Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
வாய் முதல் வாயு வரை அனைத்திற்கும் தீர்வளிக்கும் காட்டாமணக்கு!
பல் வலி, இரத்தம் கசிதல், எச்சில் மற்றும் தாய்பால் சுரக்க உதவும் காட்டாமணக்கு!
காட்டாமணக்கு என்பது ஒரு இலை தாவரம். இது கருஞ்சிவப்பு நிற துளிர்கள் மற்றும் சிவப்பு நிறத்தில் மலர்கள் கொண்டிருக்கும்.
இதன் இலைகள் கைகளை போல இருக்கும். காட்டாமணக்கு குச்சி, பட்டை, வேர், இலை, அதிலிருந்து எடுக்கப்படும் பால் என அனைத்தும் மருத்துவ குணங்கள் கொண்டவை தான்.
இது எச்சில், தாய்பால் சுரக்க செய்வதில் இருந்து, வயிறு மற்றும் பல் சார்ந்த அனைத்து விதமான கோளாறுகளுக்கும் சிறந்த இயற்கை நிவாரணியாக திகழ்ந்து வருகிறது...

தாய் பால், எச்சில்!
எச்சில் நன்கு சுரந்தால் தான் செரிமானம் சிறக்கும். தாய்ப்பால் நன்கு சுரந்தால் தான் பிள்ளை ஆரோக்கியம் சிறக்கும். இந்த இரண்டையும் தரவல்லது காட்டாமணக்கு இலை. மேலும், இது பல்லின் இரத்த கசிவை நிறுத்தவும் உதவுகிறது.

குச்சி!
காட்டாமணக்கு செய்தின் இளம் குச்சியை கொண்டு பல் துலக்கினால் பல்வலி, ஆடுதல், இரத்தம் கசிதல், என பல் சார்ந்த எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம்.

வேர்!
காட்டாமணக்கின் வேரின் பட்டையை நன்கு அரைத்து சிறிதளவு பாலில் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை, காமாலை, வீக்கம், வயிறு கட்டி, வயிறு உப்பசம், வயிற்று கோளாறுகள் போன்றவை குணமாகும்.

பால்!
காட்டாமணக்கு பால் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் குணமாகும். அந்த பாலை துணியில் நனைத்து ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படும் இடத்தில் வைத்தால் இரத்த கசிவு நிற்கும்.

தேங்காய் எண்ணெய்!
காட்டாமணக்கு எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயும் சேர்த்து கலந்து உடலில் சொறி சிரங்கு இருக்கும் இடத்தில் பூசி வந்தால் சரும பிரச்சனை குணமாகும்.

இலை
காட்டாமணக்கு இலையுடன் விளக்கெண்ணெயில் வதக்கி கட்டி இருக்கும் இடத்தில் கட்டி வைத்தால் கட்டிகள் கரையும். கட்டி இருக்கும் இடத்தில் இருக்கும் வலியும் குறையும்.



Click it and Unblock the Notifications