Latest Updates
-
1/4 கப் வேர்க்கடலை இருந்தா தேங்காய் சேர்க்காத இந்த சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முள்ளங்கியை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க
வாய் முதல் வாயு வரை அனைத்திற்கும் தீர்வளிக்கும் காட்டாமணக்கு!
பல் வலி, இரத்தம் கசிதல், எச்சில் மற்றும் தாய்பால் சுரக்க உதவும் காட்டாமணக்கு!
காட்டாமணக்கு என்பது ஒரு இலை தாவரம். இது கருஞ்சிவப்பு நிற துளிர்கள் மற்றும் சிவப்பு நிறத்தில் மலர்கள் கொண்டிருக்கும்.
இதன் இலைகள் கைகளை போல இருக்கும். காட்டாமணக்கு குச்சி, பட்டை, வேர், இலை, அதிலிருந்து எடுக்கப்படும் பால் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை தான்.
இது எச்சில், தாய்பால் சுரக்க செய்வதில் இருந்து, வயிறு மற்றும் பல் சார்ந்த அனைத்து விதமான கோளாறுகளுக்கும் சிறந்த இயற்கை நிவாரணியாக திகழ்ந்து வருகிறது...

தாய் பால், எச்சில்!
எச்சில் நன்கு சுரந்தால் தான் செரிமானம் சிறக்கும். தாய்ப்பால் நன்கு சுரந்தால் தான் பிள்ளை ஆரோக்கியம் சிறக்கும். இந்த இரண்டையும் தரவல்லது காட்டாமணக்கு இலை. மேலும், இது பல்லின் இரத்த கசிவை நிறுத்தவும் உதவுகிறது.

குச்சி!
காட்டாமணக்கு செய்தின் இளம் குச்சியை கொண்டு பல் துலக்கினால் பல்வலி, ஆடுதல், இரத்தம் கசிதல், என பல் சார்ந்த எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.

வேர்!
காட்டாமணக்கின் வேரின் பட்டையை நன்கு அரைத்து சிறிதளவு பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை, காமாலை, வீக்கம், வயிறு கட்டி, வயிறு உப்பசம், வயிற்று கோளாறுகள் போன்றவை குணமாகும்.

பால்!
காட்டாமணக்கு பால் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும். அந்த பாலை துணியில் நனைத்து ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படும் இடத்தில் வைத்தால் இரத்த கசிவு நிற்கும்.

தேங்காய் எண்ணெய்!
காட்டாமணக்கு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயும் சேர்த்து கலந்து உடலில் சொறி சிரங்கு இருக்கும் இடத்தில் பூசி வந்தால் சரும பிரச்சனை குணமாகும்.

இலை
காட்டாமணக்கு இலையுடன் விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி இருக்கும் இடத்தில் கட்டி வைத்தால் கட்டிகள் கரையும். கட்டி இருக்கும் இடத்தில் இருக்கும் வலியும் குறையும்.



Click it and Unblock the Notifications