Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
வாய் முதல் வாயு வரை அனைத்திற்கும் தீர்வளிக்கும் காட்டாமணக்கு!
பல் வலி, இரத்தம் கசிதல், எச்சில் மற்றும் தாய்பால் சுரக்க உதவும் காட்டாமணக்கு!
காட்டாமணக்கு என்பது ஒரு இலை தாவரம். இது கருஞ்சிவப்பு நிற துளிர்கள் மற்றும் சிவப்பு நிறத்தில் மலர்கள் கொண்டிருக்கும்.
இதன் இலைகள் கைகளை போல இருக்கும். காட்டாமணக்கு குச்சி, பட்டை, வேர், இலை, அதிலிருந்து எடுக்கப்படும் பால் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை தான்.
இது எச்சில், தாய்பால் சுரக்க செய்வதில் இருந்து, வயிறு மற்றும் பல் சார்ந்த அனைத்து விதமான கோளாறுகளுக்கும் சிறந்த இயற்கை நிவாரணியாக திகழ்ந்து வருகிறது...

தாய் பால், எச்சில்!
எச்சில் நன்கு சுரந்தால் தான் செரிமானம் சிறக்கும். தாய்ப்பால் நன்கு சுரந்தால் தான் பிள்ளை ஆரோக்கியம் சிறக்கும். இந்த இரண்டையும் தரவல்லது காட்டாமணக்கு இலை. மேலும், இது பல்லின் இரத்த கசிவை நிறுத்தவும் உதவுகிறது.

குச்சி!
காட்டாமணக்கு செய்தின் இளம் குச்சியை கொண்டு பல் துலக்கினால் பல்வலி, ஆடுதல், இரத்தம் கசிதல், என பல் சார்ந்த எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.

வேர்!
காட்டாமணக்கின் வேரின் பட்டையை நன்கு அரைத்து சிறிதளவு பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை, காமாலை, வீக்கம், வயிறு கட்டி, வயிறு உப்பசம், வயிற்று கோளாறுகள் போன்றவை குணமாகும்.

பால்!
காட்டாமணக்கு பால் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும். அந்த பாலை துணியில் நனைத்து ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படும் இடத்தில் வைத்தால் இரத்த கசிவு நிற்கும்.

தேங்காய் எண்ணெய்!
காட்டாமணக்கு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயும் சேர்த்து கலந்து உடலில் சொறி சிரங்கு இருக்கும் இடத்தில் பூசி வந்தால் சரும பிரச்சனை குணமாகும்.

இலை
காட்டாமணக்கு இலையுடன் விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி இருக்கும் இடத்தில் கட்டி வைத்தால் கட்டிகள் கரையும். கட்டி இருக்கும் இடத்தில் இருக்கும் வலியும் குறையும்.



Click it and Unblock the Notifications











