Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
இந்த உணவுகளை சாப்பிட்டா தூக்கம் சொக்கும் என்பது தெரியுமா?
என்ன தான் இரவில் நன்கு தூங்கி எழுந்தாலும், வயிற்றை நிரப்பிய பின் வேலையில் ஈடுபடும் போது தூக்கம் வருகிறதா? அதற்கு காரணம் நாம் சாப்பிட்ட உணவுகள் தான். அதற்காக அனைத்து உணவுகளையும் உட்கொண்ட பின் தூக்கம் வராது. ஒரு குறிப்பிட்ட உணவுகள் மற்றும் அந்த உணவுகளில் உள்ள உட்பொருட்கள் தான் சோம்பலை அதிகரித்து தூக்கத்தை வரவழைக்கிறது.

இங்கு சோம்பலை அதிகரித்து தூக்கத்தை வரவழைக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை அலுவலக நேரத்தில் அல்லது உடற்பயிற்சி செய்யும் முன் சாப்பிடாதீர்கள்.

சாதம்
சாதத்தில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாக உள்ளது. இதனால் தான் மதிய வேளையில் உணவு உட்கொண்ட பின் பலருக்கு தூக்கம் சொக்குகிறது.

வெள்ளை பிரட்
வெள்ளை பிரட் கூட சோம்பலை உண்டாக்கும். இதில் கார்போஹைட்ரேட்டுடன், கிளைசீமிக் இன்டெக்ஸ் அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் உள்ளதால், எளிதில் செரிமானமாகாமல், உடலுக்கு போதிய ஆற்றல் கிடைக்காமல் சோம்பல் அதிகரித்து, தூக்க உணர்வை பெற நேரிடுகிறது.

ஹம்மஸ்
கொண்டைக்கடலை கொண்டு தயாரிக்கப்படும் ஹம்மஸில், தூக்கத்தை வரவழைக்கும் ட்ரிப்டோபேன் உள்ளது. எனவே தான் கொண்டைக்கடலை அல்லது ஹம்மஸை சாப்பிட்டால் தூக்கம் வருகிறது.

மாட்டிறைச்சி
மாட்டிறைச்சியில் கொழுப்புக்கள் அதிகமாக உள்ளது. இதனை செரிப்பதற்கு அதிகப்படியான ஆற்றல் வேண்டும். எனவே இதனை உட்கொண்டால், அதனை செரிக்க உடலின் அனைத்து ஆற்றலும் பயன்படுத்தப்பட்டு, உடல் சோம்பலாகி தூக்கம் வருவது போன்ற உணர்வை பெறக்கூடும்.

இனிப்புகள்
இனிப்பு பலகாரங்களை அதிகம் சாப்பிட்டால், உடலில் இன்சுலின் வெளியிடப்பட்டு, மூளையில் செரடோனின் என்னும் தூக்க ஹார்மோனின் வெளியீட்டை அதிகரித்து, தூக்கத்தை வரவழைக்கும். எனவே இனிப்புக்களை அலுவலக நேரம் மற்றும் முக்கிய வேலைகளின் போது சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.



Click it and Unblock the Notifications