Latest Updates
-
300 ஆண்டுக்கு சனி ஜெயந்தி நாளில் உருவான ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை கோடீஸ்வரராக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்பெஷல் குண்டூர் சிக்கன் மசாலா - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுதாம் -
வார ராசிபலன் (17 May 2026-23 May 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிட்டும்.. -
சிக்கன் வாங்குனா.. ஒருடைம் இப்படி ஊறுகாய் செய்யுங்க.. 2 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வரதட்சணை கொடுமையால் ஒரு உயிர் பலி! நொய்டா - போபால் சம்பவம் சொல்லும் அதிர்ச்சி தரும் உண்மை என்ன? -
தலைமுடி உதிர்வை நிறுத்தி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கணுமா? அப்ப இந்த வெங்காய ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
கணவர் மீது போலீசில் புகார் அளித்த செலின் ஜெட்லி! என்.ஆர்.ஐ திருமணங்களில் ஒளிந்திருக்கும் அந்த அதிர்ச்சி உண்மை என்ன? -
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பொலிவான முகத்தைப் பெற வேப்பிலையைப் பயன்படுத்துவது எப்படி?
வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பொருள் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். இதன் காரணமாகத் தான் பெரும்பாலான சரும பராமரிப்பு பொருட்களில் வேப்பிலை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அப்படி வேப்பிலை சேர்க்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, அந்த வேப்பிலையைக் கொண்டு நேரடியாக முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், எவ்வளவு நன்மை கிடைக்கும்.
முக்கியமாக வேப்பிலையைக் கொண்டு வாரம் ஒருமுறை மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம். இங்கு பொலிவான முகத்தைப் பெற உதவும் வேப்பிலை ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து விடுமுறை நாட்களில் மேற்கொண்டு அழகை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

வேப்பிலை மற்றும் சந்தனம்
வேப்பிலை பொடியுடன் சந்தனப் பொடி சேர்த்து, ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி வர, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்களின் தழும்புகள் போன்றவை நீங்கி, முகம் சுத்தமாகும்.

வேப்பிலை மற்றும் கடலை மாவு
இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்ற ஒன்று. அதற்கு வேப்பிலை பொடியுடன் கடலை மாவை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகப்பரு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்கும்.

வேப்பிலை மற்றும் தேன்
வேப்பிலை சிறிது எடுத்து அரைத்து, அத்துடன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகத்தில் உள்ள சோர்வு நீங்கி, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

வேப்பிலை மற்றும் பப்பாளி
வேப்பிலை பொடியில் பப்பாளியை மசித்து சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தின் பொலிவு மேம்பட்டிருப்பதைக் காணலாம்.

வேப்பிலை மற்றும் தக்காளி
வேப்பிலை பொடியை தக்காளி சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகத்தில் உள்ள பிம்பிள் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வேப்பிலை மற்றும் முல்தானி மெட்டி
இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை உறிஞ்சி வெளியேற்றும். அதற்கு வேப்பிலையை அரைத்து, அத்துடன் முல்தானி மெட்டி பொடியை சேர்த்து, அத்துடன் சிறிது தேங்காய் தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.



Click it and Unblock the Notifications