Just In
- 1 hr ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 1 hr ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 3 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 4 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால் மூளையில் என்ன நடக்கும்?
எண்ணெய் உணவுகளை சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் என்பது உங்களுக்கு தெரிந்தாலும் உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லையா? ஃபிங்கர் சிப்ஸ், பஜ்ஜி, சமோசா என எண்ணெயில் மூழ்கும் பதார்த்தங்களைக் கண்டாலே சாப்பிட தோன்றுகிறதா? அப்படியெனில் இதற்கு மூளையில் உண்டாகும் மாற்றங்கள்தான் காரணம்.
வெண்ணெய், சீஸ் மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடுவதால் , எதை சாப்பிட வேண்டும் சாப்பிடக் கூடாது என மூளையில் குழப்பங்கள் உண்டாகுமாம்.
நமது மூளைதான் எல்லா நாடி நரம்புகளையும் கட்டுப்படுத்தி, ஆளுகிறது. ஆனால் நிறைவுறும் கொழுப்பு உணவுகளை சாப்பிட்டால் மூளையிலிருக்கும் ஹைபோதலாமஸ் பாதிக்கிறது. இது பசியை மேலும் தூண்டி நிறைய சாப்பிட வைக்கிறது. இதனால் உடல் பருமனாகிறது.
பொதுவாக கொழுப்பு நிறைந்த எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிட்டால் கல்லீரலில் எவ்வாறு கொழுப்பு ஜீரனித்து, அதிகப்படியான கொழுப்பு உடல் பருமனை தருகிறது என தெரிய வந்ததோ, அது போல், மூளையில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என இத்தாலியில் நேப்லஸ் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
அவாகாடோ, பாதாம், மீன், ஆலிவ் எண்ணெய் போன்ற நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நல்ல மாற்றங்களை மூளையில் உண்டு பண்ணுகின்றன. பசியை கட்டுப்படுத்தி, கொழுப்புகளை குறைக்கின்றன.
ஆனால் எண்ணெய் பதார்த்தங்கள் மூளையில் பாதிப்பை, சிதைவை உண்டாக்கி, பசியை கட்டுப்படுத்த தவறவிடுகின்றன. இதனால்தான் அதிகம் சாப்பிடும்படி, உங்கள் உள்ளுணர்வு தூண்டப்படுகிறது என பல்கலைக் கழகத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் மரியானா கூறுகிறார்.
மேலும் கொழுப்பு உணவுகள் மூளையில் உண்டாகும் மாற்றங்கள் மிகவும் ஆச்சரியப்படும்படி உள்ளது. இதன் மற்ற செயல்திறன்கள் சாதரணமாக இருந்தாலும், உணவுக் கட்டுப்பாட்டில் பாதிப்புகளையே மூளை ஏற்படுத்துகின்றது.
ஆகவே உங்கள் டயட்டை தேர்ந்தெடுக்கும்போது, ஆரோக்கியமானதை மட்டுமே தேர்ந்தெடுங்கள். இதனால் உடல் பருமன் மற்றும் மற்ற நோய்களான சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, இதய நோய்களை வராமல் தடுக்கலாம்.
இந்த ஆய்வுக் கட்டுரை ஜர்னல் ஃப்ரண்டியர்ஸ் இன் செல்லுலார் நியுரோசயின்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.