Latest Updates
-
லிவ்-இன் உறவு முறிந்தால் பலாத்காரமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
சனி-புதனால் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: மே மாதம் இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
1 கப் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஒருடைம் இந்தோனேஷியன் ஸ்டைல் ப்ரைடு ரைஸ் ட்ரை பண்ணுங்க.. -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு சொல்லும் உண்மை இதுதான்! -
உங்களுக்கு புற்றுநோய் வராம தடுக்கணுமா? இந்த பொருட்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கோங்க -
Mothers Day 2026: 50 வயதை எட்டிய ஒவ்வொரு தாய்மாரும் தினமும் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்! -
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆசீர்வாதத்தால் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் -
May 2026 Money Horoscope: மே மாதத்தில் பண மழையில் நனையபோவது இந்த 4 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
முள்ளங்கியை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
வெயில் கொடுமையா? இந்த 4 செடிகள் இருந்தா போதும்… வீடே ஏசி போல ஜில்லுனு இருக்கும்!
இரத்த சோகை இருக்கா? அப்ப கேழ்வரகு தோசை சாப்பிடுங்க!
கேழ்வரகின் பயன்கள் பற்றி கொடுக்கப்பட்டுள்ளது
நமது ஊர்களில் கிடைக்கும் மிகவும் சத்தான உணவுகளை தவிர்த்துவிட்டு நாம் சந்தைகளில் கிடைக்கும் சத்து பானங்களையும் மருந்துகளையும் வாங்கி சாப்பிடுகிறோம். கேழ்வரகு ஒரு சத்தான உணவாகும். இதில் கால்சியம், இரும்புசத்துக்கள் அதிகம் உள்ளது. சொல்லப்போனால் பாலில் உள்ள கால்சியத்தின் அளவை விட இதில் அதிகமாக உள்ளது. இந்த கேழ்வரகின் பயன்களை பற்றி இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

குடற்புண்
குடற்புண் உள்ளவர்கள் தினமும் கேழ்வரகை கூழ் செய்து சாப்பிட்டால் குடற் புண் குணமாகும். குடலுக்கு வலிமை அளிக்கும். உடல் உஷ்ணத்தை சமநிலையில் பாதுகாக்க உதவுகிறது.

மாதவிடாய்
மாதவிடாய் பிரச்சனை கருப்பைக்கு கெடுதலை உண்டாக்கும். இந்த கோளாறு சரியாக பெண்கள் இந்த கேழ்வரகு கூழை சாப்பிட்டுவர சரியாகும்.

உடல் எடை குறைய
உடல் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் கேழ்வரகு கூழை சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலை தடுக்கிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு
சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை, அடை, புட்டு செய்து சாப்பிடலாம். கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிட கூடாது. இதை கூழாக செய்து குடித்தால் கொலஸ்டிரால் குறைந்து விடும்.

இரத்த சோகை
கேழ்வரகில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இது இரத்தசோகை நோய் வராமல் தடுக்கிறது இதில் அதிகளவு கால்சியம், இரும்பு சத்து உள்ளது. கர்ப்பிணி பெண்கள் தினமும் இதனை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.



Click it and Unblock the Notifications