்படுத்துவதைக் கண்டறிந்தது. அப்போது இருந்து தான் மீன் வளர்ப்பில் அதன் பயன்பாடு தடை செய்யப்பட்டது.
கலப்பட பொருள்
உணவு ஆராய்ச்சியாளர்களின் படி, மலாக்கிட் பச்சை மிகவும் கொடிய புற்றுநோயை உண்டாக்கக்கூடியது மற்றும் இது இந்திய உணவுத் தொழிலில் இன்னும் நடைமுறையில் உள்ளது. இது பெரும்பாலும் பச்சை மிளகாய், வெள்ளரிக்காய், பட்டாணி, வெண்டைக்காய் மற்றும் கீரைகளில் பசுமையாக இருப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த கெமிக்கலின் ஆபத்தான பக்கவிளைவுகளால் FSSAI சமீபத்தில் ஒரு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. அந்த வீடியோவானது பச்சை நிற காய்கறிகளில் மலாக்கிட் பச்சை இருக்கிறதா இல்லையா என்பதை அறியும் ஒரு எளிய வழியாகும்.
சோதிக்கும் முறை
* திரவ பாராஃபினில் ஒரு பஞ்சுருண்டையை நனைக்க வேண்டும்.
* பின் அந்த பஞ்சுருண்டையால் வெண்டைக்காயின் ஒரு சிறு பகுதியைத் தேய்க்க வேண்டும்.
* அப்படி தேய்க்கும் போது, பஞ்சுருண்டை பச்சை நிறமாக மாறவில்லை என்றால், வெண்டைக்காய் கலப்படமற்றது.
* ஒருவேளை பச்சை நிறமாக மாறினால், வெண்டைக்காய் கலப்படமிக்கது.
மலாக்கிட் பச்சையின் பக்கவிளைவுகள்
நிபுணர்களின் கூற்றுப்படி, மலாக்கிட் பச்சை என்னும் சாயத்தின் நச்சுத்தன்மையானது, அதன் வெளிப்பாடு நேரம், வெப்பநிலை மற்றும் செறிவு ஆகியவற்றால் அதிகரிக்கிறது. இந்த கெமிக்கல் கலந்த காய்கறிகளை ஒருவர் உட்கொள்ளும் போது, அது புற்றுநோய், மரபணு பிறழ்வு, குரோமோசோமல் எலும்பு முறிவுகள் மற்றும் சுவாச நச்சுத்தன்மையைக் கூட ஏற்படுத்தக்கூடும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.